பெரும்பாலான நேரங்களில் வேலை பளுவின் காரணமாக எனது நண்பர்களுடனான எனது தொடர்பில் சிறிய இடைவெளி விழுவதுண்டு... அப்படி சில வாரங்கள் நான் பேசாமல் இருந்து விட்டு, மீண்டும் தொலைப்பேசியில் அழைக்கும் போது, எனது நண்பர்களில் ஒருவன் மட்டும் எப்போதுமே, "ஏன்டா நாயே... உனக்கு இப்போ தான் என் ஞாபகம் வந்துச்சா? நீயெல்லாம் ஒரு நண்பனா டா? உனக்கு எப்போ என் ஞாபகம் வந்து நீ போன் பண்ணுற அப்படினு பாக்க தான் நானும் உனக்கு போன் பண்ணாமலேயே இருந்தேன்...", என்று ஆரம்பித்து கண்ணா பின்னாவென்று என்னை இரண்டு நிமிடங்களாவது திட்டிவிட்டு தான் அவன் சாதாரணமாக பேச ஆரம்பிப்பான்...
என்னமோ தெரியாது, அவன் திட்டும் போது மட்டும் எனக்கு கோபத்திற்குப் பதிலாக சிரிப்பு மட்டுமே வரும்... நான் சிரிப்பதற்கும் சேர்த்து மேலும் சில வினாடிகள் அவன் திட்டுவான்... "உனக்கு என்ன தான் வேலை இருந்தாலும், இரண்டு நிமிடம் எனக்கு கால் பண்ணி, 'என்ன ஜெயராமா எப்படி இருக்க?' அப்படினு உன்னால கேட்க முடியாதா?" என்று என் மீது உரிமையோடு கோபப்படும் என் நண்பன் 'ஜெயராம்'ன் கோபம் எனக்கு எப்போதுமே பிடித்த ஒன்று...
மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!
Thursday, October 16, 2008
Wednesday, October 15, 2008
Go Green... Think Before You Print!
Sometimes back, i received an email from my friend Lingaraj. After i finished reading the email, i noticed that he has had new quote at his signature and that read:
"Go Green. Think before you print."
I don't know why but i liked that quote and wanted to follow it. Sometimes you cannot say why you like something but it is just that 'you like it'... I thought 'wouldn't this world be more beautiful if it is greener'... I wanted to do something for that and i decided that "here after, i am going to be very careful while printing and won't waste any paper, I won't waste paper-cups, I won't waste tissue papers, in short, i won't waste any paper and i will be very careful about how i am using it". I know that i am not going to save all the trees in this world, but i know that at least i can save one tree in my life time by effectively using the papers... Lets see...
So that quote, "Go Green. Think before you print.", which made me to think deeply, is one of the quotes that i liked very much and one of the quotes which i want to follow and yeah, following...
"Go Green. Think before you print."
I don't know why but i liked that quote and wanted to follow it. Sometimes you cannot say why you like something but it is just that 'you like it'... I thought 'wouldn't this world be more beautiful if it is greener'... I wanted to do something for that and i decided that "here after, i am going to be very careful while printing and won't waste any paper, I won't waste paper-cups, I won't waste tissue papers, in short, i won't waste any paper and i will be very careful about how i am using it". I know that i am not going to save all the trees in this world, but i know that at least i can save one tree in my life time by effectively using the papers... Lets see...
So that quote, "Go Green. Think before you print.", which made me to think deeply, is one of the quotes that i liked very much and one of the quotes which i want to follow and yeah, following...
நண்பனின் வார்த்தைகள்...
சில நாட்களுக்கு முன்பு, நானும் என் நண்பனும் பேருந்தில் பயணித்து கொண்டிருந்தோம்... அப்போது எனது அடுத்த சகோதரியின் திருமணம் பற்றிய பேச்சு வந்த போது, நான் எதிர்பார்க்கும் பணப் பற்றக்குறை பற்றி அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்... சில மாதங்களுக்கு முன்பு தான் எனது ஒரு சகோதரியின் திருமணத்திற்காக நான் எடுத்திருந்த loan பற்றி சொன்னேன்... அதனால் மீண்டும் ஒரு loan உடனே கிடைப்பது கஷ்டம் என்று அவனிடத்தில் நான் சொல்லிக்கொண்டிருந்த போது, "ரொம்ப யோசிக்காதடா... நான் எப்படியும் இன்னும் சில வாரங்களில் வேலையில் சேர்ந்து விடுவேன்... நான் உனக்கு லோன் எடுத்து தருகிறேன்... அதை வைத்து திருமணத்தை நடத்தி விடலாம்...", என்று சொன்னான் அவன்...
என் சகோதரியின் திருமண பேச்சை பற்றி எதேச்சையாக தான் பேச ஆரம்பித்தோம்... அவன் அப்படி சொல்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை... அவன் அப்படி சொன்னது எனக்கு ஆறுதலாய் இருந்தது... அவன் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன... எனக்கு உதவ நினைத்த அந்த நண்பன் பாலாஜி'ன் சிநேகம் எனக்கு எப்போதுமே பிடித்த ஒன்று...
