இன்கம் டாக்ஸ் ரிடர்ன்ஸ் பதிவு பண்ணி விட்டீர்களா..? பண்ணலேன்ன பண்ணிடுங்க.. இன்னிக்கு தான் கடைசி நாள்.. வழக்கம் போல இந்த தடவையும் கடைசி தேதியை நீட்டிக்க வாய்ப்புகள் அதிகமென்றாலும் கூட, 'இருக்கிற தலைவலி போதாதா..? இதை வேறு எதற்காக சுமக்க வேண்டுமெ'ன்று நேற்று நானும் எனது நண்பனும் பைக் எடுத்துக் கொண்டு நேராக இன்கம் டாக்ஸ் அலுவலகத்திற்கே சென்று பதிந்து கொண்டு வந்துவிட்டோம்.
'இதுக்கெல்லாம் ஒரு பதிவா..?' என்று கேட்காதீர்கள். இதை பதிப்பதற்கு காரணம், இன்கம் டாக்ஸ் ரிடர்ன்ஸ் பதிவு செய்வது எவ்வளவு எளிதானது என்பதை எடுத்து சொல்வதற்காக தான். பெரும்பாலான உங்களை போல தான் நானும் ஏதாவது ஒரு தரகர் மூலமாக நூறு ரூபாயோ அல்லது நூற்றைம்பது ரூபாயோ கொடுத்து முன்பெல்லாம் பதிவு செய்து கொண்டிருந்தேன். அப்படி நான் செய்வதற்கு காரணம் 'இதற்காகவெல்லாம் யார் மெனக்கெடுவார்கள்..?' என்பதான எண்ணம். 'அதுவும் இல்லாமல் அங்கே நிறைய ஃபார்மாலிட்டீஸ் இருக்கலாம்' என்று நான் தவறான எண்ணத்துடன் இருந்தது தான்.
இந்த முறை எனது நண்பனொருவன், "வா.. நாம் இந்த முறை நேரில் சென்று என்ன தான் இருக்கிறதென்று பார்க்கலாம்.. இதில் நமக்கு ஒரு முறையாவது அனுபவம் வேண்டாமா..?" என்பதாக சொல்ல, நானும் சரி போய் தான் பார்ப்போமே என்று முடிவெடுத்தேன்.
ITR ஃபார்மை நிரப்புவது மிகவும் எளிதான வேலை தான். அதை உங்களுடன் வேலை பார்க்கும் நண்பர்கள் உதவியுடன் ஒரு முறை நிரப்ப கற்றுக் கொண்டுவிட்டால் எளிது தான். அதை நிரப்புவதற்கு தேவையான எல்லாமே உங்களுடைய ஃபாரம் 16-ல் இருக்கும். இன்கம் டாக்ஸ் அலுவலகத்திற்கு சென்றதில் இருந்து அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் தான் இருக்கும் எங்களது ரிடான்ஸ்-ஐ பதிவு செய்ய எடுத்துக் கொண்ட நேரம். வரிசையில் நிற்பதற்கும் பதிவு செய்வதற்கும் மொத்தமே ஒரு நிமிடம் தான் ஆனது (பெங்களூரில்).. காரணம் நிறைய பதிவு சாவடிகளை (booth) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தது தான். நிச்சயமாக எல்லா ஊர்களிலேயும் இந்த மாதிரியான வசதிகள், அதுவும் குறிப்பாக இந்த நேரத்தில் செய்திருப்பார்கள்..
எனவே நேரில் சென்று ஒரு முறை பதிந்து தான் பாருங்களேன்.. இந்த முறை தவற விட்டு இருந்தீர்களேயானால் அடுத்த முறை நேரில் செல்லுங்கள்.. நான் அப்படி சொல்வதற்கு காரணம், நீங்களே நேரில் செல்லும் போது நிச்சயமாக சுய மனநிறைவு ஏற்படும் என்பது உண்மை.. இது என் அனுபவம்.. சொல்லத் தோன்றியது, அதனால் சொல்கிறேன்..!!
மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!
Saturday, July 31, 2010
Friday, July 30, 2010
காதல் சார்ந்தவை.. [2]
கிள்ளி வலித்த பின்பு தான் தெரிந்தது, 'இது கனவல்ல.. நிஜம்' என்று!! உன்னுடனான எனது இந்த நிமிடங்கள்.. எத்தனை நாள் தவமிது..!! இன்று இதோ நீயும் நானும்.. கற்பனைகளிலும் கனவுகளிலும் உலவியதை போலவே பச்சை கம்பளம் விரித்த பூங்காவில் நீயும் நானும் கை கோர்த்த படி நடைபயிலும் இந்த நிமிடங்கள்.. மீண்டும் கிள்ளிப் பார்க்கிறேன்.. நிச்சயமாய் வலிக்கிறது!! இது நிஜம்..
