புன்னகைகள் மட்டுமே பரிசாக வேண்டுமென்றால் புகைப்படங்களிலும் ஓவியங்களிலும் தான் வாழ்க்கையை நடத்த வேண்டும். புன்சிரிப்புகள் அங்கே தான் சிதறி கிடக்கின்றன.. மலிவாக!! உறைந்து நிற்பவைகளில் மட்டுமே புன்னகைகள் நிரந்தரமாகின்றன. ஒருவேளை ஓவியங்களோ புகைப்படங்களோ உயிர் பெறுமாயின் அவற்றின் புன்னகைகளும் காணாமல் போக வாய்ப்புண்டு. உயிர் கொண்டு அசைந்தாடும் வாழ்க்கையோ சற்று வித்தியாசமானது. மேகங்கள் மாறிக் கொண்டே இருக்கும் வானை போன்றது. எனவே தான் நிரந்தரமான எதுவும் அதில் தென்படுவதில்லை..
மேலும் கீழும் அசைந்தாடும் கடலின் மேற்பரப்பில், அதன் இசைக்கேற்ப தாளம் போட்டுக் கொண்டு மெல்ல அடிவானம் நோக்கி நகரும் படகை போன்றது தான் வாழ்க்கையும். அங்கே சீரான பயணங்கள் என்பது பெரும்பாலும் ஓட்டுபவரின் திறனையோ அல்லது படகின் அமைப்பையோ பொறுத்து அமைவதில்லை.. அது முழுக்க முழுக்க படகை தாங்கி பிடிக்கும் கடலையும், அதன் மனநிலையையும் பொறுத்தது.. சுற்றி வரும் காற்றை பொறுத்தது.. நிழல் கொடுக்கும் மேகங்களைப் பொறுத்தது.. அங்கே எதற்கும் உத்திரவாதமில்லை.. எதுவும் உறுதியளிக்கப்படுவதுமில்லை.
அமைதியும் சீற்றமும் மாறி மாறி முகம் காட்ட, பயணத்தின் வெற்றியோ புன்முறுவலுடன் அவற்றை சந்தித்து முன்னோக்கி நகர்தலை பொறுத்தே அமைகிறது.. அங்கே தன்னம்பிக்கை இழத்தலென்பது துடுப்பை தவற விடுவதை போன்றது. துடுப்பை இழந்தவன் முன்னோக்கி நகர்ந்ததாகவோ, கரையேறி மகிழ்ந்ததாகவோ தகவலில்லை.. தத்தளித்து சில நாட்களில் தண்ணீருக்குள் மூழ்க வேண்டியது தான். புயலுக்கு பின் அமைதியென்பது இயற்கையின் விதி. அமைதியின் அடியாழத்தில் புயலொன்று மறைவாக இருப்பதென்பதும் மாறாதது.. மறுக்கவியலாததும் கூட.. எனவே தான் எதிர்பாராதவைகளை எதிர்பார்த்து எப்போதும் தயாராகவே இருக்க வேண்டியுள்ளது.
சோகங்களும் அழுகைகளும் ஆங்காங்கே தென்படுகின்றன என்பதற்காக பயணத்தை நிறுத்துவதோ, தொடர்ந்து பயணிப்பதற்கு அத்யாவசியமான துடுப்பு போன்ற (தன்)நம்பிக்கையை கைவிடுவதோ சரியான முடிவன்று. புன்னகைகளிலேயே வாழ்க்கை அமிழ்ந்திருக்கட்டுமென்று எதிர்பார்த்திருப்பதை விடுத்து வாழ்க்கையின் இயற்கையான சில நியதிகளை ஏற்றுக் கொள்ளும் போது, அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் பயணத்தை தொடர்ந்திட முடியும்..
மாறிவரும் சூழ்நிலைகளையும், ஆங்காங்கே வலி ஏற்படுத்தும் சில நிகழ்வுகளையும் வாழ்வின் சுவாரசியமான அம்சங்களாக பாவிக்க ஆரம்பிக்கும் போது, அவை உங்களுக்கு நிகழ்கின்றன என்றாலும் கூட மூன்றாம் மனிதனாக அவற்றை சில நேரங்களில் ரசித்திட முடியும்.. மற்ற நேரங்களில், அவ்வாறான மனோபாவமானது அத்தகைய நிகழ்வுகளால் ஏற்படும் வலியின் வீரியத்தை குறைத்திட உதவும். அழுகையும் சில நேரங்களில் அழகு தான். காரணம், அவை வலியினால் ஏற்பட்டாலும் கூட நமக்கு சில பாடங்களை கற்றுத் தருவதால்!
மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!
Saturday, March 27, 2010
Wednesday, March 17, 2010
கொஞ்சம் சந்நியாசம் பற்றி..
நடிகையுடன் நித்யானந்தாவென்று பலரும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்திருக்க, என் மனமோ 'இதற்கு இவ்வளவு நாட்களா..?' என்பதாகவே கேள்வி எழுப்பியது. ஆசாமிகளை சாமிகளென்று நம்பும் மனிதர்களுக்கு என்ன தான் அதிர்ச்சி வைத்தியங்கள் அவ்வபோது கிடைத்த வண்ணமிருந்தாலும், மக்களென்னவோ திருந்துவதாக தெரியவில்லை. கடவுளையே நம்பாதவர்கள் உலவிக்கொண்டிருக்கும் போது, ஆசாமிகளை தெய்வமாக பாவிக்கும் மக்களை நினைக்கும் போது ஒருவிதத்தில் உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும், இன்னொருவிதத்தில் இப்படி ஏமாறுகிறார்களே என்று பரிதாபமும் தோன்றுகிறது.
நித்தியானந்தாவின் எழுத்துக்களென்னவோ படிப்பதற்கு நன்றாக இருக்குமென்பது உண்மை தான். அவரது ஒன்றிரண்டு கட்டுரைகளை குமுதத்தில் படித்திருக்கிறேன். அவர் பேசும் விதமும் மனதை சாந்தப்படுத்தும் விதமாக இருக்குமென்று கேள்விப்படிருக்கிறேன். ஆனால், எப்பொழுது ஒருவன் தன்னை தானே கடவுள் என்று சொல்லிக் கொள்கிறானோ, அப்பொழுதே அங்கு ஏதோ சரியில்லையென்று என் மனம் சொல்ல ஆரம்பித்துவிடுவதுண்டு. 'அன்பே சிவம்' சொல்லும் மனித கடவுள்களில் நம்பிக்கையில்லாதவனல்ல நான். ஆனால் ஒரு மனிதனை கடவுளென்று இன்னொருவன் நினைக்க வேண்டுமே தவிர அவனே சொல்லிக் கொள்ளக் கூடாது. அப்படியே இன்னொருவனை கடவுளென்று நினைக்கிறோமென்பதற்காக அத்தகைய மனிதனிடம் சரணாகதி அடைவதென்பதெல்லாம் கொஞ்சம் அறிவின்மையின் வெளிப்பாடு தான்.
என்ன தான் இருந்தாலும் ஒரு மனிதன் என்பவன் மனிதன் தானே! ஒரு மனிதனுக்குண்டான எல்லா உணர்ச்சிகளும் எல்லா மனிதர்களுக்கும் உண்டென்பது இயற்கை. இதில் யாரும் விதிவிலக்கல்ல.. தன்னை சந்நியாசியென்று பொய் போர்வை போர்த்தி போலி வேடம் தரிக்காமல் இருந்திருந்தால், நித்யானந்தாவை ஒன்றும் சொல்வதற்கில்லை. எவ்வளவோ பேர் நல்ல கருத்துக்களை போதித்து சம்சார வாழ்க்கையில் ஈடுபடவில்லையா என்ன..? போலி வேடம் போடும் போது தான், எல்லாமே போலியாகிவிடுகிறது. அது தான் அதிர்ச்சிக்கு அடித்தளமாகி போகின்றது. ஒருவிதத்தில் அது நம்பிக்கை துரோகமாகிவிடுகிறது.
அவர் பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கெல்லாம் ஆச்சரியமோ அதிர்ச்சியோ பட தேவையில்லை. இயற்கைக்கு விரோதமாக அடக்கி வைக்கும் எதுவுமே அடங்கி இருந்ததாக செய்தியில்லை. எல்லாம் அனுபவித்து, பின்பு அவை பிடிக்காமல் போய் அவற்றின் மீது பற்று குறைந்து சந்நியாசம் போகிறவர்கள் மட்டுமே நிஜமாக சந்நியாசியாக இருக்க முடியுமென்பது என் கருத்து. அல்லது பாலியல் சம்பந்தமான உணர்வுகள் ஆச்சர்யப்படும் விதமாக அவர்களிடம் ஏதோ சில நிறைபாடுகளின் [நிறைபாடா அல்லது குறைபாடா என்று தெரியவில்லை :-)] காரணமாக இல்லாது இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே சந்நியாசமென்பது சாத்தியம்.
வறுமை மற்றும் வாய்ப்பின்மை காரணமாக செய்ய இயலாத சில விஷயங்களை முன்நிறுத்தி, நான் இனி இப்படியே வாழப்போகிறேன் என்று சந்நியாசம் போகிறவர்கள் என்னை பொறுத்த வரையில் வாய்ப்புகளை தேடித் போகிறவர்கள் தான். அப்படியாவது சில வாய்ப்புகள் அமையாதவென்று ஏக்கத்துடன் போகிறவர்கள் அவர்கள். நினைக்க கசப்பாக இருந்தாலும், அது தான் நிதர்சன உண்மை. இயற்கையாகவே உள்ளுக்குள் அனுபவிக்க வேண்டுமென்று உந்துதல் ஏற்படுத்தும் சில விஷயங்களை எவ்வளவு காலம் தான் ஒரு மனிதன் அடக்கியாள முடியும். அடக்கியாழ்தல் என்பது வாய்ப்புகள் அமையாவிட்டால் மட்டுமே உண்டு. உண்மையில் அது அடக்கியாழ்தல் அன்று. அதற்கு பெயர் அடங்கி போதல்.. வேறு வழியின்றி.. சூழ்நிலையின் காரணமாக!!
