Tuesday, August 6, 2013

எழுப்புதல்

உன்னை எழுப்பி ஆச்சர்யப்படுத்த
சூடாய் கொஞ்சம் தேநீர் தயாரித்து
கவனமாய் அதில் சர்க்கரை சேர்த்து 
பூனை நடையில் கட்டிலடைந்து
துயில் மீளா உன் முகத்தின் 
மூடிய இமைகளைப் ...

எழுப்பினாய் 
நீ 
என்னை..
தேநீர் 
ஆறிப் போயிருந்தது..!!

-- பால் ஆரோக்கியம் 

No comments:

Post a Comment