Tuesday, January 11, 2011

புதுப்பொழிவு பெற சில யோசனைகள்.. [2]


Photo, originally uploaded by nvanspronsen.
இந்த பதிவு போன பதிவோட தொடர்ச்சி.. முதல் பகுதிய படிச்சிட்டு இந்த பதிவை படிங்க.. இதன் முதல் பகுதிய படிக்க இங்க கிளிக் செய்யுங்க..

னி பனிப் பொழியும் இப்பருவத்தில் புதுப்பொழிவு பெற, புத்தாண்டு உறுதிமொழிகளுக்கான மேலும் சில யோசனைகள்:

16. ங்களுக்கு நெருக்கமானவங்களுக்கும், உங்கள நெருக்கமானவனா(ளா) நெனைக்குறவங்களுக்கும் அப்பப்ப இன்ப அதிர்ச்சி குடுங்க.. அது திடீர் விசிட், எதிர்பாரா நேரத்தில போன் கால், பூங்கொத்து, பரிசு பொருள், அவங்க மேல உங்களுக்கு இருக்குற பிரியத்தை வெளிப்படுத்துற எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகள், அவங்க உங்களுக்கு எவ்ளோ முக்கியமானவங்கன்னு அப்பப்ப அவங்களுக்கு வெளிப்படுத்துறது, வாழ்த்து மடல் இப்படி எதுவா வேணாலும் இருக்கலாம்.. சின்னதோ பெரிசோ, எதிர்பாராத சந்தோசத்தயும் மகிழ்ச்சியயும் அப்பப்ப அவங்களுக்கு குடுக்குற பழக்கத்த ஏற்படுத்திகோங்க.. உறவுகள் சந்தோசமா நீடித்து நிலைக்க அது ரொம்ப உதவும்..

17. வாழ்க்கையில நீங்க சாதிக்கணும்னு நெனைக்குற விஷயத்துக்காகவோ இல்ல நீங்க ரொம்ப பிரியப்படுற விஷயத்த செய்யறதுக்கோ தினமும் நேரம் ஒதுக்குங்க.. அது அரை மணியோ, ஒரு மணியோ இல்ல ரெண்டு மணி நேரமோ.. உங்க சௌகர்யம்.. ஆனா நேரம் ஒதுக்குங்க.. அதுக்காக இருவத்தி நாலு மணி நேரத்தையும் உங்களுக்காக மட்டுமே ஒதுக்கிக்காதீங்க.. அப்பப்ப மத்தவங்களுக்காகவும் அதே சமயத்துல உங்களுக்காகவும் கொஞ்ச நேரம் ஒதுக்க தவறாதீங்க..

18. த்தவங்க குறைகள மட்டுமே சுட்டிக் காட்டாதீங்க.. மட்டம் தட்டி மட்டுமே பேசறவங்கள பெரும்பாலும் மத்தவங்களுக்கு பிடிக்காம போக வாய்ப்பிருக்கு.. அதுக்காக எப்பவுமே முதுகுல தட்டிக் கொடுத்தே பேசணும்ன்னு நா சொல்லல.. மத்தவங்க குறைகள பத்தி பேசறதுக்கு முன்னாடியும் பின்னாடியும் அத விட இரண்டு மடங்கு அவங்ககிட்ட இருக்குற நல்ல விஷயங்கள பத்தி பேசி பாராட்ட மறக்காதீங்க..

19. ஹீரோக்கள் படத்துல தான் வலம் வரணும்னு இல்ல. நீங்களும் ஹீரோவா இருக்க ட்ரை பண்ணுங்க. சிகரெட்ட தூக்கிப் போட்டு பிடிக்குற, வலிப்பு வந்த மாதிரி கைய சிலுப்பிகிட்டு தல முடிய கோதி விடுற ஹீரோயிஸம் பத்தி நா பேசல. நாலு பேத்துக்கு நல்லது பண்ணினா நீங்களும் ஈஸியா ஹீரோ ஆகலாம். அப்படி நாலு பேத்துக்கு நல்லது செய்ய முடியாட்டி எதுவுமே செய்யாம ஜீரோவாவே இருங்க.. ஆனா கெட்டது செஞ்சு வில்லனா மட்டும் ஆகாதீங்க..