இப்போதெல்லாம் சந்நியாசம் போகிறேன் அல்லது துறவு பூணுகிறேன் என்பதெல்லாம் 'உங்களை விட அதிக வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து எல்லாவற்றையும் அனுபவிக்க போகிறேன்' என்று அர்த்தமாகி விட்டது. துரதிஷ்டவசமாக மாட்டிக்கொள்வோர் மாட்டிக் கொள்கின்றனர். மற்றவர் மறைவுகளில் இன்னும் வசதியானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டும், வாழ்வின் எல்லா இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அப்படிப்பட்டவர்களிடம் தான் சில மக்கள் தங்களது சுயத்தேவைகளை துறந்து இருப்பனவற்றை அவர்களிடம் கொட்டிக் கொடுத்து வாழ முற்படுகிறார்கள். உண்மையில் துறவு என்பது அத்தகைய மக்களுக்கு தான் மிகவும் பொருந்துமென்று நினைக்கிறேன்.
உண்மையிலேயே துறவறத்தில் ஈடுபடுவோர் தம்மை கடவுளென்று மற்றவர் புகழ்வதையோ வழிபடுவதையோ விரும்பமாட்டார்கள் என்பது தான் உண்மை. துறவென்பது எல்லாவற்றையும் துறத்தல். 'நான் எல்லாவற்றையும் துறக்கிறேன், ஆனால் எனக்கு பெயரும் புகழும் மட்டும் வேண்டுமெ'ன்று சொல்பவர்கள் எப்படி துறவு பூண்டதாக அர்த்தமாகுமென்பது எனக்கு தெரியவில்லை.
நித்தியானந்தாவின் எழுத்துக்களென்னவோ படிப்பதற்கு நன்றாக இருக்குமென்பது உண்மை தான். அவரது ஒன்றிரண்டு கட்டுரைகளை குமுதத்தில் படித்திருக்கிறேன். அவர் பேசும் விதமும் மனதை சாந்தப்படுத்தும் விதமாக இருக்குமென்று கேள்விப்படிருக்கிறேன். ஆனால், எப்பொழுது ஒருவன் தன்னை தானே கடவுள் என்று சொல்லிக் கொள்கிறானோ, அப்பொழுதே அங்கு ஏதோ சரியில்லையென்று என் மனம் சொல்ல ஆரம்பித்துவிடுவதுண்டு. 'அன்பே சிவம்' சொல்லும் மனித கடவுள்களில் நம்பிக்கையில்லாதவனல்ல நான். ஆனால் ஒரு மனிதனை கடவுளென்று இன்னொருவன் நினைக்க வேண்டுமே தவிர அவனே சொல்லிக் கொள்ளக் கூடாது. அப்படியே இன்னொருவனை கடவுளென்று நினைக்கிறோமென்பதற்காக அத்தகைய மனிதனிடம் சரணாகதி அடைவதென்பதெல்லாம் கொஞ்சம் அறிவின்மையின் வெளிப்பாடு தான்.
என்ன தான் இருந்தாலும் ஒரு மனிதன் என்பவன் மனிதன் தானே! ஒரு மனிதனுக்குண்டான எல்லா உணர்ச்சிகளும் எல்லா மனிதர்களுக்கும் உண்டென்பது இயற்கை. இதில் யாரும் விதிவிலக்கல்ல.. தன்னை சந்நியாசியென்று பொய் போர்வை போர்த்தி போலி வேடம் தரிக்காமல் இருந்திருந்தால், நித்யானந்தாவை ஒன்றும் சொல்வதற்கில்லை. எவ்வளவோ பேர் நல்ல கருத்துக்களை போதித்து சம்சார வாழ்க்கையில் ஈடுபடவில்லையா என்ன..? போலி வேடம் போடும் போது தான், எல்லாமே போலியாகிவிடுகிறது. அது தான் அதிர்ச்சிக்கு அடித்தளமாகி போகின்றது. ஒருவிதத்தில் அது நம்பிக்கை துரோகமாகிவிடுகிறது.
அவர் பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கெல்லாம் ஆச்சரியமோ அதிர்ச்சியோ பட தேவையில்லை. இயற்கைக்கு விரோதமாக அடக்கி வைக்கும் எதுவுமே அடங்கி இருந்ததாக செய்தியில்லை. எல்லாம் அனுபவித்து, பின்பு அவை பிடிக்காமல் போய் அவற்றின் மீது பற்று குறைந்து சந்நியாசம் போகிறவர்கள் மட்டுமே நிஜமாக சந்நியாசியாக இருக்க முடியுமென்பது என் கருத்து. அல்லது பாலியல் சம்பந்தமான உணர்வுகள் ஆச்சர்யப்படும் விதமாக அவர்களிடம் ஏதோ சில நிறைபாடுகளின் [நிறைபாடா அல்லது குறைபாடா என்று தெரியவில்லை :-)] காரணமாக இல்லாது இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே சந்நியாசமென்பது சாத்தியம்.
வறுமை மற்றும் வாய்ப்பின்மை காரணமாக செய்ய இயலாத சில விஷயங்களை முன்நிறுத்தி, நான் இனி இப்படியே வாழப்போகிறேன் என்று சந்நியாசம் போகிறவர்கள் என்னை பொறுத்த வரையில் வாய்ப்புகளை தேடித் போகிறவர்கள் தான். அப்படியாவது சில வாய்ப்புகள் அமையாதவென்று ஏக்கத்துடன் போகிறவர்கள் அவர்கள். நினைக்க கசப்பாக இருந்தாலும், அது தான் நிதர்சன உண்மை. இயற்கையாகவே உள்ளுக்குள் அனுபவிக்க வேண்டுமென்று உந்துதல் ஏற்படுத்தும் சில விஷயங்களை எவ்வளவு காலம் தான் ஒரு மனிதன் அடக்கியாள முடியும். அடக்கியாழ்தல் என்பது வாய்ப்புகள் அமையாவிட்டால் மட்டுமே உண்டு. உண்மையில் அது அடக்கியாழ்தல் அன்று. அதற்கு பெயர் அடங்கி போதல்.. வேறு வழியின்றி.. சூழ்நிலையின் காரணமாக!!
இப்போதெல்லாம் சந்நியாசம் போகிறேன் அல்லது துறவு பூணுகிறேன் என்பதெல்லாம் 'உங்களை விட அதிக வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து எல்லாவற்றையும் அனுபவிக்க போகிறேன்' என்று அர்த்தமாகி விட்டது. துரதிஷ்டவசமாக மாட்டிக்கொள்வோர் மாட்டிக் கொள்கின்றனர். மற்றவர் மறைவுகளில் இன்னும் வசதியானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டும், வாழ்வின் எல்லா இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அப்படிப்பட்டவர்களிடம் தான் சில மக்கள் தங்களது சுயத்தேவைகளை துறந்து இருப்பனவற்றை அவர்களிடம் கொட்டிக் கொடுத்து வாழ முற்படுகிறார்கள். உண்மையில் துறவு என்பது அத்தகைய மக்களுக்கு தான் மிகவும் பொருந்துமென்று நினைக்கிறேன்.
உண்மையிலேயே துறவறத்தில் ஈடுபடுவோர் தம்மை கடவுளென்று மற்றவர் புகழ்வதையோ வழிபடுவதையோ விரும்பமாட்டார்கள் என்பது தான் உண்மை. துறவென்பது எல்லாவற்றையும் துறத்தல். 'நான் எல்லாவற்றையும் துறக்கிறேன், ஆனால் எனக்கு பெயரும் புகழும் மட்டும் வேண்டுமெ'ன்று சொல்பவர்கள் எப்படி துறவு பூண்டதாக அர்த்தமாகுமென்பது எனக்கு தெரியவில்லை.
Monday, March 15, 2010
தனிமை பற்றி..
தனிமை ஏற்படுத்தும் வலியின் உணர்வினாலோ என்னவோ தனிமையை பிரதிபலிக்கும் எதனையும் கண்கொண்டு பார்க்க தோன்றுவதில்லை.. வெறிச்சோடிய தெருக்கள்.. தனித்து நிற்கும் மரங்கள்.. ஒற்றைப்பூ செடிகள்.. ஆளரவமற்ற வீடு.. துளிகளற்ற தடாகம்.. துடைக்கப்பட்ட வானம்.. இப்படி எதுவுமே பார்க்க தோன்றுவதில்லை. அண்ணாந்து ஆகாயம் பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் நிலை பிரதிபலிக்கும் நிலவை பார்த்து, 'என் நிலை தானா உனக்கும்..!!' என்று சப்தமிட்டு கேட்க தோன்றுகிறது.. பரிதாபப்படுவதற்கு கூட ஆட்களில்லாத நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது தான்!!
ஓடும் தடாகத்தில் பயணத்தினிடையில் சட்டென்று தடுப்பொன்று தட்டுபட, முன் சென்றுவிட்ட தன் இனத்தவர் பிரிந்து, தடுப்பினுள் சிக்கிக்கொண்ட ஒற்றை மீனின் நிலை தான் என்னுடையதும்..!! நிமிடங்கள் கரைவதை போல் நாமும் கரைந்து வெகு விரைவில் இல்லாமல் போய்விட்டால் நன்றாகவிருக்குமேவென்று தோன்றும் கணங்கள் இல்லாமலில்லை.. என்ன தான் தனிமையின் உணர்வை மனதினுள் புதைக்க முயன்றாலும், அது நீருக்கடியில் அடைக்கப்பட்ட காற்றுக்குமிழியை போல் அவ்வபோது மேலெழுந்த வண்ணமே உள்ளது.
விலங்குகளைப் போன்று சட்டென்று சில நாளில் தூக்கியவருடன் கொஞ்சி மகிழ்ந்து கூடிவிடும் இயல்பு வருவதில்லையேவென்று ஏக்கம் கொண்டதும் உண்டு. ஒருவேளை விலங்கின் மொழி புரியாததாலோ என்னவோ வந்த ஏக்கமது. பழக பழக பக்குவப்படுமென்பது பழமொழியோடு நின்றுவிட்டது போலும்.. தனிமை பழக பழக பக்குவமொன்றும் அடைவதாய் தெரியவில்லை. சுய பரிதாபம் தான் மேலோங்குகிறது..
விதி மாற்ற முயலும் முயற்சிகள் வீணாகவே போகின்றன.. விமோசனம் கிடைக்குமென்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு விடியலும் விடைகளில்லாமலேயே விடைபெறுகின்றன. உள்ளுக்குள் படர்ந்திருக்கும் தனிமை வெளியிலும் கலந்துவிடும் நிமிடங்களை கையாள்வது சற்று கடினம் தான். சுற்றமும் பிரதிபலிக்கும் தனிமை இன்னும் கொடியது. அது ஏன் எப்போதும் விடை கொடுக்கவே எத்தனிக்கின்றன கரங்கள்..?