கோபங்களின் சாயல் மறைந்து நீ உதிர்க்கும் அந்த முத்து சிரிப்புகள்.. என் கற்பனைகளின் ஓவியச் சுவடுகள் உயிர்பெற்றெழும் இந்த நிமிடங்கள்.. நிச்சயம் நான் கொடுத்து வைத்தவன் தான்..!! எவ்வளவோ பேசியிருந்தும் நாம் சந்திக்கும் இந்த நிமிடங்களில் ஏனோ தெரியவில்லை வார்த்தைகள் வர மறுக்கின்றன.. குளுமை அப்பிய மென்மையான உன் உள்ளங்கை பற்றும் போது உயிர் தொடும் அந்த உண்மையான மகிழ்ச்சி முதன் முதலில் உணர்கிறேன்..
விரல்கள் பின்னியிருக்க, கண்கள் மௌனமாய் பேசிக்கொள்ள பூங்காவின் இருக்கையில் நாம் வீற்றிருக்கும் இந்த தருணம் அப்படியே உறைந்து போகாதா என்பதான ஏக்கம் உள்ளுக்குள் படரத் தான் செய்கிறது. இந்த கால தேவனுக்கு நம் காதல் பிடிக்கவில்லையா என்ன..? அது ஏன் எப்போதுமில்லாத வேகம் இப்போது மட்டும்..?
நம் சந்திப்பிற்கு அழகு சேர்க்க வானம் வார்த்த மழையின் மெல்லிய துளிகள் நம்மை சுற்றி விழுந்த போது உன்னை போல தான் நானும் பேரானந்தம் கொண்டேன். ஆனால் மழையினது சில துள்ளிகள் உன் மேனி தொடுவதை பார்த்த வினாடியில் பேரானந்தம் பெரும் அவஸ்தையாக மாறிவிட்டது.. "எனக்கே எனக்கான உன் மேல் உட்காரவும் உறவாடவும் என்ன தைரியம் அவைக்கு..?" என்பதான எண்ணம்..
குளிர் பூசிய தேகத்துடன் ஆதவ ஒளியில் மிளிரும் மழையினது மென்மையான சில துளிகளிடம் கூட கனிவு காட்ட முடியாத அளவிற்கு ஆழமானது உன் மேலான எனது பிரியங்களும் காதலும்.. உன் மேலான எனது காதலின் ஆழத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் எப்போதுமே அகப்பட மறுக்கின்றன.. உன் மீதான எனதன்பை வெளிப்படுத்த நான் முயற்சிக்கும் போதெல்லாம் மொழியினது எல்லை தொட்டு வெறும் கையுடனேயே திரும்புகிறேன்..
சில வினாடிகளில் தானாகவே காற்றில் கரைந்து போய்விடும் என்று தெரிந்தாலும் கூட உன் தேகத்தில் படர்ந்திருக்கும் மழை துளிகளின் மேலான கோபம் குறைவதாய் தெரியவில்லை. முழு முயற்சியுடன் முட்டி மோதி மேலெழும் பொறாமையின் சில துளிகளை கடினப்பட்டு தலை தட்டி உள்ளுக்குள் அடக்குகிறேன்.. காரணம் உன்னையுமறியாமல் மழைத்துளிகளிடம் நீ காட்டும் பிரியங்களுக்காக.. ஆனாலும் நானிருக்கும் போது என்னை கவனிக்க விடாமல் உன் கவனம் கலைத்ததாலோ என்னவோ அந்த நிமிடம் முதல் மழையை எனக்கு பிடிக்கவில்லை..
கோபங்களின் சாயல் மறைந்து நீ உதிர்க்கும் அந்த முத்து சிரிப்புகள்.. என் கற்பனைகளின் ஓவியச் சுவடுகள் உயிர்பெற்றெழும் இந்த நிமிடங்கள்.. நிச்சயம் நான் கொடுத்து வைத்தவன் தான்..!! எவ்வளவோ பேசியிருந்தும் நாம் சந்திக்கும் இந்த நிமிடங்களில் ஏனோ தெரியவில்லை வார்த்தைகள் வர மறுக்கின்றன.. குளுமை அப்பிய மென்மையான உன் உள்ளங்கை பற்றும் போது உயிர் தொடும் அந்த உண்மையான மகிழ்ச்சி முதன் முதலில் உணர்கிறேன்..
விரல்கள் பின்னியிருக்க, கண்கள் மௌனமாய் பேசிக்கொள்ள பூங்காவின் இருக்கையில் நாம் வீற்றிருக்கும் இந்த தருணம் அப்படியே உறைந்து போகாதா என்பதான ஏக்கம் உள்ளுக்குள் படரத் தான் செய்கிறது. இந்த கால தேவனுக்கு நம் காதல் பிடிக்கவில்லையா என்ன..? அது ஏன் எப்போதுமில்லாத வேகம் இப்போது மட்டும்..?
