சிரிப்பொலிகள் மறைந்து, தூரத்தில் ஏதோ ஒரு குழந்தை அழும் ஓசையும் துல்லியமாய் கேட்கும் அளவிற்கு படர்ந்துவிட்ட அமைதி.. இறைந்து கிடந்த துணிகளையும் பொருட்களையும் எடுத்து வைத்து, சுத்தம் செய்த பிறகு துளியும் தெரியவில்லை வந்து போனவர்களின் பதிவுகள்..
மீண்டும் புத்தம் புதிதாய் மாறிவிட்ட அறை.. அறைகளின் கடந்தகால பதிவுகளை அழிக்க துடைப்பம் போதும்.. ஆனால் வலிகளையும் அவஸ்தையையும் ஏற்படுத்தும் உன் நினைவுகள் மனதினுள் இன்னும் இறைந்தே கிடக்கின்றன.. அவற்றை துடைக்க முயற்சித்தாலும் முடியவில்லை..
வெறுமை படர்ந்திருப்பது அறையில் மட்டுமல்ல.. என் மனதிலும் தான்..
No comments:
Post a Comment