ஏதோ சப்தம் கேட்க, மெல்ல எட்டிப் பார்த்தேன். எதிர் வீட்டு கணவன் மனைவிக்கிடையில் வழக்கம் போல் ஏதோ வாக்குவாதம்.. என்றும் போல் இன்றும் அந்த அம்மையாரேஅதிகம் பேசி திட்டிக்கொண்டிருக்க, கணவரோ முடிந்தவரை மௌனம் சாதித்து விட்டு இறுகிய முகத்துடன் வாசற்படி நோக்கி நடந்தார்..
அவர் வாசலை கடக்கும் முன் திடீரென்று உதைபட்டது, வாசற் கதவோரம் கட்டப்பட்டிருந்த அவர் வீட்டு நாய். "சனியன்.. நடு வழியிலே நின்னுகிட்டு!!", என்று அடக்கி வைத்திருந்த கோபத்தை அந்த நாய் மீது காட்டினார்.. 'அட பாவி.. எல்லா நாளும் அந்த நாய் அங்க தானடா நிக்குது.. இன்னைக்கு மட்டும் ஏன் அது உனக்கு புதுசா தெரியுது??', கேட்க வேண்டும் போல் இருந்தது எனக்கு..
உதைபட்ட நாய், மெல்லிய விம்மலுடன் விலகி நின்று அவரைப் பார்த்துக் குரைத்தது .. 'யோவ்.. நீ தான இங்க கட்டி போட்ட, இப்போ நீயே உதைக்கிறியே.. இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...?', என்று அது கேட்பது போல் இருந்தது.. பின்னர் மாலையில் அவர் சாப்பாட்டு தட்டோடு வருகையில், வழக்கம் போல் வாலாட்டி கொஞ்சியது..
சில மனிதர்களின் வெளிப்படுத்தப்படாத கோப உணர்ச்சிகளுக்கு வடிகால்களாக இருப்பது இந்த ஐந்தறிவு ஜீவன்கள் தான்... 'மத்தியானம் தானே உதைச்சான் அந்தாளு.. அவன் கிட்ட போய் வாலட்டுறியே, உனக்கு வெட்கமா இல்ல..?', என்றா கேட்க முடியும் அந்த நாயிடம்.. 'என்ன செய்யறது.. அவன் சோறு போடுறானே..' என்று சொன்னாலும் சொல்லும்!!
குறிப்பு: இதைப் பற்றிய ஒரு கவிதையை நீங்கள் இங்கே படிக்கலாம்...
No comments:
Post a Comment