"யாவரும் நலம்.. யாவதும் நலம்.." என்று எல்லாம் சரியாகவும் எதிர்பார்த்தபடியும் வாழ்க்கையில் நடந்து, தானும் தன்னை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாயிருக்கும் போது, திடீரென்று ஒருநாள் கரை கடந்த புயலின் சாரல் வாழ்வை லேசாக தீண்டியதை போல, நேற்று வரை சரியாக இருந்தவற்றிற்கு ஏதோ ஒன்றாகி, கடினமான கணங்கள் சூழ்ந்து கொள்ளும் போது, பலர் தட்டு தடுமாறி சற்று நிலைகுலைந்து தான் போகிறார்கள்.
'நேற்று வரை எல்லாம் சரியாக தானே இருந்தன..? ஏன் திடீரென்று இப்படி நடக்கின்றது..? ஏன் எனக்கு மட்டும் இப்படியாகின்றது..? நான் தவறொன்றும் செய்யவில்லையே..?' என்று வாழ்வில் நுழைந்துவிட்ட திடீர் திருப்பங்களையும், மாறிவிட்ட தனது சூழ்நிலைகளையும் எண்ணி கவலையும் வருத்தமும் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்களே தவிர, 'சூழ்நிலைகள் மாறுதலென்பது வாழ்வில் இயற்கையான ஒன்று' என்கிற உண்மையை ஏற்று கொண்டு, 'அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன'வென்று யோசிப்பது வெகு சிலரே.
'சந்தோசமாக இரு.. ஆனால் அதே நேரத்தில் சூழ்நிலைகள் மாறி கஷ்டமொன்று வந்துவிட்டால் என்ன செய்வாயென்று இப்பொழுதே தயார்படுத்தி கொள்..' என்பதாக சொல்லப்படும் அறிவுரைகள் பலர் காதுகளில் ஏறுவதேயில்லை. அப்படியே காதில் விழுந்தாலும், அதை சிந்தையில் ஏற்றி கொள்ள அவர்கள் சிரத்தை எடுப்பதில்லை. வாழ்க்கை நன்றாக போகும் போது மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதென்பது இருக்க வேண்டியது தான். அதே சமயத்தில், வாழ்வின் சூழ்நிலைகள் மாறிவிட்டால் அதை சமாளிப்பது எப்படியென்று உள்ளுக்குள் தன்னையே தயார்படுத்தி கொள்வது அவசியமென்பதை பலர் மறந்து விடுகின்றனர். அதற்காக உங்களது நிகழ்கால வாழ்வின் நிமிடங்களை பாதிக்கும்படி சிந்தியுங்களென்று நான் சொல்லவில்லை.
வாழ்வின் தற்போதைய நிகழ்வுகளை கொண்டாடும் அதே சமயத்தில், எதிர்பாராத சில பிரச்சனைகளையும் மாற்றங்களையும் கையாள்வதற்கு நம்மையே நாம் தயார் செய்து கொள்ளுதலென்பது எதிர்மறையாக சிந்திப்பதாக (negative thinking) அர்த்தமாகாது. எதிர்மறையான சிந்தனையென்பது கவலையளிப்பது. நான் சொல்வதோ, நாம் எதிர்பார்த்தவாறு நிகழ்வுகளும் சூழ்நிலைகளும் அமையாத பட்சத்தில், தொடர்ந்து எப்படி முன்னேறுவது என்று சிந்திப்பதையும், பிரச்சனைகள் வந்துவிட்டால் அதை எதிர்கொண்டு கையாள்வதற்கு தேவையான பக்குவத்தை வளர்த்து கொள்வதுமான அணுகுமுறையையும் பற்றியது.. அதோடு நின்றுவிடாமல் நிகழ்காலத்தையும் மகிழ்ச்சியாக வாழ்வதை பற்றியது..
எல்லாம் சரியாக இருப்பதாலும் பிரச்சனைகளின்றி வாழ்க்கை போய் கொண்டிருப்பதாலும், சாகும் வரை அப்படியே வாழ்க்கை இருந்துவிடுமென்று யோசித்தீர்களேயானால் அதை விட அறியாமையொன்று இருக்க முடியாது. 'எல்லாம் சரியாக இருக்கும் போது பிரச்சனை ஏன் வருகிற'தென்கிற கேள்வி சரிதான், ஆனால் 'சரியாக இருப்பவை சரியாகவே இருக்குமா' என்றொரு கேள்வியும் இருக்கிறதென்பதை மறந்துவிடக் கூடாது.
பிரச்சனைகளுக்கு (அவை நடப்பதற்கான சூழ்நிலையே இல்லையென்றாலும் கூட) நம்மையே நாம் தயார்படுத்தி வைத்திருந்தோமென்றால், அவை வாழ்வில் நிகழும் போது, 'இப்படியாகிவிட்டதே..!' என்று கவலை கொள்ளுவதற்கு பதிலாக, அவற்றை சமாளிப்பதெப்படி என்பதை பற்றி யோசிக்க முடியும். சூழ்நிலைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்க முடியும். 'எதிர்பாராமல் அப்படி நடந்து விட்டால் என்ன செய்வது..?' என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களையும் திட்டங்களையும் மனதிற்குள் தயாராக வைத்திருக்கும் போது, அவ்வாறான நிகழ்வுகளை அதிக கஷ்டப்படாமல் (கஷ்டமே இல்லாமல் சமாளிப்பதென்பது முடியாத காரியமென்பதால், கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆகா வேண்டும்) சமாளித்து கொள்ள முடியும்.
ஒரு இலக்கு நோக்கி பயணிக்கும் போது ஒரு வழியை மட்டும் சார்ந்து உங்களது முழு பயணத்தையும் முடிவெடுக்காமல், போய் சேர வேண்டிய இடத்தை அடைவதற்கான பல வழிகளையும் தெரிந்து கொண்டு, தேவைப்பட்டால் வேறு வழியை தேர்ந்தெடுத்து, நாம் போக வேண்டிய இடம் நோக்கி பயணத்தை தொடர்வதென்பது பயணத்தை வெற்றிகரமாக முடிக்க அவசியமான ஒன்று. வழியில் உணவு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது, பயணிக்கும் வாகனத்தில் பழுது ஏற்பட்டால் என்ன செய்வது, உடல்நிலை சரியில்லாமல் போனால் அதை எவ்வாறு சமாளிப்பது.. இப்படி எத்தனையோ விஷயங்களை முன்கூட்டியே யோசித்து அதற்கு தேவையான மாற்று திட்டங்களை வைத்திருப்பதென்பது பயணத்திற்கு மிக தேவையான ஒன்றாக உள்ளது.
இப்படி சாதாரண பயணத்திற்கே இவ்வளவு யோசித்து பலவற்றிற்கு தயாராக இருக்க வேண்டுமென்கிற போது, வாழ்க்கையெனும் மிக நீண்ட பயணத்திற்கு எவ்வளவு முன்யோசனைகளும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கான தயார்நிலையும் அவசியம்.. எப்பொழுதுமே வாழ்க்கை வாழ்வதற்கான 'இன்னொரு திட்டம்' (backup plan) வைத்திருப்பது அவசியம். எதிர்பாராதவைகளை எதிர்பார்த்து, அவற்றை தைரியமாக சந்தித்து கையாளும் மனப்பக்குவத்தை நமக்குள் வளர்த்து கொண்டோமேயானால், எவ்வித பிரச்சனைகளுக்கு மத்தியிலும் கூட தொடர்ந்து முன்னேறி நமது இலக்கை (destiny) நம்மால் அடைய முடியும். ஒரு வழியில் தடங்கல் ஏற்படுகிறது என்பதற்காக பயணத்தையே கைவிட முடியுமா என்ன..? அப்படி தடங்கல் ஏற்பட்டாலும் பயணத்தை தொடர வேண்டுமென்றால் உங்களது இலக்கிற்கான பல வழிகளையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமல்லவா..
இன்னும் இன்னொரு பதிவில்..
மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!
Friday, February 26, 2010
Tuesday, February 23, 2010
இன்னும் சில சிந்தனைகள்.. (4)
தெருவிலோ, சாலையோரத்திலோ அல்லது மரத்தடியிலோ பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களைப் எப்போதெல்லாம் நான் பார்க்கிறேனோ, உடனே அந்த காட்சி என் மனதிற்குள் புகுந்துக் கொண்டு, ஒருவித சுமையை ஏற்படுத்தி இம்சை செய்ய ஆரம்பித்துவிடும். 'ஏன் இப்படி நடக்கிற'தென்று ஒரு ஆதங்கம் தோன்றும். இப்படி தனது தாய் தந்தைகளை வீட்டை விட்டு விரட்டி விடும் அத்தகைய பிள்ளைகள் மீதும் அதற்கு காரணமாக மற்றவர்கள் இருப்பார்களேயானால் அவர்கள் மீதும் கோபம் வரும். எல்லாவற்றையும் பிள்ளைகளுக்காகவென்று செய்து விட்டு இப்போது எதுவுமே இல்லாமல் சாலையில் கையேந்தி நிற்கும் அந்த வயதான முதியவர்களின் அவலத்தை பார்த்து மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். எனவே தான் அவர்களுக்கு உதவும் போதெல்லாம், 'நான் கொடுப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கோ அல்லது ஒரு நாளுக்கோ அல்லது சில நாட்களுக்கோ போதும், அதன் பிறகு அவர்கள் என்ன செய்வார்கள்' என்பதானதொரு கவலை தோன்ற ஆரம்பித்து விடும்.