ஓடும் தடாகத்தில் பயணத்தினிடையில் சட்டென்று தடுப்பொன்று தட்டுபட, முன் சென்றுவிட்ட தன் இனத்தவர் பிரிந்து, தடுப்பினுள் சிக்கிக்கொண்ட ஒற்றை மீனின் நிலை தான் என்னுடையதும்..!! நிமிடங்கள் கரைவதை போல் நாமும் கரைந்து வெகு விரைவில் இல்லாமல் போய்விட்டால் நன்றாகவிருக்குமேவென்று தோன்றும் கணங்கள் இல்லாமலில்லை.. என்ன தான் தனிமையின் உணர்வை மனதினுள் புதைக்க முயன்றாலும், அது நீருக்கடியில் அடைக்கப்பட்ட காற்றுக்குமிழியை போல் அவ்வபோது மேலெழுந்த வண்ணமே உள்ளது.
விலங்குகளைப் போன்று சட்டென்று சில நாளில் தூக்கியவருடன் கொஞ்சி மகிழ்ந்து கூடிவிடும் இயல்பு வருவதில்லையேவென்று ஏக்கம் கொண்டதும் உண்டு. ஒருவேளை விலங்கின் மொழி புரியாததாலோ என்னவோ வந்த ஏக்கமது. பழக பழக பக்குவப்படுமென்பது பழமொழியோடு நின்றுவிட்டது போலும்.. தனிமை பழக பழக பக்குவமொன்றும் அடைவதாய் தெரியவில்லை. சுய பரிதாபம் தான் மேலோங்குகிறது..
விதி மாற்ற முயலும் முயற்சிகள் வீணாகவே போகின்றன.. விமோசனம் கிடைக்குமென்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு விடியலும் விடைகளில்லாமலேயே விடைபெறுகின்றன. உள்ளுக்குள் படர்ந்திருக்கும் தனிமை வெளியிலும் கலந்துவிடும் நிமிடங்களை கையாள்வது சற்று கடினம் தான். சுற்றமும் பிரதிபலிக்கும் தனிமை இன்னும் கொடியது. அது ஏன் எப்போதும் விடை கொடுக்கவே எத்தனிக்கின்றன கரங்கள்..?
Friday, March 12, 2010
இன்னும் சில சிந்தனைகள்.. (7)
கெளரவம் என்பது உங்களுக்கு நீங்களே கொடுத்து கொள்வதே தவிர, மற்றவர் உங்களுக்கு தருவதல்ல என்பது என் கருத்து. மாயைகளில் சிக்கி கௌரவ குறைச்சலென்று எண்ணி, வாழ்வில் பலவற்றை 'மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ'வென்று யோசித்து, மற்றவர்களுக்காக அவற்றை செய்யாமல் தவற விட்டு, பின்பு உள்ளுக்குள் வருத்தப்படும் பலரை இப்போதெல்லாம் பார்க்க நேரிடுகிறது.
செத்து மடிந்தாலும் பரவாயில்லை, ஆனால் என் கௌரவத்தை விட்டுக் கொடுத்து 'அதை' செய்ய இயலாது என்று, இருத்தலிற்கான கேள்வியினூடும் (question of survival) வறட்டு கெளரவம் பார்ப்பதால் என்ன லாபம். அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்பதான சிந்தனைகள் உங்களை என்றும் உயரத்திற்கு கொண்டு செல்லாது. மற்றவர் என்ன நினைத்தால் என்ன..? நீங்கள் செய்வது எவரையும் மனதளவிலோ பொருளளவிலோ அல்லது உணர்வளவிலோ பாதிக்காமல் இருக்கும் பட்சத்தில், பிறர் இழிவாக நினைப்பார்கள் என்றெண்ணி உங்களுக்கு தேவையான சிலவற்றை செய்ய தயங்குவதென்பது பெரிய அறிவின்மை அல்லவா..
உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களை புரிந்துக் கொள்ளாமல் இழிவாக நினைக்கும் அத்தகைய மனிதர்களுக்கு முக்கியத்துவமளித்து நீங்கள் ஏன் உங்களது வாழ்வை இழக்கிறீர்கள்..? வாழ்வில் வரும் வாய்ப்புகளும், கிடக்கும் சந்தர்ப்பங்களும் மிக அரிதாக இருக்கும் போது, 'அவர்கள் அப்படி நினைத்தால் என்ன செய்வது..' 'இவர்கள் இப்படி நினைக்க மாட்டார்களா..?' என்பதாக யோசித்து வரும் வாய்ப்புகளை தவற விடுவீர்களேயானால், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்.
உங்களை சுற்றி இருப்போரும், இந்த சமுதாயமும் தவறாக நினைக்குமே என்றெண்ணி நீங்கள் விரும்பியவற்றை செய்யாமல், உங்கள் விருப்பங்களையும் ஆசைகளையும் தியாகம் செய்து வாழ முனையும் உங்களுக்கு இந்த சமுதாயத்திடமிருந்தும் சுற்றத்தாரிடமிருந்தும் என்ன கிடைத்து விட்டது..? இவர்கள் குறை சொல்லவும், இழிவாக பேசவும், தாழ்வுபடுத்தவுமே முன்வரும் கூட்டம்.. நாளை உங்களது வாழ்வில் ஒரு கஷ்டம் வந்து உதவிகள் தேவைப்படும் நேரத்தில் சட்டென்று மறைந்து விடும் மனிதர்கள் தான் அவர்கள்.. அவர்கள் என்ன நினைத்தாலென்ன..! உங்களது விருப்பங்களையும் தேவைகளையும் விட அவர்கள் எந்தவிதத்தில் முக்கியமாகி போய்விட்டார்கள்..
உங்கள் வாழ்விற்கு எது தேவையோ, எது உங்களை மகிழ்ச்சிபடுத்துமோ, எது உங்களது இருத்தலிற்கு வழிகாட்டுமோ அவற்றை செய்ய உங்களுக்கு யாருடைய அனுமதி தேவை..? கௌரவமென்னும் மாயையில் சிக்கி உங்களது வாழ்க்கையை தொலைக்காமல், வாழ்வை எப்படி உங்கள் விருப்பப்படி வாழ்வதென்று பாருங்கள். உங்கள் கையில் இருப்பது ஒரேயோரு வாழ்க்கை. அதை மற்றவர்களுக்காக வாழாமல், உங்கள் மனசாட்சிக்கு பயந்து, நீங்கள் விரும்பியவற்றை செய்து, உங்கள் போக்கில் வாழுங்கள்.
நீங்களோ, உங்களது உணர்வுகளோ, உங்களது தேவைகளோ முக்கியமென்று நினைக்காத சுற்றத்தாரையும் சமுதாயத்தையும் முன்னிலைப்படுத்தி, உங்களது சுயவிருப்பங்களை துறந்து வாழ்கிறேன் என்கிற பெயரில் ஏன் சாகிறீர்கள்..? மாயைகளுக்கு மதிப்பு கொடுப்பதை நிறுத்துங்கள். பிறருக்காக வாழ்வதை விடுத்து உங்களுக்காக வாழ முனையுங்கள். பிறரது கருத்துக்களுக்கும், அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதான சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் தருவதை விடுத்து, உங்களது மனம் என்ன சொல்கிறது என்பதை முன்னிலைப்படுத்துங்கள். உங்களுக்கு எது தேவை என்பது உங்களுக்கு தான் தெரியும். மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களும், அவர்கள் தரும் அறிவுரைகளும், அவர்களது ஆதரிப்புகளும் அவர்களது தேவைகளையும் உணர்வுகளையும் சார்ந்தே இருக்கும் என்பதை அறியுங்கள்.
உங்களுக்கென்று ஒரு வாழ்வு இருக்கிறது. அதை மற்றவர்கள் கையில் ஒப்படைப்பதை விட பெரியதொரு இழப்பு எதுவுமில்லை. உணர்வுகளையும் விருப்பங்களையும் தேவைகளையும் உள்ளுக்குள்ளேயே பூட்டி வாழ்நாள் முழுதும் வருத்தங்களுடன் வாழ்வதை விட, மாயைகளை உடைத்தெறிந்து, இருக்கும் சில நாட்களில் உங்களது வாழ்வை உங்களது விருப்பப்படி வாழுங்களேன்.. நீங்களோ, உங்களது உணர்வுகளோ, உங்களது சந்தோசமோ முக்கியமென்று உண்மையிலேயே உங்களை நேசிக்கும் மனிதர்கள் நிச்சயமாக உங்களுக்கு ஆதரவாக அப்போதும் இருப்பார்கள் என்பது தான் உண்மை. அதை உணர்ந்தீர்களேயானால் ஒரு விதத்தில் நீங்கள் வாழ்க்கையை கண்டு கொண்டுவிட்டீர்கள் என்று தான் அர்த்தம்..
செத்து மடிந்தாலும் பரவாயில்லை, ஆனால் என் கௌரவத்தை விட்டுக் கொடுத்து 'அதை' செய்ய இயலாது என்று, இருத்தலிற்கான கேள்வியினூடும் (question of survival) வறட்டு கெளரவம் பார்ப்பதால் என்ன லாபம். அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்பதான சிந்தனைகள் உங்களை என்றும் உயரத்திற்கு கொண்டு செல்லாது. மற்றவர் என்ன நினைத்தால் என்ன..? நீங்கள் செய்வது எவரையும் மனதளவிலோ பொருளளவிலோ அல்லது உணர்வளவிலோ பாதிக்காமல் இருக்கும் பட்சத்தில், பிறர் இழிவாக நினைப்பார்கள் என்றெண்ணி உங்களுக்கு தேவையான சிலவற்றை செய்ய தயங்குவதென்பது பெரிய அறிவின்மை அல்லவா..
உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களை புரிந்துக் கொள்ளாமல் இழிவாக நினைக்கும் அத்தகைய மனிதர்களுக்கு முக்கியத்துவமளித்து நீங்கள் ஏன் உங்களது வாழ்வை இழக்கிறீர்கள்..? வாழ்வில் வரும் வாய்ப்புகளும், கிடக்கும் சந்தர்ப்பங்களும் மிக அரிதாக இருக்கும் போது, 'அவர்கள் அப்படி நினைத்தால் என்ன செய்வது..' 'இவர்கள் இப்படி நினைக்க மாட்டார்களா..?' என்பதாக யோசித்து வரும் வாய்ப்புகளை தவற விடுவீர்களேயானால், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்.
உங்களை சுற்றி இருப்போரும், இந்த சமுதாயமும் தவறாக நினைக்குமே என்றெண்ணி நீங்கள் விரும்பியவற்றை செய்யாமல், உங்கள் விருப்பங்களையும் ஆசைகளையும் தியாகம் செய்து வாழ முனையும் உங்களுக்கு இந்த சமுதாயத்திடமிருந்தும் சுற்றத்தாரிடமிருந்தும் என்ன கிடைத்து விட்டது..? இவர்கள் குறை சொல்லவும், இழிவாக பேசவும், தாழ்வுபடுத்தவுமே முன்வரும் கூட்டம்.. நாளை உங்களது வாழ்வில் ஒரு கஷ்டம் வந்து உதவிகள் தேவைப்படும் நேரத்தில் சட்டென்று மறைந்து விடும் மனிதர்கள் தான் அவர்கள்.. அவர்கள் என்ன நினைத்தாலென்ன..! உங்களது விருப்பங்களையும் தேவைகளையும் விட அவர்கள் எந்தவிதத்தில் முக்கியமாகி போய்விட்டார்கள்..
உங்கள் வாழ்விற்கு எது தேவையோ, எது உங்களை மகிழ்ச்சிபடுத்துமோ, எது உங்களது இருத்தலிற்கு வழிகாட்டுமோ அவற்றை செய்ய உங்களுக்கு யாருடைய அனுமதி தேவை..? கௌரவமென்னும் மாயையில் சிக்கி உங்களது வாழ்க்கையை தொலைக்காமல், வாழ்வை எப்படி உங்கள் விருப்பப்படி வாழ்வதென்று பாருங்கள். உங்கள் கையில் இருப்பது ஒரேயோரு வாழ்க்கை. அதை மற்றவர்களுக்காக வாழாமல், உங்கள் மனசாட்சிக்கு பயந்து, நீங்கள் விரும்பியவற்றை செய்து, உங்கள் போக்கில் வாழுங்கள்.
நீங்களோ, உங்களது உணர்வுகளோ, உங்களது தேவைகளோ முக்கியமென்று நினைக்காத சுற்றத்தாரையும் சமுதாயத்தையும் முன்னிலைப்படுத்தி, உங்களது சுயவிருப்பங்களை துறந்து வாழ்கிறேன் என்கிற பெயரில் ஏன் சாகிறீர்கள்..? மாயைகளுக்கு மதிப்பு கொடுப்பதை நிறுத்துங்கள். பிறருக்காக வாழ்வதை விடுத்து உங்களுக்காக வாழ முனையுங்கள். பிறரது கருத்துக்களுக்கும், அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதான சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் தருவதை விடுத்து, உங்களது மனம் என்ன சொல்கிறது என்பதை முன்னிலைப்படுத்துங்கள். உங்களுக்கு எது தேவை என்பது உங்களுக்கு தான் தெரியும். மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களும், அவர்கள் தரும் அறிவுரைகளும், அவர்களது ஆதரிப்புகளும் அவர்களது தேவைகளையும் உணர்வுகளையும் சார்ந்தே இருக்கும் என்பதை அறியுங்கள்.
உங்களுக்கென்று ஒரு வாழ்வு இருக்கிறது. அதை மற்றவர்கள் கையில் ஒப்படைப்பதை விட பெரியதொரு இழப்பு எதுவுமில்லை. உணர்வுகளையும் விருப்பங்களையும் தேவைகளையும் உள்ளுக்குள்ளேயே பூட்டி வாழ்நாள் முழுதும் வருத்தங்களுடன் வாழ்வதை விட, மாயைகளை உடைத்தெறிந்து, இருக்கும் சில நாட்களில் உங்களது வாழ்வை உங்களது விருப்பப்படி வாழுங்களேன்.. நீங்களோ, உங்களது உணர்வுகளோ, உங்களது சந்தோசமோ முக்கியமென்று உண்மையிலேயே உங்களை நேசிக்கும் மனிதர்கள் நிச்சயமாக உங்களுக்கு ஆதரவாக அப்போதும் இருப்பார்கள் என்பது தான் உண்மை. அதை உணர்ந்தீர்களேயானால் ஒரு விதத்தில் நீங்கள் வாழ்க்கையை கண்டு கொண்டுவிட்டீர்கள் என்று தான் அர்த்தம்..
Monday, March 8, 2010
பெண்கள் தினத்தைப் பற்றி.. (பெண்களுக்காக)
ஆண்களுக்கு சரி சமானம்.. எல்லா துறைகளிலும் முன்னேற்றம்.. படிப்பில் அசரவைக்கும் சாதனைகள்.. பெரிய பதவிகள்.. பொறுப்புகள்.. பட்டங்கள்.. என்று எல்லா இடங்களிலும் போட்டி போட்டுக் கொண்டு வெற்றி கொடி கட்டி பறக்கும் போது, நமக்கேன் தனியொரு நாள் கொண்டாட்டமாக 'பெண்கள் தினம்' என்று கேள்வி எழுகிறதல்லவா..
இத்தனை போராட்டங்கள்.. தொடர்ந்திட்ட முழு இரவு கண்விழிப்புகள்.. குடும்ப பாரங்களுடன் கூடுதலான சுமைகள்.. உங்களாலும் முடியுமென்று நிரூபிக்க பட்ட கஷ்டங்கள்.. என்று எல்லாமும் எதற்காக.. உங்களுக்கென்று ஒரு நாள் (பெண்கள் தினம்) என்றிருப்பதில் இருந்து "இனி எல்லா நாளும் உங்களுக்கே" என்னும் நிலைக்கு வருவதற்காக தானே..
"அது தான் வந்து விட்டோமே.. இனியும் ஏன் நமக்கென்று ஒருநாளை கொண்டாட வேண்டுமென்"கிற கேள்வி எழுகிறதென்றால், அதில் தவறொன்றும் இல்லை. ஆனால், என்ன தான் இமயம் தொட்டுவிட்டாலும், தொட துணிந்து எடுத்து வைத்த அந்த முதல் அடியை மறக்க முடியுமா என்ன.. அதற்காக தான் தொடர்கிறது இந்த 'ஒரு நாள் கொண்டாட்டம்'. ஒருவிதத்தில் பார்த்தால் சாதித்து விட்ட பெண்களுக்கும், சாதித்து கொண்டிருக்கும் பெண்களுக்கும், தமது சாதனைகளை திரும்பி பார்த்து பெருமிதப்படுவதற்கும், தோள் தட்டி தம்மையும் தம் இனத்தை சேர்ந்த பிற மகளிரையும் தத்தம் சாதனைகளுக்காக பாராடுவதற்குமான நாளாக நீங்கள் இந்த நாளை பாவிக்கலாம்.. வெளி உலகிற்கு வந்து வெற்றி கொடி நாட்டுவதிலும், வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகில் தமது நிலைப்பாட்டை நிரூபிக்க முயற்சி எடுப்பதிலும் மிக மும்முரமாக இருப்பதனால், சில நேரங்களில் உங்களுக்கு நீங்களே முதுகு தட்டி உற்சாகப்படுத்தி கொள்ள மறந்து விடுகிறீர்கள்..
பலவித கஷ்டங்களுக்கும் தடைகளுக்கும் மத்தியிலும் கூட தொடர்ந்து போராடி, என்னாலும் முடியுமென்று நிரூபித்து கொண்டிருக்கும் பெண்களுக்கு, சற்று நின்று திரும்பி, தாம் கடந்து வந்த பாதைகளையும் எதிர்த்து போராடிய தடைகளையும் பற்றி கொஞ்சம் அசை போட்டு, தமது அயராத உழைப்பையும் உத்வேகத்தையும் பாராட்ட நிச்சயமாக ஒரு நாள் தேவை. அன்றைய தினமாக இருக்கட்டும் இன்றைய தினம்..
ஒருபுறம் சாதனைகளையும் வெற்றிகளையும் திரும்பி பார்த்து, சாதித்தவர்களையும் சாதித்து கொண்டிருப்பவர்களையும் பாராட்டும் அதே தருணத்தில், நீங்கள் கேட்க மறந்திருக்கும் கேள்விகள் கொஞ்சம் மிச்சமிருகின்றன என்பதை நினைவுபடுத்தும் நாளாகவும் இது அமையட்டும்.. இன்று மலையேறி சிகரம் அடைந்து கொடி நாட்டுவதிலிருந்து, வான் பறந்து சந்திரன் தொடுவது வரை, எதுவெல்லாம் இருக்கிறதோ எல்லாமும் செய்தாயிற்று.. சாதித்தும் காட்டியாயிற்று.. என்றாலும் எல்லாரும் சாதித்திருக்கிறார்களா என்றொரு கேள்வி இன்னும் மிச்சமிருக்கிறதே..
கொழுந்து விட்டு எரியும் தீ ஜுவாலைகள் ஒரு தீக்குச்சியிலிருந்து பிறப்பதை போன்று, எவ்வளவு நாட்கள் தான் அடங்கியிருப்பதென்று எங்கோ உரசிய தீக்குச்சியிலிருந்து கொதித்தெழுந்த தீயல்லவா இன்று பெரும் தீப்பிழம்பாகியிருக்கிறது.. ஆனால் இன்னும் வெளிச்சம் தேவைப்படும் இடங்கள் இருக்க தானே செய்கின்றன. இன்னும் வீட்டிற்குள்ளேயே அடைபட்டும், தங்கள் உரிமைகளை உணராமலும், உணர்ந்தாலும் அவற்றை பெற முடியாமலும், சொல்ல முடியா துன்பங்களுடன் வாழும் உங்கள் இனத்தவர்கள் இன்னும் உலகெங்கும் இருக்க தானே செய்கின்றனர்..