20. நீங்க மிஸ்டர்/மிசஸ்.பர்பெக்டா இருக்கலாம். அதுக்காக உங்கள சுத்தி இருக்கவங்களும் அப்படியே இருக்கணும்னு எதிர்பாக்காதீங்க.. மத்தவங்கள அவங்க நிறை குறைகளோட எதுக்குறது தான் வாழ்க்கை.. இன்னொருத்தவங்க உங்களுக்காக அட்ஜஸ்ட் பண்ணி போகணும்னு அவங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடி அவங்களுக்காக நீங்க கொஞ்சமாச்சும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு அப்பறமா சொல்லுங்க.. எல்லாத்தையும் நீங்களே இழுத்துப் போட்டு செய்ய முடியாது. அதே நேரத்துல மத்தவங்க அத உங்களுக்காக செய்யறப்ப அவங்க ஸ்டைல் நிச்சயமா அதுல கலந்து தான் இருக்கும். நீங்க நெனைக்குற மாதிரியே பர்பெக்டா இல்லன்னு அவங்கள படுத்தி எடுக்காதீங்க..

21. ல்லாத்துக்கும் 'ஆமாஞ்சாமி'ன்னு தலையாட்டாம, 'இல்லை'.. 'எனக்கு விருப்பமில்ல'.. 'வேண்டாம்'.. 'பிடிக்கல'..ன்னு 'நோ' சொல்லப் பழகிகோங்க.. மத்தவங்க சொல்றதுக்கு எல்லா நேரத்துலயும் 'எஸ்'ன்னு சொல்லி பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினா, 'நல்லவன்(ள்)'.. 'வல்லவன்(ள்)'...ன்னு பாராட்டுவானுங்க.. ஆனா மாடு கணக்குல சேத்துடுவாங்க.. அப்படி இருந்தீங்கன்னா மனுஷனாவோ மனுஷியாவோ மதிக்காம உங்கள அவங்க சுயநலத்துக்கு தான் உபயோகப்படுத்த பாப்பாங்க.. மத்தவங்களுக்கு "நோ"ன்னு சொல்றது தப்பான காரியம் ஒண்ணும் இல்ல.. நீங்க எதுக்காக "நோ" சொல்றீங்கன்னு விளக்கம் குடுத்து நோ சொல்லுங்க.. உங்க விருப்பதுக்கு மாறா நீங்க செயல்படனும்னு எல்லா நேரத்திலேயும் அவசியமெல்லாம் இல்ல.. முடிஞ்ச வரைக்கும் மத்தவங்கள அனுசரிச்சு போங்க, ஆனா அதுக்காக உங்களோட எமொஷனல் வீக்னசை மத்தவங்க அவங்க ஆதாயத்துக்கும் சுயநலத்துக்கும் உபயோகிக்க இடம் குடுக்காதீங்க..

22. டவுள கும்பிடுங்க.. வேணாம்னு சொல்லல.. ஆனா மத்த உயிர்கள் மேல அன்பு காட்டுறது, இரக்கம் காட்டுறது முதலான விஷயங்கள் கடவுளுக்கான குணாதிசயங்கள் அப்படின்னு ஒதுக்காம, நீங்களும் கடவுளா மத்தவங்களுக்கு இருக்க முயற்சி பண்ணுங்க.. உங்கள நாலு பேரு கடவுள்னு சொன்னா அது நல்ல விஷயம் தான.. :-)

23. னிதர்கள சம்பாதிங்க.. பணத்த செலவு பண்ணுங்க (அதுக்காக சேமிப்பு இல்லாம ஒரேடியா செலவு பண்ணிட்டு பின்னாடி முழிச்சிகிட்டு நிக்காதீங்க).. மனிதர்கள செலவு பண்ணி பணத்த சம்பாதிக்காதீங்க..

24. ல்ல நண்பர்களின் எண்ணிக்கைய அதிகரிக்கிறீங்களோ இல்லையோ அது குறையாம பாத்துக்கோங்க.. எதிரிகளின் எண்ணிக்கைய கண்டிப்பா குறைக்க முயற்சி பண்ணுங்க.. எதிரிகள போட்டு தள்ளுங்கன்னு சொல்லல.. சமாதானமா போக முயற்சி பண்ணுங்க..

25. வீட்ல உங்க கூட இருக்கவங்க சந்தோசமா இருக்காங்களான்னு அடிக்கடி கேக்குற பழக்கத்த ஏற்படுத்திக்கோங்க.. அவங்களுக்கு ஏதாச்சும் மனவருத்தம்னா நீங்களா முன்வந்து என்னான்னு கேட்டு அதை சரி பண்ணவோ இல்ல அவங்களுக்கு சூழ்நிலைய புரிய வைக்கவோ முயற்சி பண்ணுங்க.. வீட்ல இருக்கவங்க சந்தோசத்துக்காக பெரிசு பெரிசா எதுவும் பண்ணனும்னு அவசியம் இல்ல.. 'நீங்க சந்தோசமா இருக்கீங்களா..?'ன்னு அக்கறையா விசாரிக்கிறதும் அன்பா நாலு வார்த்தை பேசறதுமே அவங்கள மகிழ்ச்சிப்படுத்தும்னு தெரிஞ்சுகோங்க.. வீட்ல இருக்கவங்க கூட உங்க நேரத்துல ஒரு பகுதிய கண்டிப்பா தினமும் செலவழிங்க.. டெய்லி ஒரு வேளையாச்சும் குடும்பத்துல இருக்குற எல்லாரும் சேர்ந்து உக்காந்து சாப்பிடுங்க..