வயதாகிவிட்டாலே அது இன்னொரு குழந்தை பருவம் போல தான். குழந்தைகளைப் போலவே அவர்களுக்கும் எப்போதும் ஒருவர் கூட இருந்து அனுசரணையாக கவனித்துக் கொள்ள வேண்டிய காலமது. வயதாகும் காலமானது எப்போதுமே ஒரு தனிமை சூழ்ந்துக் கொள்ளும் காலம். சுற்றி பலர் இருந்தாலே தனிமை ஆட்கொள்ளக் கூடிய காலமென்னும் போது, வீட்டை விட்டு விரட்டப்பட்டு உண்மையிலேயே தனிமைபடுத்த படும்போது அவர்களது நிலைமையை சொல்லியா தெரிய வேண்டும். அன்பான பேச்சு, அக்கறையான கவனிப்புகள், அவர்களது அன்றாட தேவைகளை அவர்கள் நிறைவேற்றிக் கொள்ள கைகொடுத்து உதவ அவர்களை நேசிக்கும் சிலர் என்று ஏங்கும் பருவம் அது. அத்தகைய பருவத்தில் வீட்டிலிருந்து விரட்டப்படும் பொழுது உண்மையிலேயே அவர்களின் நிலை பரிதாபத்திற்குறியது தான். அத்தகைய வயதான மனிதர்களின் காட்சி எப்போதுமே என் சிந்தனையை பாதிப்பதுண்டு.
எனது ஆபீஸ் பெங்களூரின் ஏர்போர்ட் ரோட்டில் [இப்போது அதன் பெயர் பழைய ஏர்போர்ட் சாலை(old airport road)] இருந்த போது அந்த சாலையோரங்களில் வீட்டிலிருந்து விரட்டப்பட்ட அத்தகைய வயதானவர்களை அடிக்கடி நான் காண்பேன். காலையில் அலுவலகம் செல்லும் போது, மதியம் உணவருந்த வெளியே வரும் போது, மாலையில் வீட்டிற்கு கிளம்பும் போது என்று எப்போதுமே அங்கே ஒருசிலராவது தட்டுபடுவர். எனவே ஒருவர் இல்லாவிட்டாலும் மற்றொருவர் எனது சிந்தனைகளை அவர்களை நோக்கி ஈர்த்து விடுவர்.
அப்படி தான் அன்றும் மதிய உணவருந்த வெளியே போய்விட்டு அலுவலகத்திற்கு திரும்பி நடந்து வந்துக் கொண்டிருக்கையில் வருவோர் போவோரிடம் கையேந்தி நின்றுக்கொண்டிருந்த அந்த வயதான பாட்டி கண்ணில் பட, "எப்டி வில்லியம் அம்மா அப்பாவ வீட்ல இருந்து தொரத்தி விட ஒரு சிலருக்கு மனசு வருது..?", என்று ஆதங்கத்துடன் என்னுடன் நடந்து வந்துக் கொண்டிருந்த எனது நண்பர் வில்லியமிடம் கேட்டேன். "எவ்வளவோ கஷ்டப்பட்டு வளத்து விடுறாங்க.. கடைசியிலே அவங்கள தொரத்தி விட எப்டி தான் முடியுதோ..", என்று தொடர்ந்து சொன்னேன்.
"அது உண்மை தான் பால்.. இவங்கள பாத்தா ரொம்ப கஷ்டமா தான் இருக்கு, ஆனா சில நேரத்துல இவங்க மேலயும் தவறுகள் இருக்குமோனு எனக்கு தோன்றதுண்டு..", என்று மெல்லிய யோசனையுடன் அவர் பதிலளித்தார்.
"அப்டி என்ன இவங்கள் மேல தப்பு இருக்கும்னு சொல்றீங்க. அத என்னால அக்செப்ட் (accept) பண்ண முடியல. என்ன தான் இருந்தாலும் குழந்தையிலே இருந்து வளத்து விட்டவங்க இல்லையா. அதெப்படி அவங்கள வெளிய போனு சொல்ல மனசு வரும்..?", என்று அவரிடம் கேட்டேன். என்ன தான் தாய் தந்தையர் மேல் சில தவறுகள் இருந்தாலும் அதை கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லையென்றால் இவர்களெல்லாம் என்ன பிள்ளைகள் என்று எனக்கு தோன்றியது.
"பட் (but) பால், அம்மா அப்பாவை பாத்துக்காம அவங்கள வீட்ட விட்டு வெளிய அனுப்பிடனும்னு உங்களுக்கோ எனக்கோ தோணுமா..?", என்று கேட்டார். தொடர்ந்து, "நமக்கு அப்டி தோணாம இருக்க காரணம் என்ன.. அவங்க வளத்த விதம் தான. நம்மளோட சிட்சுவேசன் (situation) எப்டி இருந்தாலும் அம்மா அப்பாவ கவனிச்சுக்கணும்னு நமக்கு தோனுதுல்ல. காரணம் அவங்க நம்மள எவ்ளோ கஷ்டப்பட்டு வளத்தாங்கனு நமக்கு தெரியற மாதிரி வளத்தது தான. வளக்குற விதம் சரியா இருந்திருந்தா பிள்ளைங்க ஏன் அவங்கள தொரத்தி விட போறாங்க..?" என்று கேட்டார்.
அவர் கேட்டது மிக நியாயமான கேள்வியாக தோன்றியது எனக்கு. அது தான் எதார்த்த உண்மையோ என்று நினைத்தேன்.. ஒருவேளை பிள்ளைகளை இவர்கள் வளர்த்த விதம் சரியில்லாததால் தான் இவர்களுக்கு இந்த நிலையோ என்று எண்ண வைத்தது. அது ஒருவிதத்தில் கொஞ்சம் தீவிரமாக யோசிக்க வேண்டிய விஷயமோ என்று கூட எனக்குப்பட்டது.
பிள்ளைகளை அன்பு மழை பொலிந்து வளர்த்தால் மட்டும் போதாது; அவர்களை வளர்க்க என்னென்ன தியாகங்கள் மற்றும் கஷ்டங்கள் படுகிறோமென்பதை அவர்கள் உணரும்படி வளர்க்கும் போது தான் அவர்கள் பொறுப்புள்ளவர்களாகவும், குடும்பத்தின் மீது அக்கறையுள்ளவர்களாகவும், பெற்றோர் மீது பற்றுள்ளவர்களாகவும் வளர்கிறார்கள். இன்னொரு புறம், எல்லா வசதிகளையும் கொடுத்து வளர்த்தாலும் கூட, அவர்களுடன் போதிய நேரம் செலவழித்து அன்பு பரிமாறாதிருக்கும் போது அவர்களுக்கு தங்களது குடும்பம் மற்றும் பெற்றோர் மீது ஒரு பிடிப்பு ஏற்படாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
பிள்ளைகள் நம்மை கவனித்துக் கொள்ள வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோமோ இல்லையோ, ஆனால் அவர்கள் நம் மீது அன்பு கொண்டு பாசத்துடன் இருக்க வேண்டுமென்று விரும்பினால் அவர்களை சரியான முறையில் வளர்ப்பதும், தேவையான அளவிற்கு அவர்களுடன் நேரம் செலவிட்டு அவர்களுடன் அன்போடிருப்பதும் அவசியமென்றே தோன்றுகிறது. ஒருவேளை நீங்கள் கஷ்டப்பட்டு நிறைய தியாகங்கள் செய்து உங்கள் பிள்ளைகளை வளர்க்கிறீர்களென்றால் அது அவர்களுக்கு தெரியும்படி அவர்களை வளருங்கள். அது தான் பின்னாளில் நீங்கள் கஷ்டப்படாமல் இருக்க உதவுமென்று நான் நினைக்கிறேன்.