எனவே இன்னொரு புறத்தில் பார்த்தால் இன்றைய தினமானது அத்தகைய பெண்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உதவும் நாளாகவும் இருக்க வேண்டாமா.. 'இனி நீயும் வெளிவரலாம் சுதந்திரமாய்.. சாதிக்க உனக்கும் உரிமைகள் இருகின்றன'வென்று அவர்களுக்கு தேவையான உற்சாகங்களையும் உதவிகளையும் செய்வதற்கும், அவர்களை தைரியப்படுத்தி உத்வேகம் அளிக்கவும் இந்த நாளை பயன்படுத்துங்கள்..
வெளியே வரலாம் என்பது கூட அறியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் பெண்களையும், சாதிக்க சக்தியிருந்தும் அதற்கான வழிமுறைகளை அறியாத பெண்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு உணர்வளவில் உங்களாலான உதவிகளை செய்து 'இங்கே பாருங்கள்.. உங்களுக்கும் வழிகள் இருக்கின்றன..' என்று உற்சாகப்படுத்துங்கள்.. பெண்களுக்கு பெண்களே முன்மாதிரியாக இருந்து உற்சாகப்படுத்தும் போது அங்கே 'நாமும் சாதிக்க வேண்டுமெ'ன்கிற அழுத்தமான உத்வேகம் மற்ற பெண்களுக்கு தோன்றும் என்பதை அறியுங்கள். பெண்களாக பிறந்த நீங்கள், உதவி தேவைப்படும் உங்களது இனத்தவருக்கு உதவ கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்..
வெறும் கூட்டங்கள் கூடி, ஆடி பாடி சிரித்து மகிழும் நாளாக மட்டும் இந்த நாள் அமையாமல், நீங்கள் கடந்து வந்த பாதைகளில் சாதித்தவைகளை திரும்பி பார்க்கும் நாளாகவும், உங்கள் ஒருவருக்கொருவர் உற்சாகத்தையும் உணர்வளவிலான பாராட்டுதல்களையும் பகிர்ந்து கொள்ளும் நாளாகவும், உதவி இன்னமும் தேவைப்படும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களும் மேலே வர உங்களாலான உதவிகளை செய்வதற்கு முடிந்த முயற்சிகளை எடுக்கும் நாளாகவும் இது அமையட்டும்.. பெண்கள் எல்லோருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.. நீங்கள் இதுவரை செய்த சாதனைகளுக்கும், செய்து கொண்டிருக்கும் முயற்சிகளுக்கும், எடுக்க போகும் விஸ்வரூபங்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
இத்தனை போராட்டங்கள்.. தொடர்ந்திட்ட முழு இரவு கண்விழிப்புகள்.. குடும்ப பாரங்களுடன் கூடுதலான சுமைகள்.. உங்களாலும் முடியுமென்று நிரூபிக்க பட்ட கஷ்டங்கள்.. என்று எல்லாமும் எதற்காக.. உங்களுக்கென்று ஒரு நாள் (பெண்கள் தினம்) என்றிருப்பதில் இருந்து "இனி எல்லா நாளும் உங்களுக்கே" என்னும் நிலைக்கு வருவதற்காக தானே..
"அது தான் வந்து விட்டோமே.. இனியும் ஏன் நமக்கென்று ஒருநாளை கொண்டாட வேண்டுமென்"கிற கேள்வி எழுகிறதென்றால், அதில் தவறொன்றும் இல்லை. ஆனால், என்ன தான் இமயம் தொட்டுவிட்டாலும், தொட துணிந்து எடுத்து வைத்த அந்த முதல் அடியை மறக்க முடியுமா என்ன.. அதற்காக தான் தொடர்கிறது இந்த 'ஒரு நாள் கொண்டாட்டம்'. ஒருவிதத்தில் பார்த்தால் சாதித்து விட்ட பெண்களுக்கும், சாதித்து கொண்டிருக்கும் பெண்களுக்கும், தமது சாதனைகளை திரும்பி பார்த்து பெருமிதப்படுவதற்கும், தோள் தட்டி தம்மையும் தம் இனத்தை சேர்ந்த பிற மகளிரையும் தத்தம் சாதனைகளுக்காக பாராடுவதற்குமான நாளாக நீங்கள் இந்த நாளை பாவிக்கலாம்.. வெளி உலகிற்கு வந்து வெற்றி கொடி நாட்டுவதிலும், வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகில் தமது நிலைப்பாட்டை நிரூபிக்க முயற்சி எடுப்பதிலும் மிக மும்முரமாக இருப்பதனால், சில நேரங்களில் உங்களுக்கு நீங்களே முதுகு தட்டி உற்சாகப்படுத்தி கொள்ள மறந்து விடுகிறீர்கள்..
பலவித கஷ்டங்களுக்கும் தடைகளுக்கும் மத்தியிலும் கூட தொடர்ந்து போராடி, என்னாலும் முடியுமென்று நிரூபித்து கொண்டிருக்கும் பெண்களுக்கு, சற்று நின்று திரும்பி, தாம் கடந்து வந்த பாதைகளையும் எதிர்த்து போராடிய தடைகளையும் பற்றி கொஞ்சம் அசை போட்டு, தமது அயராத உழைப்பையும் உத்வேகத்தையும் பாராட்ட நிச்சயமாக ஒரு நாள் தேவை. அன்றைய தினமாக இருக்கட்டும் இன்றைய தினம்..
ஒருபுறம் சாதனைகளையும் வெற்றிகளையும் திரும்பி பார்த்து, சாதித்தவர்களையும் சாதித்து கொண்டிருப்பவர்களையும் பாராட்டும் அதே தருணத்தில், நீங்கள் கேட்க மறந்திருக்கும் கேள்விகள் கொஞ்சம் மிச்சமிருகின்றன என்பதை நினைவுபடுத்தும் நாளாகவும் இது அமையட்டும்.. இன்று மலையேறி சிகரம் அடைந்து கொடி நாட்டுவதிலிருந்து, வான் பறந்து சந்திரன் தொடுவது வரை, எதுவெல்லாம் இருக்கிறதோ எல்லாமும் செய்தாயிற்று.. சாதித்தும் காட்டியாயிற்று.. என்றாலும் எல்லாரும் சாதித்திருக்கிறார்களா என்றொரு கேள்வி இன்னும் மிச்சமிருக்கிறதே..
கொழுந்து விட்டு எரியும் தீ ஜுவாலைகள் ஒரு தீக்குச்சியிலிருந்து பிறப்பதை போன்று, எவ்வளவு நாட்கள் தான் அடங்கியிருப்பதென்று எங்கோ உரசிய தீக்குச்சியிலிருந்து கொதித்தெழுந்த தீயல்லவா இன்று பெரும் தீப்பிழம்பாகியிருக்கிறது.. ஆனால் இன்னும் வெளிச்சம் தேவைப்படும் இடங்கள் இருக்க தானே செய்கின்றன. இன்னும் வீட்டிற்குள்ளேயே அடைபட்டும், தங்கள் உரிமைகளை உணராமலும், உணர்ந்தாலும் அவற்றை பெற முடியாமலும், சொல்ல முடியா துன்பங்களுடன் வாழும் உங்கள் இனத்தவர்கள் இன்னும் உலகெங்கும் இருக்க தானே செய்கின்றனர்..
எனவே இன்னொரு புறத்தில் பார்த்தால் இன்றைய தினமானது அத்தகைய பெண்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உதவும் நாளாகவும் இருக்க வேண்டாமா.. 'இனி நீயும் வெளிவரலாம் சுதந்திரமாய்.. சாதிக்க உனக்கும் உரிமைகள் இருகின்றன'வென்று அவர்களுக்கு தேவையான உற்சாகங்களையும் உதவிகளையும் செய்வதற்கும், அவர்களை தைரியப்படுத்தி உத்வேகம் அளிக்கவும் இந்த நாளை பயன்படுத்துங்கள்..
வெளியே வரலாம் என்பது கூட அறியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் பெண்களையும், சாதிக்க சக்தியிருந்தும் அதற்கான வழிமுறைகளை அறியாத பெண்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு உணர்வளவில் உங்களாலான உதவிகளை செய்து 'இங்கே பாருங்கள்.. உங்களுக்கும் வழிகள் இருக்கின்றன..' என்று உற்சாகப்படுத்துங்கள்.. பெண்களுக்கு பெண்களே முன்மாதிரியாக இருந்து உற்சாகப்படுத்தும் போது அங்கே 'நாமும் சாதிக்க வேண்டுமெ'ன்கிற அழுத்தமான உத்வேகம் மற்ற பெண்களுக்கு தோன்றும் என்பதை அறியுங்கள். பெண்களாக பிறந்த நீங்கள், உதவி தேவைப்படும் உங்களது இனத்தவருக்கு உதவ கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்..
வெறும் கூட்டங்கள் கூடி, ஆடி பாடி சிரித்து மகிழும் நாளாக மட்டும் இந்த நாள் அமையாமல், நீங்கள் கடந்து வந்த பாதைகளில் சாதித்தவைகளை திரும்பி பார்க்கும் நாளாகவும், உங்கள் ஒருவருக்கொருவர் உற்சாகத்தையும் உணர்வளவிலான பாராட்டுதல்களையும் பகிர்ந்து கொள்ளும் நாளாகவும், உதவி இன்னமும் தேவைப்படும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களும் மேலே வர உங்களாலான உதவிகளை செய்வதற்கு முடிந்த முயற்சிகளை எடுக்கும் நாளாகவும் இது அமையட்டும்.. பெண்கள் எல்லோருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.. நீங்கள் இதுவரை செய்த சாதனைகளுக்கும், செய்து கொண்டிருக்கும் முயற்சிகளுக்கும், எடுக்க போகும் விஸ்வரூபங்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
Friday, March 5, 2010
இன்னும் சில சிந்தனைகள்.. (6)
வாழ்வது நீங்களாக இல்லாதவரையில் 'இப்படி தான் வாழவேண்டுமெ'ன்று முடிவெடுக்காதீர்கள்.. வேண்டுமானால் நீங்கள் ஆலோசனைகள் கூறலாம்.. அறிவுறுத்தலாம்.. ஆனால் மற்றவர்கள் வாழ்க்கையை நீங்கள் ஏன் வாழ முனைகிறீர்கள்..? 'இப்படி இரு.. அப்படி இரு.. இதை செய்யாதே.. அதை செய்யாதே..' என்று மற்றவர்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு பலர் மிகுந்த சிரத்தை எடுக்கிறார்கள். என்னவோ தங்கள் வாழ்க்கையை இவர்கள் முழுதாக வாழ்ந்து முடித்து விட்டதை போல.. அப்படியே உங்கள் வாழக்கையை நீங்கள் வாழ்ந்து முடித்து விட்டீர்கள் என்றால், அது தான் வாழ்ந்து முடித்து விட்டீர்களே.. அப்பறமென்ன.. அவர்களும் கொஞ்சம் வாழ்ந்து தான் பார்க்கட்டுமே, அவர்கள் விரும்பியபடி!