நம் சந்திப்பிற்கு அழகு சேர்க்க வானம் வார்த்த மழையின் மெல்லிய துளிகள் நம்மை சுற்றி விழுந்த போது உன்னை போல தான் நானும் பேரானந்தம் கொண்டேன். ஆனால் மழையினது சில துள்ளிகள் உன் மேனி தொடுவதை பார்த்த வினாடியில் பேரானந்தம் பெரும் அவஸ்தையாக மாறிவிட்டது.. "எனக்கே எனக்கான உன் மேல் உட்காரவும் உறவாடவும் என்ன தைரியம் அவைக்கு..?" என்பதான எண்ணம்..
குளிர் பூசிய தேகத்துடன் ஆதவ ஒளியில் மிளிரும் மழையினது மென்மையான சில துளிகளிடம் கூட கனிவு காட்ட முடியாத அளவிற்கு ஆழமானது உன் மேலான எனது பிரியங்களும் காதலும்.. உன் மேலான எனது காதலின் ஆழத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் எப்போதுமே அகப்பட மறுக்கின்றன.. உன் மீதான எனதன்பை வெளிப்படுத்த நான் முயற்சிக்கும் போதெல்லாம் மொழியினது எல்லை தொட்டு வெறும் கையுடனேயே திரும்புகிறேன்..
சில வினாடிகளில் தானாகவே காற்றில் கரைந்து போய்விடும் என்று தெரிந்தாலும் கூட உன் தேகத்தில் படர்ந்திருக்கும் மழை துளிகளின் மேலான கோபம் குறைவதாய் தெரியவில்லை. முழு முயற்சியுடன் முட்டி மோதி மேலெழும் பொறாமையின் சில துளிகளை கடினப்பட்டு தலை தட்டி உள்ளுக்குள் அடக்குகிறேன்.. காரணம் உன்னையுமறியாமல் மழைத்துளிகளிடம் நீ காட்டும் பிரியங்களுக்காக.. ஆனாலும் நானிருக்கும் போது என்னை கவனிக்க விடாமல் உன் கவனம் கலைத்ததாலோ என்னவோ அந்த நிமிடம் முதல் மழையை எனக்கு பிடிக்கவில்லை..
Tuesday, July 6, 2010
சிதறல்..
எவ்வளவோ எழுதுவதற்கு இருந்தும், தொடர்ந்து பதிவுகளை எழுத முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மிக முக்கியமான காரணம், இப்போதெல்லாம் மனது அவ்வளவு அமைதியாக இல்லை. ஏதாவதொன்றை பற்றிய சிந்தனையும் கவலையும் எப்போதும் மனதிற்குள் எழுந்த வண்ணம் உள்ளன. மனம் தெளிவாக இல்லாத சூழ்நிலைகளில், எழுதுவதற்கு எவ்வளவு தான் முயன்றாலும் அது முடிவதே இல்லை.
மனம் சரியில்லை. அதனால் எல்லாமுமே சரியில்லாத மாதிரியான தோற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனாலேயே ஆக்கப் பூர்வமான சிந்தனைகள் தடைபடுகின்றன. எத்தனையோ கருக்களை எழுதுவதற்கு யோசித்தாலும், எழுத முயற்சி எடுக்க முடியவில்லை. இது எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.
ஒருவிதத்தில் அதிகம் எழுத தோன்றாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம், 'யார் இதையெல்லாம் படிக்கிறார்கள்' என்பதான ஒரு எண்ணமும் கூட. எத்தனையோ நாட்கள் இந்த ப்ளாகை (blog) நிறுத்தி விடலாம் என்று நினைத்ததுண்டு. எல்லாவற்றையும் அழிப்பதற்கு 'டெலிட்' (delete) பொத்தானை அழுத்த போயிருக்கிறேன். சொல்லத் தெரியாத ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த முடிவை இதுவரையில் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். எவ்வளவு நாட்கள் தான் இந்த கட்டுப்பாடு இருக்கிறதென்று பார்க்கலாம்..
மனம் சரியில்லை. அதனால் எல்லாமுமே சரியில்லாத மாதிரியான தோற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனாலேயே ஆக்கப் பூர்வமான சிந்தனைகள் தடைபடுகின்றன. எத்தனையோ கருக்களை எழுதுவதற்கு யோசித்தாலும், எழுத முயற்சி எடுக்க முடியவில்லை. இது எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.
ஒருவிதத்தில் அதிகம் எழுத தோன்றாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம், 'யார் இதையெல்லாம் படிக்கிறார்கள்' என்பதான ஒரு எண்ணமும் கூட. எத்தனையோ நாட்கள் இந்த ப்ளாகை (blog) நிறுத்தி விடலாம் என்று நினைத்ததுண்டு. எல்லாவற்றையும் அழிப்பதற்கு 'டெலிட்' (delete) பொத்தானை அழுத்த போயிருக்கிறேன். சொல்லத் தெரியாத ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த முடிவை இதுவரையில் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். எவ்வளவு நாட்கள் தான் இந்த கட்டுப்பாடு இருக்கிறதென்று பார்க்கலாம்..
Subscribe to:
Comments (Atom)