Saturday, February 20, 2010
இன்னும் சில சிந்தனைகள்.. (3)
வெற்றி என்பது இலக்கை நோக்கிய வழியை சரியாக அடையாளம் கண்டு கொள்வதினால் மட்டும் ஏற்படுவதல்ல.. அவ்வபோது ஏற்படும் பல தடைகள் மற்றும் ஏமாற்றங்களுக்கு மத்தியிலும் கூட தொடர்ந்து முன்னேறும் மன உறுதியினால் ஏற்படுவது. "எவ்வளவு காலம் தான் நான் ஏமாற்றங்களையும் தோல்விகளையுமே சந்தித்து கொண்டிருப்பது. இதற்கு மேல் என்னால் பொறுக்க இயலாது..", என்று எத்தனையோ பேர் சொல்ல கேட்டிருக்கிறேன். தோல்வியையும் ஏமாற்றங்களையும் தொடர்ந்து சந்திக்கும் மனமானது நாளடைவில் சோர்வடைவது மட்டுமல்ல விரக்தியின் எல்லையை தொடுவதும் கூட சற்று இயற்கை தான். "இன்னும் கொஞ்சம் பொறுத்து தான் பாருங்களேன்.." என்பதான ஆலோசனைகள் அவர்களுக்கு வழங்கப்படும் போது, "உனக்கு வந்தால் தெரியும்.." என்பதாகவே அவர்களின் சிந்தனையும் பதிலும் இருக்கும்.
எடுக்கப்படும் எல்லா முயற்சிகளும் தொடர்ந்து எதிர்மறையான முடிவுகளையே (negative results) சந்திக்கும் போது வெறுமை கலந்ததொரு வெறுப்பு தோன்றுவது நிகழக் கூடிய ஒன்று தான். என்றாலும் தோல்விகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு, அடுத்து மேற்கொள்ளும் முயற்சிகளில் அதே தவறை செய்யாமல் இருக்கிறோமா என்று ஆராய்வது வெகு சிலரே. உண்மையை சொல்லப் போனால், தனது தோல்விகளை ஆராய்ந்து, அதில் தான் செய்த தவறுகளை கற்றுக் கொண்டு, தனது அடுத்தடுத்த முயற்சிகளை திருத்தி அமைக்கும் அத்தகைய மனிதர்களுக்கு விரக்தி அவ்வளவு எளிதாக வருவதும் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமது முயற்சிகளை சரியாக மேற்கொள்ள முடிந்தவரை சிரமப்பட்டு, எப்பாடுபட்டாவது தனக்கு வேண்டியதை அடைந்தே தீர வேண்டுமென்கிற குறிக்கோளுடன் முன்னேறுவது தான் அதற்கு காரணம். அவர்கள் தங்களது குறைகளை கண்டறிந்து சரி செய்வதிலும், இலக்கு நோக்கி முன்னேருவதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பதனால், இடையில் சந்திக்கும் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் கண்டுக் கொள்ள அவர்களுக்கு நேரமிருப்பதில்லை.
மற்றவர்களுக்கு எளிதாக கிடைக்கும் சில விஷயங்கள் நமக்கு இவ்வளவு முயற்சிகளுக்கும் கஷ்டங்களுக்கும் பிறகும் கூட கிடக்கவில்லையே என்று கவலை கொள்ளும் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவ்வாறான கவலை கொள்வதால் எதையும் சாதிக்க இயலாது என்பது அவர்களுக்கு புரிவதில்லை. கவலைகள் எப்போதும் எதையுமே பெற்று தருவதில்லை. அதிகபட்சமாக அவை மனதளவில் சோர்வையும் தளர்சியையுமே கொண்டு வரும். கவலை கொள்வதற்கு பதிலாக, அடுத்து நாம் செய்யவேண்டியது என்ன என்று சிந்திப்பதும், சிந்தனையோடு மட்டும் நில்லாமல் அதனை செயலில் காட்டுவதும் மட்டுமே நாம் விரும்பியதை பெற கொஞ்சமாவது உதவும்.
எல்லோருடைய பயணங்களும் எளிதானதல்ல. ஒரு சிலருக்கு எளிதாக கிடைக்கும் சில விஷயங்களை பலர் கடினப்பட்டு தான் பெற வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுப்பதை விட்டுவிட்டு 'ஏன் இந்த ஏற்ற தாழ்வு..?' என்று ஆதங்கம் கொள்வதிலும் விரக்தி கொள்வதிலும் அர்த்தமில்லை. இன்னும் சிலருக்கோ அவை கிடைக்காமல் கூட போகலாம். இன்னொரு உண்மையும் புரிந்து கொள்ளுதல் அவசியம். தான் விரும்பியதை அடைவது மட்டும் வெற்றியல்ல. தான் விரும்பியது தனக்கு சரியானதல்ல, அது ஒத்து வராது என்பதை கண்டறிவதும் கூட ஒரு விதத்தில் வெற்றி தான். அத்தகைய புரிதல்களும் கண்டறிதல்களும் பல நேரங்களில் சில முயற்சிகளுக்கு பின் தான் புலப்படும். அதை தோல்வியென்று எண்ணி அதனை நினைத்து வருந்தி யோசித்துக் கொண்டிருப்பதில் பயனொன்றுமில்லை. அத்தகைய புரிந்து கொள்ளுதலை கண்டறிய முடிந்ததே என்று சந்தோஷபட்டு கொள்ள வேண்டியது தான்.
பல நேரங்களில் மனித மனமானது "அவர்களிடம் இது இருக்கிறது.. அது இருக்கிறது.. எனக்கோ ஒன்றுமே இல்லை.. நான் எப்படி என் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துவது..?" என்பதான ஆதங்கமும், "எனது சூழ்நிலை மட்டும் எப்போதுமே சரியாக இருப்பதில்லை.." என்பதான குற்றச்சாட்டுடன் கூடிய வெறுப்பும், "எதுவுமே இல்லாமல் நானெப்படி முயற்சி எடுத்து வெல்வது..?" என்பதான விரக்தியும் கொள்ளுகிறதே தவிர, "என்னிடம் இருப்பவற்றை உபயோகித்து நான் எப்படி முன்னோக்கி நகருவது.." என்று சிந்திக்க தவறி விடுகிறது. இல்லாத ஒன்று இருந்திருந்தால் எளிதாக நான் வென்றிருப்பேன், எனகானதை பெற்றிருப்பேன் என்று காரணங்களை சொல்லி சமாளிக்க முயல்கிறதே தவிர, "இருப்பதை வைத்து கொண்டு நான் என்ன செய்திருந்தால் முன்னோக்கி நகர்ந்திருக்க முடியும்" என்று யோசிக்க மறுக்கிறது.
பல நேரங்களில் நம் கையில் இருக்கும் விஷயங்களை வைத்தே ஏதாவதொரு வழி செய்து நம்மால் முன்னோக்கி நகர முடியும். வேகமாக இல்லாவிட்டாலும் மெதுவாகவாவது முன்னேற முடியும் என்பதே உண்மை. வேகமாகவோ மெதுவாகவோ, முன்னோக்கி நகர்தலேன்பது முன்னோக்கி நகர்வது தான். அது நிலை கொள்ளுதலை (staying still) விட மேலானது என்பதை உணர வேண்டும். 'இது' இருந்தால் எனது முயற்சிகளை இன்னும் சிறப்பாக மேற்கொண்டு உடனே எனது இலக்கை அடைய முடியும், நான் விரும்பியதை பெற முடியும் என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை. அதற்காக அது கிடைக்கும் வரையில் சும்மா இருப்பதில் பயனில்லை. என்னிடம் 'இது' இருந்தால் தான் என்னால் முயற்சி எடுக்க முடியும் அல்லது இதை செய்ய முடியுமென்று காரணம் சொல்லிக் கொண்டிருக்காமல், இருப்பவற்றை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்யலாம் என்பதான சிந்தனையும் அதனையொட்டிய முயற்சியும் எப்போதுமே ஏதாவதொரு பலனை தரும். அது மட்டுமல்லாது அத்தகைய அணுகுமுறை மனதை சோர்வுபடுத்தக் கூடிய தேவையில்லாத சில எண்ணங்களை சிந்திக்காது தவிர்த்திட உதவும்.
எல்லாவற்றையும் விட நம்மாலான முயற்சிகளை முதலில் செய்கிறோமா என்பதை கவனிக்க வேண்டும். நான் பார்த்த பலர் அவர்களாலான முயற்சிகளை எடுக்காமலேயே, "எனக்கு வெற்றி கிடப்பதே இல்லை.." என்று அடித்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன். நம்மால் முடிந்தவரையில் முயற்சி (our best effort) எடுக்காமல் சூழ்நிலைகளை நொந்துக் கொள்வதிலும் அதிர்ஷ்டத்தை வசை பாடுவதிலும் எந்த விதத்தில் நியாயம் என்பது எனக்கு தெரியவில்லை.