என் சகோதரியின் திருமண பேச்சை பற்றி எதேச்சையாக தான் பேச ஆரம்பித்தோம்... அவன் அப்படி சொல்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை... அவன் அப்படி சொன்னது எனக்கு ஆறுதலாய் இருந்தது... அவன் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன... எனக்கு உதவ நினைத்த அந்த நண்பன் பாலாஜி'ன் சிநேகம் எனக்கு எப்போதுமே பிடித்த ஒன்று...
Tuesday, October 14, 2008
அசரிரி..
என் நண்பன் 'ஜெயராம்'ன் கவிதைகள் எப்போதுமே என் மனம் கவர்பவை... குடும்பத்தை விட்டு பல மைல்கள் தொலைவில் 'வேலை செய்கிறோம்/தேடுகிறோம்' என்கிற பெயரில் தாய், தந்தை, சகோதர சகோதரிகளின் அருகாமையை தொலைத்து வருந்தும் எல்லாருக்கும் இந்த கவிதை மிகவும் பிடிக்கும்... அந்த வகையில் இது என் மனம் கவர்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை...
"விடியல் ஞாபகத்தில்
விழித்துக்கொண்டது
இமைகள்..
காசில்லா நேரங்களில்
தந்தையின் ஞாபகம்
பசிவரும் நேரங்களில்
தாயின் ஞாபகம்..
உண்ணும் தருவாயில்
'இன்னும் கொஞ்சம்..
இன்னும் கொஞ்சம்..'
அக்காவின் ஞாபகம்
கூடத்தில் நான் மட்டும் -
தங்கையின் ஞாபகம்
சாலையோரத்தில் நடந்து சென்றேன்
கால் வலித்தது
அண்ணாவின் ஞாபகம்
உணர்வுகளுக்கிடையே
உணவு மட்டும -
இடை விட்டு..
விதியை நினைத்தபடி
இமைமூடி அமர்ந்தேன்..
"என்னடா சாப்டியா.." கேட்டவாறே
உள்ளே நுழைந்தான்
நண்பன் -
அம்மாவின் அசரிரி.."
இந்தக் கவிதையைப் படிக்கும் போது, அப்படி ஒரு சூழலில் உள்ள ஒருவனின் உணர்வுகளை அப்படியே படிப்பவரின் மனதிற்குள் உணர முடியும்... நான் படித்தவைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று...
'ஜெயராம்'ன் மற்ற கவிதைகளை நீங்கள் இங்கே படிக்கலாம்...
"விடியல் ஞாபகத்தில்
விழித்துக்கொண்டது
இமைகள்..
காசில்லா நேரங்களில்
தந்தையின் ஞாபகம்
பசிவரும் நேரங்களில்
தாயின் ஞாபகம்..
உண்ணும் தருவாயில்
'இன்னும் கொஞ்சம்..
இன்னும் கொஞ்சம்..'
அக்காவின் ஞாபகம்
கூடத்தில் நான் மட்டும் -
தங்கையின் ஞாபகம்
சாலையோரத்தில் நடந்து சென்றேன்
கால் வலித்தது
அண்ணாவின் ஞாபகம்
உணர்வுகளுக்கிடையே
உணவு மட்டும -
இடை விட்டு..
விதியை நினைத்தபடி
இமைமூடி அமர்ந்தேன்..
"என்னடா சாப்டியா.." கேட்டவாறே
உள்ளே நுழைந்தான்
நண்பன் -
அம்மாவின் அசரிரி.."
இந்தக் கவிதையைப் படிக்கும் போது, அப்படி ஒரு சூழலில் உள்ள ஒருவனின் உணர்வுகளை அப்படியே படிப்பவரின் மனதிற்குள் உணர முடியும்... நான் படித்தவைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று...
'ஜெயராம்'ன் மற்ற கவிதைகளை நீங்கள் இங்கே படிக்கலாம்...
அபூர்வம்...
சில நாட்களுக்கு முன்பு எதேச்சையாய் ஒரு புத்தக கண்காட்சி சென்றிருந்த போது கண்ணில் பட்ட ஒரு சிறிய கவிதை புத்தகம் ஒன்றை வாங்கினேன்... "குழந்தைகள் ஊருக்குப் போய்விட்டன" என்று தலைப்பிட்டிருந்த அந்த கவிதை புத்தகத்தில் பெரும்பாலான கவிதைகள் மிக அருமையாக இருந்தன...
குறிப்பாக என் மனம் கவர்த்த ஒரு கவிதை இதோ...
"துடைப்பம்,
பால் பாக்கெட்,
கரண்டி,
காய்கறி,
அழுக்குத் துணி,
சோப்பு... என
ஏதேனுமொன்று
அக்காவின் கைகளில்
எப்போதும் தென்படும்.
வீட்டுக்கு ஒதுங்கும்
'அந்த' நாட்களில் மட்டும்
அபூர்வமாய் பார்க்க முடிகிறது -
அக்காவின் கையில்
புத்தகமொன்றை."