26. வீட்ல வயசானவங்க இருந்தா அவங்க கூட அப்பப்ப பேசி நேரத்த செலவிடுங்க.. உங்க வீட்ல வயசானவங்க இல்லாட்டி, நண்பர்கள் வீட்லயோ இல்ல வயதான சிலரை எதேச்சையா சந்திச்சு அவங்களோட பேச வாய்ப்பு கெடைக்குறப்பயோ அவங்க கூட பேசி நேரத்த செலவிடுங்க.. வயதானாலே ரொம்ப தனிமையா ஃபீல் பண்ணுவாங்க.. அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசறத விட அவங்களுக்கு சந்தோசம் தர்றது வேற எதுவும் கெடையாது..

27. வாழ்க்கையிலே மாற்றம் தவிர்க்க முடியாதது.. அத பழகிக்க ஒரு வழி, நிறைய புது மனிதர்கள சந்திக்கிறது, புது இடங்களுக்கு போயிட்டு வர்றது, ஆபீசுக்கோ காலேஜுக்கோ ஸ்கூலுக்கோ எப்பவும் போற வழில போகாம அப்பப்ப வேறு வழிகள்லயும் போறது, ஒரே மாதிரி ஒரு விஷயத்தை செய்யாம வேற மாதிரி செஞ்சு பாக்குறது, இப்படி புதுசு புதுசா நெறையா ட்ரை பண்ணுங்க.. புதுசா நாலு எடத்துக்கு போயிட்டு வாங்க.. புது அனுபவங்களுக்கு உங்களையே நீங்க தயார்படுத்தி பாருங்க.. அது வேறு சில சூழ்நிலைகளிலே ரொம்ப உதவும்..

28. மாற்றுத் திறனுடையவர்கள் இல்லதிலோ, ஆதரவற்றவர்கள் காப்பகங்களிலோ, முதியோர் இல்லத்திலோ உங்க பொறந்தநாள் கொண்டாட்டத்த வச்சிகோங்க.. உங்களோட பொறந்த நாள் பார்ட்டிக்காக நீங்க முடிவு பண்ணியிருக்க பணத்த அவங்களுக்கு உபயோகமான எதையாச்சும் வாங்கி கொடுக்குறதுல செலவழிங்க..

30. விரோதம் பாராட்டாதீங்க.. மத்தவங்க மேல வெறுப்ப வளர்த்துக்காதீங்க.. அது உங்க மனச மட்டுமில்ல உடல் நலத்தையும் கூட கெடுக்கும்.. டென்ஷன், பிளட் பிரஷர் இப்படி நெறைய வந்து உங்க உடல் நலத்த பாதிக்க வாய்ப்புண்டு.. விரோதிகளையோ பிடிக்காதவங்களையோ நிச்சயமா நண்பர்களா பாக்க முடியாது, ஆனா அவங்கள அந்நியர்களா பாக்க பழகிக்கலாம்.. அந்நியர்கள் மேல நாம் கோவப்பட மாட்டோம், விரோதம் பாராட்ட மாட்டோம், அவங்கள பாத்து வெறுப்படைய மாட்டோம்.. கண்டும் காணாம தான் போக முயற்சி பண்ணுவோம்.. அத நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க..

"ஹையோ இப்பவே கண்ண கட்டுதே.." அப்படின்னு நீங்க சொல்றது காதுல விழுது.. சரி சரி.. இதோட நிறுத்திக்கிறேன்.. இதுக்கு மேல சொன்னா என்னை அடிக்க வருவீங்கன்னு தெரியும்.. அட்வைஸு அம்புட்டுத்தான் (இப்போதைக்கு)..

புது வருஷம் யாருக்காகவோ பொறக்கல.. உங்களுக்காக தான் பொறந்திருக்கு.. அதனால ஜாலியா வருஷம் ஃபுல்லா கொண்டாடி கலக்குங்க.. ('இன்னும் போகலையா நீ'ன்னு யாரோ கேக்குறது காதுல விழுது)

இந்த வருடத்தின் ஒவ்வொரு நாளும் ண்மாவும் மகிழ்ச்சியாகவும் மலர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..! வாருங்கள்.. வாழ்க்கையை வாழ்ந்துப் பார்ப்போம்..!!

No comments:

Post a Comment