எடுக்கப்படும் எல்லா முயற்சிகளும் தொடர்ந்து எதிர்மறையான முடிவுகளையே (negative results) சந்திக்கும் போது வெறுமை கலந்ததொரு வெறுப்பு தோன்றுவது நிகழக் கூடிய ஒன்று தான். என்றாலும் தோல்விகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு, அடுத்து மேற்கொள்ளும் முயற்சிகளில் அதே தவறை செய்யாமல் இருக்கிறோமா என்று ஆராய்வது வெகு சிலரே. உண்மையை சொல்லப் போனால், தனது தோல்விகளை ஆராய்ந்து, அதில் தான் செய்த தவறுகளை கற்றுக் கொண்டு, தனது அடுத்தடுத்த முயற்சிகளை திருத்தி அமைக்கும் அத்தகைய மனிதர்களுக்கு விரக்தி அவ்வளவு எளிதாக வருவதும் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமது முயற்சிகளை சரியாக மேற்கொள்ள முடிந்தவரை சிரமப்பட்டு, எப்பாடுபட்டாவது தனக்கு வேண்டியதை அடைந்தே தீர வேண்டுமென்கிற குறிக்கோளுடன் முன்னேறுவது தான் அதற்கு காரணம். அவர்கள் தங்களது குறைகளை கண்டறிந்து சரி செய்வதிலும், இலக்கு நோக்கி முன்னேருவதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பதனால், இடையில் சந்திக்கும் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் கண்டுக் கொள்ள அவர்களுக்கு நேரமிருப்பதில்லை.
மற்றவர்களுக்கு எளிதாக கிடைக்கும் சில விஷயங்கள் நமக்கு இவ்வளவு முயற்சிகளுக்கும் கஷ்டங்களுக்கும் பிறகும் கூட கிடக்கவில்லையே என்று கவலை கொள்ளும் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவ்வாறான கவலை கொள்வதால் எதையும் சாதிக்க இயலாது என்பது அவர்களுக்கு புரிவதில்லை. கவலைகள் எப்போதும் எதையுமே பெற்று தருவதில்லை. அதிகபட்சமாக அவை மனதளவில் சோர்வையும் தளர்சியையுமே கொண்டு வரும். கவலை கொள்வதற்கு பதிலாக, அடுத்து நாம் செய்யவேண்டியது என்ன என்று சிந்திப்பதும், சிந்தனையோடு மட்டும் நில்லாமல் அதனை செயலில் காட்டுவதும் மட்டுமே நாம் விரும்பியதை பெற கொஞ்சமாவது உதவும்.
எல்லோருடைய பயணங்களும் எளிதானதல்ல. ஒரு சிலருக்கு எளிதாக கிடைக்கும் சில விஷயங்களை பலர் கடினப்பட்டு தான் பெற வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுப்பதை விட்டுவிட்டு 'ஏன் இந்த ஏற்ற தாழ்வு..?' என்று ஆதங்கம் கொள்வதிலும் விரக்தி கொள்வதிலும் அர்த்தமில்லை. இன்னும் சிலருக்கோ அவை கிடைக்காமல் கூட போகலாம். இன்னொரு உண்மையும் புரிந்து கொள்ளுதல் அவசியம். தான் விரும்பியதை அடைவது மட்டும் வெற்றியல்ல. தான் விரும்பியது தனக்கு சரியானதல்ல, அது ஒத்து வராது என்பதை கண்டறிவதும் கூட ஒரு விதத்தில் வெற்றி தான். அத்தகைய புரிதல்களும் கண்டறிதல்களும் பல நேரங்களில் சில முயற்சிகளுக்கு பின் தான் புலப்படும். அதை தோல்வியென்று எண்ணி அதனை நினைத்து வருந்தி யோசித்துக் கொண்டிருப்பதில் பயனொன்றுமில்லை. அத்தகைய புரிந்து கொள்ளுதலை கண்டறிய முடிந்ததே என்று சந்தோஷபட்டு கொள்ள வேண்டியது தான்.
பல நேரங்களில் மனித மனமானது "அவர்களிடம் இது இருக்கிறது.. அது இருக்கிறது.. எனக்கோ ஒன்றுமே இல்லை.. நான் எப்படி என் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துவது..?" என்பதான ஆதங்கமும், "எனது சூழ்நிலை மட்டும் எப்போதுமே சரியாக இருப்பதில்லை.." என்பதான குற்றச்சாட்டுடன் கூடிய வெறுப்பும், "எதுவுமே இல்லாமல் நானெப்படி முயற்சி எடுத்து வெல்வது..?" என்பதான விரக்தியும் கொள்ளுகிறதே தவிர, "என்னிடம் இருப்பவற்றை உபயோகித்து நான் எப்படி முன்னோக்கி நகருவது.." என்று சிந்திக்க தவறி விடுகிறது. இல்லாத ஒன்று இருந்திருந்தால் எளிதாக நான் வென்றிருப்பேன், எனகானதை பெற்றிருப்பேன் என்று காரணங்களை சொல்லி சமாளிக்க முயல்கிறதே தவிர, "இருப்பதை வைத்து கொண்டு நான் என்ன செய்திருந்தால் முன்னோக்கி நகர்ந்திருக்க முடியும்" என்று யோசிக்க மறுக்கிறது.
பல நேரங்களில் நம் கையில் இருக்கும் விஷயங்களை வைத்தே ஏதாவதொரு வழி செய்து நம்மால் முன்னோக்கி நகர முடியும். வேகமாக இல்லாவிட்டாலும் மெதுவாகவாவது முன்னேற முடியும் என்பதே உண்மை. வேகமாகவோ மெதுவாகவோ, முன்னோக்கி நகர்தலேன்பது முன்னோக்கி நகர்வது தான். அது நிலை கொள்ளுதலை (staying still) விட மேலானது என்பதை உணர வேண்டும். 'இது' இருந்தால் எனது முயற்சிகளை இன்னும் சிறப்பாக மேற்கொண்டு உடனே எனது இலக்கை அடைய முடியும், நான் விரும்பியதை பெற முடியும் என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை. அதற்காக அது கிடைக்கும் வரையில் சும்மா இருப்பதில் பயனில்லை. என்னிடம் 'இது' இருந்தால் தான் என்னால் முயற்சி எடுக்க முடியும் அல்லது இதை செய்ய முடியுமென்று காரணம் சொல்லிக் கொண்டிருக்காமல், இருப்பவற்றை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்யலாம் என்பதான சிந்தனையும் அதனையொட்டிய முயற்சியும் எப்போதுமே ஏதாவதொரு பலனை தரும். அது மட்டுமல்லாது அத்தகைய அணுகுமுறை மனதை சோர்வுபடுத்தக் கூடிய தேவையில்லாத சில எண்ணங்களை சிந்திக்காது தவிர்த்திட உதவும்.
எல்லாவற்றையும் விட நம்மாலான முயற்சிகளை முதலில் செய்கிறோமா என்பதை கவனிக்க வேண்டும். நான் பார்த்த பலர் அவர்களாலான முயற்சிகளை எடுக்காமலேயே, "எனக்கு வெற்றி கிடப்பதே இல்லை.." என்று அடித்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன். நம்மால் முடிந்தவரையில் முயற்சி (our best effort) எடுக்காமல் சூழ்நிலைகளை நொந்துக் கொள்வதிலும் அதிர்ஷ்டத்தை வசை பாடுவதிலும் எந்த விதத்தில் நியாயம் என்பது எனக்கு தெரியவில்லை.
Friday, February 12, 2010
தைரியமாக எதிர்த்து கேள்வியொன்றை கேட்டு தான் பாருங்களேன்..
என் கேமரா சரியாக இயங்காததால், சரி செய்ய கொடுக்கலாமென்று கேனான் சர்வீஸ் சென்டருக்கு சென்றேன். பெங்களூரில் அது பிரிகேட் ரோட்டில் (Brigade Road) உள்ளது. ஆனால் அது இருக்கும் இடம் சரியாக தெரியாததால் என் பைக்கை எங்காவது நிறுத்தி விட்டு, சர்வீஸ் சென்டரை தேடலாமென்று நினைத்தேன். பிரிகேட் ரோட்டில் பைக்கை நிறுத்துவதற்கு இடம் கிடைப்பது கடினமென்பதால் பக்கத்திலிருக்கும் எம்.ஜி. ரோட்டில் பைக் நிறுத்துவதற்கு அனுமதி பலகை (bike parking board) எங்கிருக்கிறதென்று தேடி, எனது பைக்கை நிறுத்தி விட்டு, கேமராவுடன் நடக்க ஆரம்பித்தேன்.
மிக பிரமாண்டமாக இருந்தது கேனான் சர்வீஸ் சென்டர். பதிவேட்டில் (register) பதிவு செய்து, டோக்கன் கொடுத்து, உட்காருவதற்கு ஜம்மென்ற ஷோபா போட்டு அமர்க்களப்படுத்தி இருந்தனர். அறைகளை மிக நவீனமாகவும் கலை நயத்துடனும் வடிவமைத்து இருந்தனர். நுனி நாக்கு ஆங்கிலம், விலை உயர்ந்த எல்.சி.டி தொலைக்காட்சி, பளிசென்ற கண்ணாடிகளுடனான ஏசி அறை, வந்திருப்போர் குடிப்பதற்கு மூடி வைக்கப்பட்ட அழகான கண்ணாடி தம்ளர்களில் தண்ணீர் என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து விட்டது, "தீட்ட போறானுங்கடா.." என்று. ஏதோ இருநூறு முந்நூறில் கேமராவை சரி செய்து விடலாமென்று போன எனக்கு, "லெவன் ஹன்ரட் பார் சர்விஸ் அண்ட் இப் வி ஹவ் டு சேன்ஞ் எனி பார்ட்ஸ், இட் வில் பி எக்ஸ்ட்ரா..(eleven hundred for service and if we have to change any parts, it will be extra)", என்று பளிசென்ற புன்னகையுடன் நுனி நாக்கில் அங்கிருந்த பெண் சொல்ல, தலை சுற்றியது. 'ஓ.. இது தான் அழகுல மயங்குறதா..' என்ற வடிவேலுவின் காமெடி என் மனத்திரையில் ஓடியது..
