இப்போதெல்லாம் மனதில் எண்ணங்களால் எழும் சலசலப்பு சற்று அதிகமாகி விட்டது. அதனாலேயோ என்னவோ கவனம் செலுத்த நினைக்கும் பெரும்பாலானவற்றில் கவனம் செலுத்த முடிவதில்லை. இப்போதெல்லாம் பதிவுகளுக்கிடையிலான இடைவெளி சற்று அதிகமாகி வருவதற்கு அது கூட காரணமாக இருக்கலாம்.
ஏதாவதொன்றை பற்றிய பயம் எப்போதும் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் வர போகாத இழப்புகளை பற்றி வீணாக சிந்திப்பதாலா அல்லது இழந்த பின் வருத்தப்படுவதை விட இழக்கும் முன் முன்னெச்சரிக்கையாக இருப்பது நலமென்னும் எண்ணம் தோன்றுவதாலா என்று தெரியவில்லை.
வாழ்க்கையை வாழும் நிமிடங்களை விட தேவையில்லாத பல விஷயங்களை பற்றி சிந்திப்பதிலேயே தான் பலர் காலம் கழிக்கின்றனர். நானொன்றும் அதில் விதிவிலக்கல்ல. கடந்த காலங்களை பற்றிய கவலைகளுக்கும், எதிர்காலங்களை பற்றிய முன்னெச்சரிக்கை சிந்தனைகள் மற்றும் பயங்களுக்கும் மத்தியில் நிகழ்காலமென்று ஒன்றிருப்பது தெரியாமலேயே போய்விடுகிறது.
எல்லாம் உணர்ந்து தெளிந்து, 'சரி இனியாவது வாழ்க்கையை நிகழ்காலத்தில் வாழலாம்' என்று முடிவெடுக்கும் சமயத்தில் தான் முன்பின் அறிந்திடாத ஏதாவதொரு பிரச்சனையொன்று முன்னெச்சரிக்கையின்றி தலை தட்ட, செய்வதறியாது இப்போதும் சிந்தனை தறிகெட்டோட, எப்போதும் போலவே சப்தமின்றி சொல்லிக் கொள்ளாமல் கை விட்டு நழுவுகின்றன நிகல்காலமென்று சொல்லப்படும் வாழ்க்கையின் இப்போதைய நிமிடங்கள்..
ரொம்ப எதார்த்தமா இருக்கு....உண்மையும் கூட
ReplyDeletereally true....good paul...
ReplyDeleteBharathi, Shiva,
ReplyDeleteThanks for your comments. I'm happy to read your comments.. :-)