'நான் சொல்வதையே இவன்(ள்) கேட்பதில்லை..' 'நான் செய்யாதேவென்று சொல்லியும் ஏன் அதை செய்கிறான்(ள்)..' இப்படியாக தான் சொல்லியதை மற்றவர்கள் பின்பற்றவில்லையென்று ஆதங்கமும் கோபமும் கொள்ளும் சிலரை நான் பார்த்திருக்கிறேன்.. "அது அவர்கள் வாழ்க்கையப்பா.. அவர்கள் விரும்பியபடி வாழட்டுமே..", என்று சொன்னால், "அவனு(ளு)க்கு ஒன்றும் தெரியாது.. பச்சை குழந்தை.. நான் தானே பார்த்துக் கொள்ள வேண்டுமெ"ன்று சொல்லி அவர்களது வாழ்க்கையையும் இவர்கள் சேர்த்து வாழ முனைவது எனக்கு உண்மையிலேயே சிரிப்பை தான் வரவழைக்கும். வளர்ந்து விட்டவர்களை குழந்தைகளாக பாவித்து நேசிப்பதெல்லாம் நல்ல விஷயம் தான். ஆனால் அதற்காக உங்கள் கைப்பிடித்து தான் அவர்கள் காலம் முழுதும் நடக்க வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள். நான் இங்கே எந்தவொரு உறவையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
மற்றவர்கள் நலம் விரும்பி, 'நீ இப்படியிருந்தால் நன்றாக இருக்கும்' என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை.. ஆனால் அதை கட்டாயப்படுத்தும்போது அங்கே ஒரு அசௌகர்யம் (uncomfortable feeling) ஏற்பட்டுவிடுகிறது. 'நல்லது சொன்னால் கேட்க மறுக்கிறான்(ள்)..' என்று நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் உங்களுக்கு நல்லதாக பட்டது அவர்களுக்கும் நல்லதாக படுகிறதாவென்று கொஞ்சம் யோசித்து தான் பாருங்களேன். மற்றவர்கள் வாழ்க்கைக்கு ஆலோசனை வழங்குவதுடன் நிறுத்தி கொள்வது உத்தமம். அவர்களது நலம் விரும்புவது உயரிய கொள்கை தான். அதை நான் குற்றம் சொல்லவில்லை. அதே நேரத்தில், அவர்கள் விரும்பியபடியும் அவ்வபோது வாழ அவர்களை விடுங்களேன்..
"நீ இப்படி தான் வாழ வேண்டுமெ"ன்று யாரையும் அதிகாரம் செய்வதற்கு யாருக்கும் உரிமையில்லையென்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். ஆலோசனைகளும் அறிவுரைகளும் ஏற்றுக் கொள்ளும்படியாக சொல்லப்படும் போது அவை நிராகரிக்கப்படுவதில்லை என்பதையும் நம்புபவன் நான்.. பொதுவாகவே, "நீ இதை செய்.. அல்லது இதை செய்யாதே.." என்று மேலோட்டமாக சொல்லப்படும் பொழுது, அத்தகைய அறிவுரைகள் பெரும்பாலும் செவி சாய்க்கப்படுவதில்லை.. காரணம் யாருமே கண்மூடித்தனமாக மற்றவர்களை பின்பற்றுவது வெகு சில காலங்களுக்கு மட்டுமே. பின்பு அவர்களுக்குள்ளே இருக்கும் 'நான்' விழித்துக் கொள்வது இயற்கையே..
சொல்லப்படும் ஆலோசனைகளுடன், அவற்றினால் ஏற்படும் நன்மைகளையும் தீமைகளையும் எடுத்துக் கூறுவதுடன், (மிக முக்கியமாக) உங்களது ஆலோசனையோ அல்லது அறிவுரையோ ஏன் அவர்கள் நினைப்பதை விட மேலானது என்பதையும் எடுத்து சொல்வது மிகவும் அவசியம். அப்போது தான் அது மற்றவர்களின் கவனத்தை பெறுகிறது. உங்களது ஆலோசனைகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஏன் அதை அலட்சியப்படுத்த போகிறார்கள். அப்படியே அவர்கள் அலட்சியப்படுத்தினாலும் அதற்கு அவர்கள் நினைக்கும் சில காரணங்கள் இருக்க வாய்ப்புண்டு. அதை அறிந்து கொண்டு அதற்கேற்ப தான் உங்களது ஆலோசனை இருக்க வேண்டுமேயொழிய, உங்களது சிந்தனை மற்றும் மனபோக்கின் அடிப்படையில் மட்டுமல்ல. எல்லாவற்றையும் விட 'அது அவர்களுடைய வாழ்க்கை' என்பதை புரிந்து கொள்ளுங்கள்..
நீங்கள் விரும்பியபடி வாழ உங்களுக்கு உரிமைகள் இருப்பதை போன்று தானே அவர்கள் விரும்பியபடி வாழ அவர்களுக்கும் உரிமையுண்டு. 'நீ இப்படி செய்வதால் இத்தகைய பாதிப்பு வர வாய்ப்பிருகிறது', என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமையும் கடமையும் உண்டென்றாலும், 'பாதிப்பு வந்தால் பரவாயில்லை..' என்று முடிவெடுக்க அவர்களுக்கு உரிமையுண்டு அல்லவா. அப்படி முடிவெடுக்கிறார்களென்றால், அவர்களது முன்னுரிமை வேறொன்றில் இருக்கிறதென்று தான் அர்த்தம். அது முற்றிலும் தவறென்று சொல்வதற்கு இயலாது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவனுக்கான முன்னுரிமைகளும், வாழும் விதம் பற்றிய ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இருப்பது இயற்கை தானே. அவ்வாறாக அவர்கள் முடிவெடுக்கும் போது, "சரி.. இது தான் நீ விரும்புவதென்றால், நீ விரும்பியவாறு செய்.. ஆனால் கொஞ்சம் கவனமாக இரு.." என்று கூறுவதும், எவ்வாறு அவர்கள் கவனமாக இருக்கலாமென்று அவர்களுக்கு ஆலோசனை கூறுவதும் மட்டுமே ஏற்று கொள்ள தக்கது. அதை விடுத்து, "நீ நான் சொல்வதை கேட்க மாட்டாயல்லவா.. போ.. இனி என் முகத்தில் விழிக்காதே.." என்று முகம் திருப்புவதும் கோபம் கொள்வதும் அழகன்று..
"பிரச்சனைல மாட்டிக்குவான்(ள்)னு தெரிஞ்சே, எக்கேடோ கேட்டு போன்னு எப்டி பால் சும்மா விடுறது.." என்று சொல்வீர்களேயானால், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். பிரச்சனை இருப்பதை விளக்கி சொன்ன பின்பும் ஒருவன்(ள்) தொடர்ந்து முன்னோக்கி நகர்கிறான்(ள்) என்றால் வரவிருக்கும் பிரச்சனையை எதிர்கொள்ளவும் அதை சமாளிக்கவும் அவன்(ள்) தயாராக இருக்கிறான்(ள்) என்று தானே அர்த்தம். எப்போதும் ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.. என்ன தான் நெருங்கிய உறவாகவோ அல்லது நட்பாகவோ இருந்தாலும் நீங்கள் நீங்கள் தான்.. அவர்கள் அவர்கள் தான்.. தம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென்று ஒவ்வொருவரும் அவரவர் கனவுகளிலும் கற்பனைகளிலும் இருக்கும் போது, மற்றவர்களுடைய வாழ்க்கையை அவர்களுக்கு பதிலாக நீங்கள் ஏன் வாழ முனைகிறீர்கள்..? உங்களால் முடிந்தவரை அவர்களுக்கு உதவியாகவும், உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருங்கள்..
'நான் சொல்வதையே இவன்(ள்) கேட்பதில்லை..' 'நான் செய்யாதேவென்று சொல்லியும் ஏன் அதை செய்கிறான்(ள்)..' இப்படியாக தான் சொல்லியதை மற்றவர்கள் பின்பற்றவில்லையென்று ஆதங்கமும் கோபமும் கொள்ளும் சிலரை நான் பார்த்திருக்கிறேன்.. "அது அவர்கள் வாழ்க்கையப்பா.. அவர்கள் விரும்பியபடி வாழட்டுமே..", என்று சொன்னால், "அவனு(ளு)க்கு ஒன்றும் தெரியாது.. பச்சை குழந்தை.. நான் தானே பார்த்துக் கொள்ள வேண்டுமெ"ன்று சொல்லி அவர்களது வாழ்க்கையையும் இவர்கள் சேர்த்து வாழ முனைவது எனக்கு உண்மையிலேயே சிரிப்பை தான் வரவழைக்கும். வளர்ந்து விட்டவர்களை குழந்தைகளாக பாவித்து நேசிப்பதெல்லாம் நல்ல விஷயம் தான். ஆனால் அதற்காக உங்கள் கைப்பிடித்து தான் அவர்கள் காலம் முழுதும் நடக்க வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள். நான் இங்கே எந்தவொரு உறவையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
மற்றவர்கள் நலம் விரும்பி, 'நீ இப்படியிருந்தால் நன்றாக இருக்கும்' என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை.. ஆனால் அதை கட்டாயப்படுத்தும்போது அங்கே ஒரு அசௌகர்யம் (uncomfortable feeling) ஏற்பட்டுவிடுகிறது. 'நல்லது சொன்னால் கேட்க மறுக்கிறான்(ள்)..' என்று நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் உங்களுக்கு நல்லதாக பட்டது அவர்களுக்கும் நல்லதாக படுகிறதாவென்று கொஞ்சம் யோசித்து தான் பாருங்களேன். மற்றவர்கள் வாழ்க்கைக்கு ஆலோசனை வழங்குவதுடன் நிறுத்தி கொள்வது உத்தமம். அவர்களது நலம் விரும்புவது உயரிய கொள்கை தான். அதை நான் குற்றம் சொல்லவில்லை. அதே நேரத்தில், அவர்கள் விரும்பியபடியும் அவ்வபோது வாழ அவர்களை விடுங்களேன்..