'ஆயிரத்து நூறா.. ஆயிரத்து நூறா.. ஆயிரத்து நூறா..' என்று எங்கெங்கோ எதிரொலிப்பதை (echo) போன்று இருந்தது. 'அவ்வளவா..'வென்று நான் வாய் பிளந்ததை அவள் ஒரு மாதிரியாக தான் பார்த்தாள். 'இந்த டென்சன்ல பொண்ணு அழகா இருக்குறத கவனிக்காம விட்டுடாதடா பால்..' என்று எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த ரசிகன் சொல்ல, என்னையும் அறியாமல் வாயில் ஜொள்ளு வழிய ஆரம்பித்தது. சின்ன உதடுகள், கவர்ந்திழுக்கும் விழிகள், வசீகர புன்னகை, மின்னும் கன்னங்கள், புதைக்குழியை போன்ற கன்னக்குழிகள், எடுப்பான அவளின்... (ரொம்ப வர்ணிக்கிறேனோ..) அவள் உண்மையிலேயே அழகாக தான் இருந்தாள். 'கொடுத்து வைத்தவன் எவனோ..' என்று தோன்றியது. ஆனால் அது சில வினாடிகள் தான். பின்பு மீண்டும், 'ஆயிரத்து நூறா..'வென்ற எதிரொலி எனக்குள் கேட்க ஆரம்பித்து விட்டது.
'அடப்பாவிகளா.. ஒரு சின்ன ரிப்பேர்-க்கு இவ்ளோ வா..?', என்று உள்ளுக்குள் மலைத்தேன். 'சரி.. தீட்டுறதுன்னு முடிவு பண்ணிடீங்க.. தீட்டுங்கடா.. தீட்டுங்க..', என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன், வேறு வழியில்லை என்பதால் 'சரி' என்று கேமராவை கொடுத்தேன். 'எவ்வளவோ பண்றோம்.. இத பண்ண மாட்டோமா..' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். "வி வில் கால் யு வென் தி கேமரா இஸ் ரெடி.. இட் வுட் டேக் அரோன்ட் போர் டேஸ்..(we will call you when the camera is ready.. it would take around four days)" என்றாள் அவள். 'சரிங்க டயானா..', என்று சொல்லி அவளிடம் ரிசிப்ட் (receipt) வாங்கிக் கொண்டு, அங்கிருந்து எம்.ஜி. ரோடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
நான் சொல்ல வந்த விஷயம் என் கேமராவை பற்றியதோ அல்லது அந்த சர்வீஸ் சென்டரை பற்றியதோ அல்லது அந்த அழகான பெண்ணை பற்றியதோ [அத பத்தி கூட எழுதலாம் :-) ] அல்ல. 'அப்புறம் எதுக்குடா இவ்ளோ பில்டப் கொடுக்குறனு கேக்குறீங்களா'.. சும்மா தாங்க.. அப்டி ஆரம்பிச்சா சொல்ல வந்த விஷயம் சுவாரசியமா இருக்குமேனு நெனச்சேன்.. சரி மேட்டர்க்கு வருவோம்..
'என் பைக் பத்திரமா இருக்குமா..'வென்று மனதிற்குள் யோசித்துக் கொண்டே நடக்கையில் இன்னொரு விஷயம் என் ஞாபகத்திற்கு வந்தது. நான் பைக்கை நிறுத்தியிருப்பது ரோட்டோரத்தில் பொது மக்களுக்கான பார்க்கிங் (parking) இடத்தில் தான். ஆனாலும் நான் பைக்கை திரும்ப எடுக்க போகும் போதெல்லாம், சட்டென்று எனக்கு பின்னால் வந்து நின்று 'இரண்டு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய்' என்று காசு கேட்கும் அந்த மூன்றாம் மனிதர்கள் பற்றிய எண்ணம் என் சிந்தனையில் வந்தது. ஏதோ அந்த இடத்தை பார்க்கிங் கான்ராக்ட் (contract) எடுத்தவர்கள் போன்ற தோரணையில் தான் அவர்கள் அதிகாரத்துடன் கேட்பார்கள்.
எல்லோரும் அவர்களுக்கு காசு கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். நானும் கொடுத்திருக்கிறேன். அவர்கள் கன்னடத்தில் பேசுவதாலும், எளிதாக கூட்டம் சேர்த்து வம்புக்கு வருவார்கள் என்பதாலும் நான் எதுவும் கேட்டதில்லை இதுவரை. ஆனால், 'எதற்காக இவர்களுக்கு காசு கொடுக்க வேண்டு'மென்று எப்போதும் நினைத்ததுண்டு. 'அதிகாரமாக காசு கேட்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது' என்று ஆதங்கப்பட்டதுண்டு. 'பொது மக்களுக்கான பார்க்கிங் இடத்தில் நிறுத்துவதற்கு நான் எதற்காக இவர்களுக்கு காசு கொடுக்க வேண்டும்..' என்று திரும்ப திரும்ப எனக்குள்ளேயே கேட்டுக் கொள்வேனே தவிர நேரடியாக அவர்களிடம் தைரியமாக கேட்டதில்லை. ஆனால் இந்த முறை யாரவது வந்து நின்று காசு கேட்டால் அவர்களிடம் 'ஏன்' என்று கேட்டு, தேவைப்பட்டால் பிரச்சனை செய்வதென்று முடிவெடுத்தேன். ஒருவேளை ஏற்கனவே ஆயிரத்து நூறு ரூபாய் கேமராவிற்கு தண்டம் கட்ட போவதால் உள்ளுக்குள் ஏற்பட்ட இனம் புரியாத எரிச்சலின் விளைவாக கூட எனக்கு அப்படி தோன்றி இருக்கலாம்.
என் பைக் இருக்குமிடம் வந்தேன். நான் நிறுத்தும் போது யாரும் அங்கே தென்படவில்லை. ஆனால் பைக்கை நான் எடுக்க முற்பட்டவுடன், வேகமான காலடி சப்தம் என் பின்னால் கேட்டது. 'எங்க இருந்து தான் வருவானுங்களோ..' என்று நினைத்துக் கொண்டே மெதுவாக திரும்பினேன். இதோ.. வந்து விட்டான்.. பார்ப்பதற்கு பக்கா லோக்கலாக தெரிந்தான். மழிக்கப்படாத ('not shaved'ஐ தாங்க அப்டி சொன்னேன்) முகம், கலைந்திருந்த தலை, ஆங்காங்கே அழுக்குடன் சுருக்கங்கள் நிறைந்த உடை என்பதாக இருந்தது அவனது தோற்றம். என் பைக்கை வெளியில் எடுக்கும் போது, ஏதோ எனக்கு உதவுவதை போன்று என் பைக்கில் கை வைத்து பின்னால் இழுப்பதாக பாவனை செய்தான். நான் சட்டென்று திரும்பி, அவன் கையை எடுக்குமாறும் நானே பார்த்துக் கொள்கிறேன் என்பதை போன்றும் சைகை செய்தேன். உடனே கையை எடுத்து விட்டு, சற்று தள்ளி நின்றுக் கொண்டான். பைக்கை வெளியில் எடுத்து, நான் அதில் ஏறி அமரும் வரை பொறுமையாக இருந்து விட்டு, "டூ ருபீஸ்.." என்று என்னிடம் கேட்டான்.
"ஒய் (why)..", என்று கேட்டேன்.
நான் கேட்டதை காதில் வாங்காதவன் போல, "டூ ருபீஸ்.." என்று தனது இரண்டு விரல்களை காண்பித்து சற்று சப்தமாக, இன்னும் தெளிவாக மீண்டும் கேட்டான்.
என் முகத்தை சட்டென்று சீரியஸாக மாற்றி, "ஒய் (why)..", என்று மீண்டும் கேட்டேன். இம்முறை எனது குரலை நன்றாக உயர்த்தியிருந்தேன்.
"ஒய் ஷூட் ஐ கிவ் யு டூ ருபீஸ் (why should I give you two rupees)..?", என்று குரலை உயர்த்தி கேட்டேன்.
கண்டிப்பாக அவன் ஏதாவது பிரச்னை செய்வான் என்று எதிர்பார்த்திருந்ததால் சற்று தயாராகவே இருந்தேன். எனக்கு கன்னடம் தெரியாது என்பதால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது கொஞ்சம் விவகாரமான விஷயம் தான். அதிலும் நான் தமிழன் என்று தெரிந்தால் அவ்வளவு தான். 'என்ன தான் நடக்கும்.. பார்த்து விடலாம்..' என்று முடிவெடுத்திருந்தேன்.
