Tuesday, December 4, 2012

படித்தது பற்றி..


சமீபத்தில் இந்த வரியை ஓரிடத்தில் படித்தேன்..

"After everything, I still believe this world is a beautiful place.."

அவ்வளவு வலிகள்..
அவ்வளவு வேதனைகள்..
அவ்வளவு காயங்கள்..
அவ்வளவு கண்ணீர்..
அவற்றை பொறுத்துக் கொள்ளும் சகிப்புத்தன்மை..
அதையும் தண்டி இன்னமும் இந்த வாழ்வின் மீதான நம்பிக்கை, ஆழ்ந்த பற்று, தீராத காதல்..

எல்லாவற்றையும் எவ்வளவு எளிதாக தனக்குள் தாங்கி நின்று புன்னகைக்கின்றது அந்த வரி..

ஒருசில வார்த்தைகளின் உதவியுடன் மட்டுமே எல்லைகளற்று விரிந்து பரந்திருக்கும் மனதின் ஆழங்களுக்குள் எவ்வளவு எளிதாக பிரவேசிக்க முடிகிறது..! பிரமிக்கிறேன் !!

-- பால் ஆரோக்கியம்

No comments:

Post a Comment