"நீ இப்படி தான் வாழ வேண்டுமெ"ன்று யாரையும் அதிகாரம் செய்வதற்கு யாருக்கும் உரிமையில்லையென்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். ஆலோசனைகளும் அறிவுரைகளும் ஏற்றுக் கொள்ளும்படியாக சொல்லப்படும் போது அவை நிராகரிக்கப்படுவதில்லை என்பதையும் நம்புபவன் நான்.. பொதுவாகவே, "நீ இதை செய்.. அல்லது இதை செய்யாதே.." என்று மேலோட்டமாக சொல்லப்படும் பொழுது, அத்தகைய அறிவுரைகள் பெரும்பாலும் செவி சாய்க்கப்படுவதில்லை.. காரணம் யாருமே கண்மூடித்தனமாக மற்றவர்களை பின்பற்றுவது வெகு சில காலங்களுக்கு மட்டுமே. பின்பு அவர்களுக்குள்ளே இருக்கும் 'நான்' விழித்துக் கொள்வது இயற்கையே..
சொல்லப்படும் ஆலோசனைகளுடன், அவற்றினால் ஏற்படும் நன்மைகளையும் தீமைகளையும் எடுத்துக் கூறுவதுடன், (மிக முக்கியமாக) உங்களது ஆலோசனையோ அல்லது அறிவுரையோ ஏன் அவர்கள் நினைப்பதை விட மேலானது என்பதையும் எடுத்து சொல்வது மிகவும் அவசியம். அப்போது தான் அது மற்றவர்களின் கவனத்தை பெறுகிறது. உங்களது ஆலோசனைகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஏன் அதை அலட்சியப்படுத்த போகிறார்கள். அப்படியே அவர்கள் அலட்சியப்படுத்தினாலும் அதற்கு அவர்கள் நினைக்கும் சில காரணங்கள் இருக்க வாய்ப்புண்டு. அதை அறிந்து கொண்டு அதற்கேற்ப தான் உங்களது ஆலோசனை இருக்க வேண்டுமேயொழிய, உங்களது சிந்தனை மற்றும் மனபோக்கின் அடிப்படையில் மட்டுமல்ல. எல்லாவற்றையும் விட 'அது அவர்களுடைய வாழ்க்கை' என்பதை புரிந்து கொள்ளுங்கள்..
நீங்கள் விரும்பியபடி வாழ உங்களுக்கு உரிமைகள் இருப்பதை போன்று தானே அவர்கள் விரும்பியபடி வாழ அவர்களுக்கும் உரிமையுண்டு. 'நீ இப்படி செய்வதால் இத்தகைய பாதிப்பு வர வாய்ப்பிருகிறது', என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமையும் கடமையும் உண்டென்றாலும், 'பாதிப்பு வந்தால் பரவாயில்லை..' என்று முடிவெடுக்க அவர்களுக்கு உரிமையுண்டு அல்லவா. அப்படி முடிவெடுக்கிறார்களென்றால், அவர்களது முன்னுரிமை வேறொன்றில் இருக்கிறதென்று தான் அர்த்தம். அது முற்றிலும் தவறென்று சொல்வதற்கு இயலாது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவனுக்கான முன்னுரிமைகளும், வாழும் விதம் பற்றிய ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இருப்பது இயற்கை தானே. அவ்வாறாக அவர்கள் முடிவெடுக்கும் போது, "சரி.. இது தான் நீ விரும்புவதென்றால், நீ விரும்பியவாறு செய்.. ஆனால் கொஞ்சம் கவனமாக இரு.." என்று கூறுவதும், எவ்வாறு அவர்கள் கவனமாக இருக்கலாமென்று அவர்களுக்கு ஆலோசனை கூறுவதும் மட்டுமே ஏற்று கொள்ள தக்கது. அதை விடுத்து, "நீ நான் சொல்வதை கேட்க மாட்டாயல்லவா.. போ.. இனி என் முகத்தில் விழிக்காதே.." என்று முகம் திருப்புவதும் கோபம் கொள்வதும் அழகன்று..
"பிரச்சனைல மாட்டிக்குவான்(ள்)னு தெரிஞ்சே, எக்கேடோ கேட்டு போன்னு எப்டி பால் சும்மா விடுறது.." என்று சொல்வீர்களேயானால், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். பிரச்சனை இருப்பதை விளக்கி சொன்ன பின்பும் ஒருவன்(ள்) தொடர்ந்து முன்னோக்கி நகர்கிறான்(ள்) என்றால் வரவிருக்கும் பிரச்சனையை எதிர்கொள்ளவும் அதை சமாளிக்கவும் அவன்(ள்) தயாராக இருக்கிறான்(ள்) என்று தானே அர்த்தம். எப்போதும் ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.. என்ன தான் நெருங்கிய உறவாகவோ அல்லது நட்பாகவோ இருந்தாலும் நீங்கள் நீங்கள் தான்.. அவர்கள் அவர்கள் தான்.. தம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென்று ஒவ்வொருவரும் அவரவர் கனவுகளிலும் கற்பனைகளிலும் இருக்கும் போது, மற்றவர்களுடைய வாழ்க்கையை அவர்களுக்கு பதிலாக நீங்கள் ஏன் வாழ முனைகிறீர்கள்..? உங்களால் முடிந்தவரை அவர்களுக்கு உதவியாகவும், உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருங்கள்..
Wednesday, March 3, 2010
நேர்மை சோதிக்கப்படும் சில கணங்கள்..
அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த போது இரவு 8 மணியிருக்கும்.. வழக்கம் போலலாமல் அன்று அதிகமாகவே பசித்தது. 'ஒருவேளை ஸ்நாக்ஸ் (snacks) ஏதும் இவினிங் சாப்பிடாததால இருக்கும்', என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன். நான் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் புதிதாக ஒரு ரெஸ்டாரன்ட் (restaurant) திறந்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. "அம்மா பிரியாணி"யென்று பெரிய பலகையுடன் ஜொலித்த அந்த ரெஸ்டாரண்டில் உணவு எப்படியிருகிறதென்று ஒருநாள் ருசி பார்க்க வேண்டுமென்று யோசித்து கொண்டிருந்தேன். பசி அதிகமாக இருக்கவும், 'இன்று நல்ல நாள்..' என்று எனக்கு நானே சொல்லி கொண்டு அந்த ரெஸ்டாரன்டிற்குள் நுழைந்தேன்.
மிகுந்த யோசனையுடன் நேர்த்தியாக போடப்பட்ட மேஜைகள், வண்ண சுவர் அழங்காரங்கள், மனதை தாலாட்டும் இசையென்று சூழ்நிலையை (environement) மிகவும் அருமையாகவே வைத்திருந்தனர்.. உட்கார்ந்த சிறிது நேரத்தில், மிகவும் பவ்யமாக ஒருவன் வந்து நின்றான். மெனு கார்டை நீட்டினான். மிகவும் குறைவான உணவு வகைகளே மெனு கார்டில் இருந்தன. "மே பி தே ஆர் கன்சென்ட்ரேடிங் ஆன் க்வாலிட்டி ஆப் ஐடம்ஸ் தான் க்வாண்டிட்டி (may be they are concentrating on quality of items than quantity)", என்று நினைத்தேன். மெனு கார்டில் இருந்தவைகளை ஒருமுறை பார்த்து விட்டு, "ஒன் எக் பிரியாணி.. அண்ட்.. ஹ்ம்ம் ஒன் சிக்கன் கர்ரி.. (one egg briyani.. and.. hmmm.. one chicken curry)", என்றேன்.
நான் சொன்னவற்றை குறித்து கொண்டு நகர முயன்றவனை, "ஹ்ம்ம் வெயிட்..," என்று சட்டென்று தடுத்து, "மேக் இட் சிக்கன் 65.. நாட் சிக்கன் கர்ரி..", என்றேன். அவன் ஆர்டரை திருத்தி எழுதி கொண்டு, மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்திக் கொள்ள திரும்ப சொன்னான். "ஒன் ப்ளேட் சிக்கன் 65 அண்ட் சிக்கன் பிரியாணி..", என்று சொல்லிவிட்டு எனது முக அசைவை நோக்கினான்.
நான் புன்னகைத்து கொண்டு, "நோ.. சிக்கன் 65 அண்ட் எக் பிரியாணி.." என்று சொல்ல, மீண்டும் திருத்தி கொண்டு உள்ளே சென்றான். பின்பு மினரல் வாட்டரை அழகான தம்ளர்களில் பரிமாறினான். சிறிது நேரத்தில் உணவு வந்துவிட்டது. சிக்கனை எடுத்து கடித்து பார்த்தேன்.. சுவை நன்றாகவே இருந்தது.. பிரியாணியை சுவைத்தேன்.. அதுவும் சுவையாகவே இருந்தது.. "ஹப்பா.. கடைசியில ஒரு நல்ல ஹோட்டல் பக்கதுல வந்துடுச்சு..", என்று சந்தோஷப்பட்டேன்.
சாப்பிட்டு முடித்ததும் பில் கொண்டு வந்து வைத்தான். எக் பிரியாணிக்கு பதிலாக பிரியாணி ரைஸ் (briyani rice) என்று தவறுதலாக குறிப்பிட்டு இருக்க, மொத்த தொகையில் 10 ரூபாய் குறைவாக குறிப்பிடப்பட்டிருந்தது.. ஏனெனில் பிரியாணி ரைஸின் விலை எக் பிரியாணியை விட 10 ரூபாய் குறைவு.. 'ஆஹா.. 10 ரூபாய் கம்மியா போட்டிருக்கானுங்க..' என்று உள்ளுக்குள் ஒரு குதூகல உணர்வு தோன்றியது. ஆனால் அது சில வினாடிகளுக்கு மட்டும் தான். உள்ளுக்குள் இருந்த மனசாட்சி உடனே விழித்து கொண்டது. "பால்.. தப்பா போட்டிருக்கீங்கன்னு உண்மைய சொல்லிடு..", என்று கத்த ஆரம்பித்து விட்டது.