ஆனால் என் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு (உள்ளுக்குள் திக் திக்குன்னு இருந்தது எனக்கு தான் தெரியும்), குரலை உயர்த்தி கேள்வி கேட்டதும், நான் ஆச்சரியப்படும் விதமாக அவன் பதில் பேசாமல் சட்டென்று அடங்கி திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டான். 'இவனிடம் மீண்டும் கேட்டால் பிரச்சனை செய்ய ஆரம்பித்து விடுவான்..' என்பதான கலவரம் அவன் முகத்தில் தெரிந்தது (இது பில்டப்புக்காக சொல்லலங்க.. உண்மையிலேயே தான்). அடுத்த முனையில் இன்னொருவன் பைக்கை வெளியில் எடுத்துக் கொண்டிருக்க அவனை நோக்கி போனான்.
'ஹே.. எங்கடா போற.. பெரிய பில்டப்போட வந்திருக்கேன்.. அதுக்காகவாச்சும் சின்னதா சண்டை போட்டுட்டு போடா..' என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டே பைக்கை கிளப்பினேன். 'அடப்பாவிகளா.. இவ்ளோ தானா நீங்க'.. 'இது தெரியாம இவ்ளோ நாள் இவனுங்களுக்கு காசு கொடுத்துட்டு இருந்தேனே' என்று தோன்றியது. பல நேரங்களில் நம்மிடம் அநியாயம் செய்பவர்கள் பலவீனமானவர்களாக இருந்தாலும் கூட, நாம் எதிர்த்து கேட்க பயந்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அவர்கள் நம்மை ஏமாற்றுவதற்கும் அதிகாரம் செய்வதற்கும் இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதாக எனக்கு தோன்றியது. குரலை உயர்த்தி 'ஹே என்ன..' என்று இனி கேட்டு தான் பாருங்களேன். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
PS: இந்த பதிவிற்கு 'எம்.ஜி. ரோட்டில் நடந்தது என்ன.. குற்றம்.. ஒரு சிறப்பு பார்வை..' என்று தொலைகாட்சிகளில் வருவதை போன்று டைட்டில் வைக்கலாமென்று தான் நினைத்தேன். சரி ஓவரா எதுக்கு பில்டப் கொடுத்துக்கிட்டு என்று தலைப்பை மாற்றி விட்டேன்.
மிக பிரமாண்டமாக இருந்தது கேனான் சர்வீஸ் சென்டர். பதிவேட்டில் (register) பதிவு செய்து, டோக்கன் கொடுத்து, உட்காருவதற்கு ஜம்மென்ற ஷோபா போட்டு அமர்க்களப்படுத்தி இருந்தனர். அறைகளை மிக நவீனமாகவும் கலை நயத்துடனும் வடிவமைத்து இருந்தனர். நுனி நாக்கு ஆங்கிலம், விலை உயர்ந்த எல்.சி.டி தொலைக்காட்சி, பளிசென்ற கண்ணாடிகளுடனான ஏசி அறை, வந்திருப்போர் குடிப்பதற்கு மூடி வைக்கப்பட்ட அழகான கண்ணாடி தம்ளர்களில் தண்ணீர் என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து விட்டது, "தீட்ட போறானுங்கடா.." என்று. ஏதோ இருநூறு முந்நூறில் கேமராவை சரி செய்து விடலாமென்று போன எனக்கு, "லெவன் ஹன்ரட் பார் சர்விஸ் அண்ட் இப் வி ஹவ் டு சேன்ஞ் எனி பார்ட்ஸ், இட் வில் பி எக்ஸ்ட்ரா..(eleven hundred for service and if we have to change any parts, it will be extra)", என்று பளிசென்ற புன்னகையுடன் நுனி நாக்கில் அங்கிருந்த பெண் சொல்ல, தலை சுற்றியது. 'ஓ.. இது தான் அழகுல மயங்குறதா..' என்ற வடிவேலுவின் காமெடி என் மனத்திரையில் ஓடியது..
'ஆயிரத்து நூறா.. ஆயிரத்து நூறா.. ஆயிரத்து நூறா..' என்று எங்கெங்கோ எதிரொலிப்பதை (echo) போன்று இருந்தது. 'அவ்வளவா..'வென்று நான் வாய் பிளந்ததை அவள் ஒரு மாதிரியாக தான் பார்த்தாள். 'இந்த டென்சன்ல பொண்ணு அழகா இருக்குறத கவனிக்காம விட்டுடாதடா பால்..' என்று எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த ரசிகன் சொல்ல, என்னையும் அறியாமல் வாயில் ஜொள்ளு வழிய ஆரம்பித்தது. சின்ன உதடுகள், கவர்ந்திழுக்கும் விழிகள், வசீகர புன்னகை, மின்னும் கன்னங்கள், புதைக்குழியை போன்ற கன்னக்குழிகள், எடுப்பான அவளின்... (ரொம்ப வர்ணிக்கிறேனோ..) அவள் உண்மையிலேயே அழகாக தான் இருந்தாள். 'கொடுத்து வைத்தவன் எவனோ..' என்று தோன்றியது. ஆனால் அது சில வினாடிகள் தான். பின்பு மீண்டும், 'ஆயிரத்து நூறா..'வென்ற எதிரொலி எனக்குள் கேட்க ஆரம்பித்து விட்டது.
'அடப்பாவிகளா.. ஒரு சின்ன ரிப்பேர்-க்கு இவ்ளோ வா..?', என்று உள்ளுக்குள் மலைத்தேன். 'சரி.. தீட்டுறதுன்னு முடிவு பண்ணிடீங்க.. தீட்டுங்கடா.. தீட்டுங்க..', என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன், வேறு வழியில்லை என்பதால் 'சரி' என்று கேமராவை கொடுத்தேன். 'எவ்வளவோ பண்றோம்.. இத பண்ண மாட்டோமா..' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். "வி வில் கால் யு வென் தி கேமரா இஸ் ரெடி.. இட் வுட் டேக் அரோன்ட் போர் டேஸ்..(we will call you when the camera is ready.. it would take around four days)" என்றாள் அவள். 'சரிங்க டயானா..', என்று சொல்லி அவளிடம் ரிசிப்ட் (receipt) வாங்கிக் கொண்டு, அங்கிருந்து எம்.ஜி. ரோடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
நான் சொல்ல வந்த விஷயம் என் கேமராவை பற்றியதோ அல்லது அந்த சர்வீஸ் சென்டரை பற்றியதோ அல்லது அந்த அழகான பெண்ணை பற்றியதோ [அத பத்தி கூட எழுதலாம் :-) ] அல்ல. 'அப்புறம் எதுக்குடா இவ்ளோ பில்டப் கொடுக்குறனு கேக்குறீங்களா'.. சும்மா தாங்க.. அப்டி ஆரம்பிச்சா சொல்ல வந்த விஷயம் சுவாரசியமா இருக்குமேனு நெனச்சேன்.. சரி மேட்டர்க்கு வருவோம்..
'என் பைக் பத்திரமா இருக்குமா..'வென்று மனதிற்குள் யோசித்துக் கொண்டே நடக்கையில் இன்னொரு விஷயம் என் ஞாபகத்திற்கு வந்தது. நான் பைக்கை நிறுத்தியிருப்பது ரோட்டோரத்தில் பொது மக்களுக்கான பார்க்கிங் (parking) இடத்தில் தான். ஆனாலும் நான் பைக்கை திரும்ப எடுக்க போகும் போதெல்லாம், சட்டென்று எனக்கு பின்னால் வந்து நின்று 'இரண்டு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய்' என்று காசு கேட்கும் அந்த மூன்றாம் மனிதர்கள் பற்றிய எண்ணம் என் சிந்தனையில் வந்தது. ஏதோ அந்த இடத்தை பார்க்கிங் கான்ராக்ட் (contract) எடுத்தவர்கள் போன்ற தோரணையில் தான் அவர்கள் அதிகாரத்துடன் கேட்பார்கள்.
எல்லோரும் அவர்களுக்கு காசு கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். நானும் கொடுத்திருக்கிறேன். அவர்கள் கன்னடத்தில் பேசுவதாலும், எளிதாக கூட்டம் சேர்த்து வம்புக்கு வருவார்கள் என்பதாலும் நான் எதுவும் கேட்டதில்லை இதுவரை. ஆனால், 'எதற்காக இவர்களுக்கு காசு கொடுக்க வேண்டு'மென்று எப்போதும் நினைத்ததுண்டு. 'அதிகாரமாக காசு கேட்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது' என்று ஆதங்கப்பட்டதுண்டு. 'பொது மக்களுக்கான பார்க்கிங் இடத்தில் நிறுத்துவதற்கு நான் எதற்காக இவர்களுக்கு காசு கொடுக்க வேண்டும்..' என்று திரும்ப திரும்ப எனக்குள்ளேயே கேட்டுக் கொள்வேனே தவிர நேரடியாக அவர்களிடம் தைரியமாக கேட்டதில்லை. ஆனால் இந்த முறை யாரவது வந்து நின்று காசு கேட்டால் அவர்களிடம் 'ஏன்' என்று கேட்டு, தேவைப்பட்டால் பிரச்சனை செய்வதென்று முடிவெடுத்தேன். ஒருவேளை ஏற்கனவே ஆயிரத்து நூறு ரூபாய் கேமராவிற்கு தண்டம் கட்ட போவதால் உள்ளுக்குள் ஏற்பட்ட இனம் புரியாத எரிச்சலின் விளைவாக கூட எனக்கு அப்படி தோன்றி இருக்கலாம்.