சமூகத்தில் இன்னமும் சில கிராம நகரங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகளையும், இன்னமும் பல வீடுகளில் பெண்கள் தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று தொடரும் குறுகிய மனப்பான்மையையும் மெலிதாய் வெளிச்சம் போட்டு காட்டும் 'மு.முருகேஷ்'ன் இந்த கவிதை, என் மனதைக் கவர்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை...
குறிப்பாக என் மனம் கவர்த்த ஒரு கவிதை இதோ...
"துடைப்பம்,
பால் பாக்கெட்,
கரண்டி,
காய்கறி,
அழுக்குத் துணி,
சோப்பு... என
ஏதேனுமொன்று
அக்காவின் கைகளில்
எப்போதும் தென்படும்.
வீட்டுக்கு ஒதுங்கும்
'அந்த' நாட்களில் மட்டும்
அபூர்வமாய் பார்க்க முடிகிறது -
அக்காவின் கையில்
புத்தகமொன்றை."
சமூகத்தில் இன்னமும் சில கிராம நகரங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகளையும், இன்னமும் பல வீடுகளில் பெண்கள் தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று தொடரும் குறுகிய மனப்பான்மையையும் மெலிதாய் வெளிச்சம் போட்டு காட்டும் 'மு.முருகேஷ்'ன் இந்த கவிதை, என் மனதைக் கவர்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை...
அவனும் வந்தான் கல்லூரிக்கு...
சில கவிதைகளைப் படிக்கும் போது, 'அடடே நமக்கு இது தோன்றவில்லையே...' என்று எனக்கு தோன்றுவதுண்டு... அப்படிப்பட்ட கவிதைகளும், கவிதை வரிகளும் எப்போதுமே என்னை திரும்ப திரும்ப படிக்க தூண்டும்... அப்படி நான் ரசித்த கவிதைகளில் ஒன்று தான் என் நண்பன் ஜானி பிரகாஷ் எழுதிய "அவனும் வந்தான் கல்லூரிக்கு"...
"எதிர்காலத்தின் முகவரி தேடி
நாங்கள் - நிகழ்காலம்தேடி அவன்
பெற்றோரின் தலையில் சுமை வைத்து
சுற்றி திரிந்த எங்களுடன் - அவன்
குடும்ப சுமை குறைந்தளவு குறைக்க
ஈன்றவர்களின் வியர்வையெல்லாம்
நறுமனமாய் எங்கள் சட்டையில் - தன்
வியர்வையில் வீட்டிற்கே நறுமணம் அளிக்க
புத்தகம் தூக்காமல்
புதுச்சட்டை அணியாமல்
உயர்நிலை கற்காமல்
ஒன்பது அகவை தாண்டாமல்
அவனும் வந்தான் கல்லூரிக்கு
உணவகத்தில் தட்டு கழுவும் வேலைக்கு .."
சமுதாய அக்கறையும், பொதுநலப் பார்வையும் உள்ளவர்களுக்கு மட்டுமே தோன்றும் எண்ணங்களின் எழுத்து வடிவங்கள்.. எத்தனையோ முறை என் கல்லூரியில் இது போன்றவர்களை நான் பார்த்திருந்த போதிலும், 'என் மனதில் தோன்றவில்லையே இந்த கவிதை' என்ற ஏக்கம் இதை படித்த போது எனக்கு ஏற்பட்டது...
நான் 'படித்தவைகளில் எனக்கு பிடித்தவை'களில் இதுவும் ஒன்று...
ஜானி பிரகாஷ் எழுதிய மாற்ற கவிதைகளை இங்கே படிக்கலாம்...
"எதிர்காலத்தின் முகவரி தேடி
நாங்கள் - நிகழ்காலம்தேடி அவன்
பெற்றோரின் தலையில் சுமை வைத்து
சுற்றி திரிந்த எங்களுடன் - அவன்
குடும்ப சுமை குறைந்தளவு குறைக்க
ஈன்றவர்களின் வியர்வையெல்லாம்
நறுமனமாய் எங்கள் சட்டையில் - தன்
வியர்வையில் வீட்டிற்கே நறுமணம் அளிக்க
புத்தகம் தூக்காமல்
புதுச்சட்டை அணியாமல்
உயர்நிலை கற்காமல்
ஒன்பது அகவை தாண்டாமல்
அவனும் வந்தான் கல்லூரிக்கு
உணவகத்தில் தட்டு கழுவும் வேலைக்கு .."
சமுதாய அக்கறையும், பொதுநலப் பார்வையும் உள்ளவர்களுக்கு மட்டுமே தோன்றும் எண்ணங்களின் எழுத்து வடிவங்கள்.. எத்தனையோ முறை என் கல்லூரியில் இது போன்றவர்களை நான் பார்த்திருந்த போதிலும், 'என் மனதில் தோன்றவில்லையே இந்த கவிதை' என்ற ஏக்கம் இதை படித்த போது எனக்கு ஏற்பட்டது...
நான் 'படித்தவைகளில் எனக்கு பிடித்தவை'களில் இதுவும் ஒன்று...
ஜானி பிரகாஷ் எழுதிய மாற்ற கவிதைகளை இங்கே படிக்கலாம்...
Subscribe to:
Comments (Atom)