என் பைக் இருக்குமிடம் வந்தேன். நான் நிறுத்தும் போது யாரும் அங்கே தென்படவில்லை. ஆனால் பைக்கை நான் எடுக்க முற்பட்டவுடன், வேகமான காலடி சப்தம் என் பின்னால் கேட்டது. 'எங்க இருந்து தான் வருவானுங்களோ..' என்று நினைத்துக் கொண்டே மெதுவாக திரும்பினேன். இதோ.. வந்து விட்டான்.. பார்ப்பதற்கு பக்கா லோக்கலாக தெரிந்தான். மழிக்கப்படாத ('not shaved'ஐ தாங்க அப்டி சொன்னேன்) முகம், கலைந்திருந்த தலை, ஆங்காங்கே அழுக்குடன் சுருக்கங்கள் நிறைந்த உடை என்பதாக இருந்தது அவனது தோற்றம். என் பைக்கை வெளியில் எடுக்கும் போது, ஏதோ எனக்கு உதவுவதை போன்று என் பைக்கில் கை வைத்து பின்னால் இழுப்பதாக பாவனை செய்தான். நான் சட்டென்று திரும்பி, அவன் கையை எடுக்குமாறும் நானே பார்த்துக் கொள்கிறேன் என்பதை போன்றும் சைகை செய்தேன். உடனே கையை எடுத்து விட்டு, சற்று தள்ளி நின்றுக் கொண்டான். பைக்கை வெளியில் எடுத்து, நான் அதில் ஏறி அமரும் வரை பொறுமையாக இருந்து விட்டு, "டூ ருபீஸ்.." என்று என்னிடம் கேட்டான்.
"ஒய் (why)..", என்று கேட்டேன்.
நான் கேட்டதை காதில் வாங்காதவன் போல, "டூ ருபீஸ்.." என்று தனது இரண்டு விரல்களை காண்பித்து சற்று சப்தமாக, இன்னும் தெளிவாக மீண்டும் கேட்டான்.
என் முகத்தை சட்டென்று சீரியஸாக மாற்றி, "ஒய் (why)..", என்று மீண்டும் கேட்டேன். இம்முறை எனது குரலை நன்றாக உயர்த்தியிருந்தேன்.
"ஒய் ஷூட் ஐ கிவ் யு டூ ருபீஸ் (why should I give you two rupees)..?", என்று குரலை உயர்த்தி கேட்டேன்.
கண்டிப்பாக அவன் ஏதாவது பிரச்னை செய்வான் என்று எதிர்பார்த்திருந்ததால் சற்று தயாராகவே இருந்தேன். எனக்கு கன்னடம் தெரியாது என்பதால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது கொஞ்சம் விவகாரமான விஷயம் தான். அதிலும் நான் தமிழன் என்று தெரிந்தால் அவ்வளவு தான். 'என்ன தான் நடக்கும்.. பார்த்து விடலாம்..' என்று முடிவெடுத்திருந்தேன்.
ஆனால் என் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு (உள்ளுக்குள் திக் திக்குன்னு இருந்தது எனக்கு தான் தெரியும்), குரலை உயர்த்தி கேள்வி கேட்டதும், நான் ஆச்சரியப்படும் விதமாக அவன் பதில் பேசாமல் சட்டென்று அடங்கி திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டான். 'இவனிடம் மீண்டும் கேட்டால் பிரச்சனை செய்ய ஆரம்பித்து விடுவான்..' என்பதான கலவரம் அவன் முகத்தில் தெரிந்தது (இது பில்டப்புக்காக சொல்லலங்க.. உண்மையிலேயே தான்). அடுத்த முனையில் இன்னொருவன் பைக்கை வெளியில் எடுத்துக் கொண்டிருக்க அவனை நோக்கி போனான்.
'ஹே.. எங்கடா போற.. பெரிய பில்டப்போட வந்திருக்கேன்.. அதுக்காகவாச்சும் சின்னதா சண்டை போட்டுட்டு போடா..' என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டே பைக்கை கிளப்பினேன். 'அடப்பாவிகளா.. இவ்ளோ தானா நீங்க'.. 'இது தெரியாம இவ்ளோ நாள் இவனுங்களுக்கு காசு கொடுத்துட்டு இருந்தேனே' என்று தோன்றியது. பல நேரங்களில் நம்மிடம் அநியாயம் செய்பவர்கள் பலவீனமானவர்களாக இருந்தாலும் கூட, நாம் எதிர்த்து கேட்க பயந்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அவர்கள் நம்மை ஏமாற்றுவதற்கும் அதிகாரம் செய்வதற்கும் இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதாக எனக்கு தோன்றியது. குரலை உயர்த்தி 'ஹே என்ன..' என்று இனி கேட்டு தான் பாருங்களேன். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
PS: இந்த பதிவிற்கு 'எம்.ஜி. ரோட்டில் நடந்தது என்ன.. குற்றம்.. ஒரு சிறப்பு பார்வை..' என்று தொலைகாட்சிகளில் வருவதை போன்று டைட்டில் வைக்கலாமென்று தான் நினைத்தேன். சரி ஓவரா எதுக்கு பில்டப் கொடுத்துக்கிட்டு என்று தலைப்பை மாற்றி விட்டேன்.
Sunday, February 7, 2010
இன்னும் சில சிந்தனைகள்.. (2)
நீண்ட நாட்கள் பழகி உறவாடியவர்களுடன் விரிசல் ஏற்பட்டு, அவர்களை விட்டு பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறதென்றால், அது "சரியான" காரணங்களுக்காகவாவென்று (right reason ) மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தி கொள்வது நல்லது. காரணம், நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி கொள்வதென்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல. அது ஓரிரவில் (over night) நிகழும் அதிசயமுமல்ல. யாரென்றே தெரியாத மனிதர்களுடன் புன்னகைகளை பரிமாறி கொள்வது கூட மிக கடினமான காரியம் தான். புன்னகைப்பதற்கே பலமுறை யோசிக்க வேண்டியதாக உள்ளது. அப்படியிருக்கும் போது பல மாதங்கள் வருடங்களென்று பழகியவர்களுடன் விரிசல்கள் விழுவதற்கும், அத்தகைய உறவுகளை முடித்துக் கொள்வதற்கும் எதற்காக அவசரபட வேண்டும்.
உண்மையிலேயே கருத்து வேறுபாடுகள் வரும் சூழ்நிலைகளிலும் கூட 'நமது உறவு முக்கியம்' என்கிற எண்ணத்துடன் இருவரும் பிரச்சனைகளை கலந்தாலோசித்தால், பல நேரங்களில் அத்தகைய கருத்து வேறுபாடுகளை புறக்கணித்து மீண்டும் உறவை தொடர்வதான எண்ணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஒருமுறை என்னுடன் வேலை செய்யும் எனது நண்பரொருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது இன்னொருவன் மீது எனக்கிருந்த கோபத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். "அவன் இப்படியெல்லாம் பண்றப்ப எனக்கு அவன் மேல செம கோவம் வருதுங்க..", என்றேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, "பால்.. எப்பவுமே கோவத்த சூழ்நிலை மேல காட்டணுமே தவிர மனுஷங்க மேல கிடையாது.. அப்போ தான் ரிலேஷன்ஷிப்லே (relationship) ப்ராப்ளம் வராம பாத்துக்கலாம்..", என்றார்.
அவர் சொன்னது ஒரு விதத்தில் சரியென்றும் பட்டது. எப்பொழுதுமே அவ்வாறு முடியாது என்றாலும், முடிந்தவரை கோபத்தையும் ஆதங்கத்தையும் சூழ்நிலைகள் மீது காட்டுவது நல்லது. கோபத்தின் பெரும் பகுதியை சூழ்நிலைகள் மீதும், கோபத்தின் மிக சிறிய அளவை மனிதர்கள் மீதும் காட்ட முயலும் போது, மனிதர்களுடனான உறவில் மிக பெரிய விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாது, அத்தகைய அணுகுமுறை சூழ்நிலைகளை ஆராயவும், அத்தகைய பிரச்சனை வரும் சூழ்நிலைகளை எதிர்காலத்தில் தவிர்க்கவும் உதவும். மனிதர்கள் மீது கோபம் கொள்ளும் போது, தொடர்ந்து அவர்கள் செய்யும் காரியங்களையும் கோப கண்ணோடு நம்மையும் அறியாமல் நாம் பார்க்க ஆரம்பிக்க வாய்ப்புகள் அதிகம். கோபமும் ஆதங்கமும் மனிதர்கள் மீது காட்டப்படும் போது, எதிர்காலத்தில் அவர்கள் எது செய்தாலும் அதிலே இருக்கும் நல்லவைகளை ஒதுக்கி விட்டு, அவர்கள் செய்வதில் ஒளிந்திருக்கும் தவறுகளையே நமக்கு பெரிதுபடுத்தி காட்டும்.
அதே நேரத்தில், எப்போதுமே சூழ்நிலைகளை மட்டுமே குறை சொல்லவும் முடியாது. காரணம் ஒரு மனிதனின் உண்மையான குணங்களை சூழ்நிலைகளே வெளிக் கொணர்கின்றன. ஒருவன் எப்படிபட்டவன் என்பதை சில சூழ்நிலைகளில் அவன் நடந்து கொள்ளும் விதத்திலேயே புரிந்து கொள்ள முடியும். எனவே பிரச்னை வருவதான சூழ்நிலைகளில் மற்றவருடைய குணாதிசயங்களையும் அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும். நடந்தவைகளை பல கோணங்களிலிருந்து ஆராய்வதுடன், அதை சம்பந்தபட்டவர்களுடன் கலந்துரையாடுவதும் பிரச்சனைகளுக்கான காரணம் என்னவென்பதை அறிய உதவும். தவிர்க்க கூடிய சூழ்நிலைகளினால் பிரச்சனையும் கருத்து வேறுபாடுகளும் வருகிற பட்சத்தில், அத்தகைய சூழ்நிலைகளை தவிர்க்க முயலலாம். ஆனால் அத்தகைய சூழ்நிலைகள் தவிர்க்க முடியாதவை என்றாலோ, அவை மீண்டும் மீண்டும் அரும்புவதற்கு வாய்ப்புகள் அதிகமென்றாலோ முடிவெடுப்பதென்பது சற்று கடினமான விஷயம் தான்.
சில நேரங்களில் இருவருகிடையேயான குணாதிசயங்கள் ஒத்து போகாமலும், கருத்து வேறுபாடுகள் தீர்க்க முடியாததாகவும் அமைவதென்பது இயற்கை. அது மாற்ற முடியாதது. அத்தகைய முரண்பாடுகளை சகித்துக் கொண்டு போகமுடியாத பட்சத்தில், 'நாம் இருவருக்கும் ஒத்து போகவில்லை' என்பதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. அத்தகைய நேரங்களில் பிரிவென்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதே நேரத்தில் நன்றாக பழகிவிட்ட சில உறவுகளில் விழும் விரிசல்கள் தவறான புரிந்து கொள்ளுதல்களினாலோ அல்லது அகங்காரத்தினாலோ (ego) அல்லது தற்காலிகமாக வாழ்வில் புகுந்து கொள்ளும் சூழ்நிலைகளினாலோ இல்லாதவாறு பார்த்து கொள்வோமே. ஏனென்றால் உறவுகள் மதிப்புமிக்கவை. அவை அமைவதென்பது அரிது. அவ்வாறான உறவுகளில் விரிசல்களும் பிரிவும் ஏற்படுகிறதென்றால் அது சரியான காரணங்களுக்காக மட்டும் இருக்கட்டும். உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக இருக்க வேண்டாமே..
உண்மையிலேயே கருத்து வேறுபாடுகள் வரும் சூழ்நிலைகளிலும் கூட 'நமது உறவு முக்கியம்' என்கிற எண்ணத்துடன் இருவரும் பிரச்சனைகளை கலந்தாலோசித்தால், பல நேரங்களில் அத்தகைய கருத்து வேறுபாடுகளை புறக்கணித்து மீண்டும் உறவை தொடர்வதான எண்ணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஒருமுறை என்னுடன் வேலை செய்யும் எனது நண்பரொருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது இன்னொருவன் மீது எனக்கிருந்த கோபத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். "அவன் இப்படியெல்லாம் பண்றப்ப எனக்கு அவன் மேல செம கோவம் வருதுங்க..", என்றேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, "பால்.. எப்பவுமே கோவத்த சூழ்நிலை மேல காட்டணுமே தவிர மனுஷங்க மேல கிடையாது.. அப்போ தான் ரிலேஷன்ஷிப்லே (relationship) ப்ராப்ளம் வராம பாத்துக்கலாம்..", என்றார்.
அவர் சொன்னது ஒரு விதத்தில் சரியென்றும் பட்டது. எப்பொழுதுமே அவ்வாறு முடியாது என்றாலும், முடிந்தவரை கோபத்தையும் ஆதங்கத்தையும் சூழ்நிலைகள் மீது காட்டுவது நல்லது. கோபத்தின் பெரும் பகுதியை சூழ்நிலைகள் மீதும், கோபத்தின் மிக சிறிய அளவை மனிதர்கள் மீதும் காட்ட முயலும் போது, மனிதர்களுடனான உறவில் மிக பெரிய விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாது, அத்தகைய அணுகுமுறை சூழ்நிலைகளை ஆராயவும், அத்தகைய பிரச்சனை வரும் சூழ்நிலைகளை எதிர்காலத்தில் தவிர்க்கவும் உதவும். மனிதர்கள் மீது கோபம் கொள்ளும் போது, தொடர்ந்து அவர்கள் செய்யும் காரியங்களையும் கோப கண்ணோடு நம்மையும் அறியாமல் நாம் பார்க்க ஆரம்பிக்க வாய்ப்புகள் அதிகம். கோபமும் ஆதங்கமும் மனிதர்கள் மீது காட்டப்படும் போது, எதிர்காலத்தில் அவர்கள் எது செய்தாலும் அதிலே இருக்கும் நல்லவைகளை ஒதுக்கி விட்டு, அவர்கள் செய்வதில் ஒளிந்திருக்கும் தவறுகளையே நமக்கு பெரிதுபடுத்தி காட்டும்.
அதே நேரத்தில், எப்போதுமே சூழ்நிலைகளை மட்டுமே குறை சொல்லவும் முடியாது. காரணம் ஒரு மனிதனின் உண்மையான குணங்களை சூழ்நிலைகளே வெளிக் கொணர்கின்றன. ஒருவன் எப்படிபட்டவன் என்பதை சில சூழ்நிலைகளில் அவன் நடந்து கொள்ளும் விதத்திலேயே புரிந்து கொள்ள முடியும். எனவே பிரச்னை வருவதான சூழ்நிலைகளில் மற்றவருடைய குணாதிசயங்களையும் அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும். நடந்தவைகளை பல கோணங்களிலிருந்து ஆராய்வதுடன், அதை சம்பந்தபட்டவர்களுடன் கலந்துரையாடுவதும் பிரச்சனைகளுக்கான காரணம் என்னவென்பதை அறிய உதவும். தவிர்க்க கூடிய சூழ்நிலைகளினால் பிரச்சனையும் கருத்து வேறுபாடுகளும் வருகிற பட்சத்தில், அத்தகைய சூழ்நிலைகளை தவிர்க்க முயலலாம். ஆனால் அத்தகைய சூழ்நிலைகள் தவிர்க்க முடியாதவை என்றாலோ, அவை மீண்டும் மீண்டும் அரும்புவதற்கு வாய்ப்புகள் அதிகமென்றாலோ முடிவெடுப்பதென்பது சற்று கடினமான விஷயம் தான்.
சில நேரங்களில் இருவருகிடையேயான குணாதிசயங்கள் ஒத்து போகாமலும், கருத்து வேறுபாடுகள் தீர்க்க முடியாததாகவும் அமைவதென்பது இயற்கை. அது மாற்ற முடியாதது. அத்தகைய முரண்பாடுகளை சகித்துக் கொண்டு போகமுடியாத பட்சத்தில், 'நாம் இருவருக்கும் ஒத்து போகவில்லை' என்பதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. அத்தகைய நேரங்களில் பிரிவென்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதே நேரத்தில் நன்றாக பழகிவிட்ட சில உறவுகளில் விழும் விரிசல்கள் தவறான புரிந்து கொள்ளுதல்களினாலோ அல்லது அகங்காரத்தினாலோ (ego) அல்லது தற்காலிகமாக வாழ்வில் புகுந்து கொள்ளும் சூழ்நிலைகளினாலோ இல்லாதவாறு பார்த்து கொள்வோமே. ஏனென்றால் உறவுகள் மதிப்புமிக்கவை. அவை அமைவதென்பது அரிது. அவ்வாறான உறவுகளில் விரிசல்களும் பிரிவும் ஏற்படுகிறதென்றால் அது சரியான காரணங்களுக்காக மட்டும் இருக்கட்டும். உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக இருக்க வேண்டாமே..
Subscribe to:
Comments (Atom)