உண்மையை சொல்லிவிடலாமென்று போகும் அந்த வினாடியில், "வெயிட்.." என்று எனது மனதின் இன்னொருபுறம் சொல்லியது. "தப்பா பில் போட்டிருக்கீங்கன்னு சொல்லி வேற பில் கேட்டா, 'ஏண்டா சரியா சொல்லலன்னு' இவன கண்டிப்பா அவனோட முதலாளி அடிக்க போறான்.. பாவம்..", என்று தோன்றியது. "அதுக்கப்பறம் அவன் முதலாளி இனிமே இவன எதுக்கும் நம்பாம போகறதுக்கும் வாய்ப்பிருக்கு..", என்று தோன்றியது. 'நம்மளால எதுக்கு ஒருத்தனோட வேலையிலே ப்ராப்ளம் வரணும்..', என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்..
இப்போது என்ன செய்வதென்று எனக்கு புரியவில்லை.. "நேர்மையாக இருப்பதா..? அல்லது இவனை காப்பாற்றுவதா..?", என்று யோசித்தேன். 'இவன காப்பாத்தினா மறுபடியும் இவன் இதே மாதிரி கவன குறைவா இருந்து இதே தப்ப செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம்..?', என்றும் தோன்றியது. 'நா சொல்லாம போறது இவன் கவன குறைவா இருக்கறத உற்சாகப்படுத்துற மாதிரியில்ல ஆயிடும்..', என்று நினைத்தேன். அவன் செய்த தவறை தொடர்ந்து செய்வதற்கு அனுமதிக்கவும் மனம் வரவில்லை. சில வினாடிகள் குழம்பி தான் போய்விட்டேன், என்ன செய்வதென்று தெரியாமல்!
கொஞ்ச நேரம் யோசித்தேன்.. "அஹ்.. ஹெல் வித் தெம் (hell with them)! அதான் இவனுங்க இவ்ளோ அதிகமா சார்ஜ் பண்றானுங்களே, பத்து ரூபா கடைகாரனுக்கு ஒன்னும் பெரிய இழப்பு இல்ல..", என்று தோன்ற, கிடைத்த பத்து ரூபாயில் ஐந்து ரூபாயை டிப்ஸில் சேர்த்து வைத்து விட்டு, மீதி ஐந்தை எனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டேன். "அவனுக்கும் எனக்கும் பிப்டி-பிப்டி..", என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.
"என்னை அப்டி பாக்காதீங்க ப்ளீஸ்!".. 'நா நல்லவன் தாங்க.. உண்மையிலேயே அவன காப்பாத்தனும்னு தான் நா சொல்லல.. நா பில்லு தப்புன்னு சொல்ல போக, அவன் வேலைக்கு ஏதாச்சும் ப்ராப்ளம் வந்திட போகுதுன்ற நல்ல எண்ணத்துல தான்..'
ஆனால் அவனை தனியாக பார்த்து, "பில்லை தவறாக போட்டிருக்கிறாய், சொன்னால் உன் வேலைக்கு பிரச்சனையாகிவிடும் என்று தான் நான் சொல்லவில்லை.. இனிமேல் இப்படி கவன குறைவாக இருக்காதே..", என்று சொல்லிவிட்டு வந்திருக்கலாமென்று வீட்டிற்கு வந்தவுடன் தான் தோன்றியது.
என்னமோங்க.. அந்த பத்து ரூபாய வைச்சிக்க எனக்கு மனசு வரல.. அதனால என்னோட நேர்மைக்காக, நா அந்த பத்து ரூபாய என்னோட நன்கொடை நிதியிலே (charity fund) போட்டுறேன்.. கண்டிப்பா கஷ்டப்படுற யாருக்காவது உதவறப்போ அந்த பத்து ரூபாயையும் சேத்து கொடுத்திடுறேன். ஓகே வா.. என்னை நம்புங்க..
மிகுந்த யோசனையுடன் நேர்த்தியாக போடப்பட்ட மேஜைகள், வண்ண சுவர் அழங்காரங்கள், மனதை தாலாட்டும் இசையென்று சூழ்நிலையை (environement) மிகவும் அருமையாகவே வைத்திருந்தனர்.. உட்கார்ந்த சிறிது நேரத்தில், மிகவும் பவ்யமாக ஒருவன் வந்து நின்றான். மெனு கார்டை நீட்டினான். மிகவும் குறைவான உணவு வகைகளே மெனு கார்டில் இருந்தன. "மே பி தே ஆர் கன்சென்ட்ரேடிங் ஆன் க்வாலிட்டி ஆப் ஐடம்ஸ் தான் க்வாண்டிட்டி (may be they are concentrating on quality of items than quantity)", என்று நினைத்தேன். மெனு கார்டில் இருந்தவைகளை ஒருமுறை பார்த்து விட்டு, "ஒன் எக் பிரியாணி.. அண்ட்.. ஹ்ம்ம் ஒன் சிக்கன் கர்ரி.. (one egg briyani.. and.. hmmm.. one chicken curry)", என்றேன்.
நான் சொன்னவற்றை குறித்து கொண்டு நகர முயன்றவனை, "ஹ்ம்ம் வெயிட்..," என்று சட்டென்று தடுத்து, "மேக் இட் சிக்கன் 65.. நாட் சிக்கன் கர்ரி..", என்றேன். அவன் ஆர்டரை திருத்தி எழுதி கொண்டு, மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்திக் கொள்ள திரும்ப சொன்னான். "ஒன் ப்ளேட் சிக்கன் 65 அண்ட் சிக்கன் பிரியாணி..", என்று சொல்லிவிட்டு எனது முக அசைவை நோக்கினான்.
நான் புன்னகைத்து கொண்டு, "நோ.. சிக்கன் 65 அண்ட் எக் பிரியாணி.." என்று சொல்ல, மீண்டும் திருத்தி கொண்டு உள்ளே சென்றான். பின்பு மினரல் வாட்டரை அழகான தம்ளர்களில் பரிமாறினான். சிறிது நேரத்தில் உணவு வந்துவிட்டது. சிக்கனை எடுத்து கடித்து பார்த்தேன்.. சுவை நன்றாகவே இருந்தது.. பிரியாணியை சுவைத்தேன்.. அதுவும் சுவையாகவே இருந்தது.. "ஹப்பா.. கடைசியில ஒரு நல்ல ஹோட்டல் பக்கதுல வந்துடுச்சு..", என்று சந்தோஷப்பட்டேன்.
சாப்பிட்டு முடித்ததும் பில் கொண்டு வந்து வைத்தான். எக் பிரியாணிக்கு பதிலாக பிரியாணி ரைஸ் (briyani rice) என்று தவறுதலாக குறிப்பிட்டு இருக்க, மொத்த தொகையில் 10 ரூபாய் குறைவாக குறிப்பிடப்பட்டிருந்தது.. ஏனெனில் பிரியாணி ரைஸின் விலை எக் பிரியாணியை விட 10 ரூபாய் குறைவு.. 'ஆஹா.. 10 ரூபாய் கம்மியா போட்டிருக்கானுங்க..' என்று உள்ளுக்குள் ஒரு குதூகல உணர்வு தோன்றியது. ஆனால் அது சில வினாடிகளுக்கு மட்டும் தான். உள்ளுக்குள் இருந்த மனசாட்சி உடனே விழித்து கொண்டது. "பால்.. தப்பா போட்டிருக்கீங்கன்னு உண்மைய சொல்லிடு..", என்று கத்த ஆரம்பித்து விட்டது.
உண்மையை சொல்லிவிடலாமென்று போகும் அந்த வினாடியில், "வெயிட்.." என்று எனது மனதின் இன்னொருபுறம் சொல்லியது. "தப்பா பில் போட்டிருக்கீங்கன்னு சொல்லி வேற பில் கேட்டா, 'ஏண்டா சரியா சொல்லலன்னு' இவன கண்டிப்பா அவனோட முதலாளி அடிக்க போறான்.. பாவம்..", என்று தோன்றியது. "அதுக்கப்பறம் அவன் முதலாளி இனிமே இவன எதுக்கும் நம்பாம போகறதுக்கும் வாய்ப்பிருக்கு..", என்று தோன்றியது. 'நம்மளால எதுக்கு ஒருத்தனோட வேலையிலே ப்ராப்ளம் வரணும்..', என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்..
இப்போது என்ன செய்வதென்று எனக்கு புரியவில்லை.. "நேர்மையாக இருப்பதா..? அல்லது இவனை காப்பாற்றுவதா..?", என்று யோசித்தேன். 'இவன காப்பாத்தினா மறுபடியும் இவன் இதே மாதிரி கவன குறைவா இருந்து இதே தப்ப செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம்..?', என்றும் தோன்றியது. 'நா சொல்லாம போறது இவன் கவன குறைவா இருக்கறத உற்சாகப்படுத்துற மாதிரியில்ல ஆயிடும்..', என்று நினைத்தேன். அவன் செய்த தவறை தொடர்ந்து செய்வதற்கு அனுமதிக்கவும் மனம் வரவில்லை. சில வினாடிகள் குழம்பி தான் போய்விட்டேன், என்ன செய்வதென்று தெரியாமல்!
கொஞ்ச நேரம் யோசித்தேன்.. "அஹ்.. ஹெல் வித் தெம் (hell with them)! அதான் இவனுங்க இவ்ளோ அதிகமா சார்ஜ் பண்றானுங்களே, பத்து ரூபா கடைகாரனுக்கு ஒன்னும் பெரிய இழப்பு இல்ல..", என்று தோன்ற, கிடைத்த பத்து ரூபாயில் ஐந்து ரூபாயை டிப்ஸில் சேர்த்து வைத்து விட்டு, மீதி ஐந்தை எனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டேன். "அவனுக்கும் எனக்கும் பிப்டி-பிப்டி..", என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.
"என்னை அப்டி பாக்காதீங்க ப்ளீஸ்!".. 'நா நல்லவன் தாங்க.. உண்மையிலேயே அவன காப்பாத்தனும்னு தான் நா சொல்லல.. நா பில்லு தப்புன்னு சொல்ல போக, அவன் வேலைக்கு ஏதாச்சும் ப்ராப்ளம் வந்திட போகுதுன்ற நல்ல எண்ணத்துல தான்..'
ஆனால் அவனை தனியாக பார்த்து, "பில்லை தவறாக போட்டிருக்கிறாய், சொன்னால் உன் வேலைக்கு பிரச்சனையாகிவிடும் என்று தான் நான் சொல்லவில்லை.. இனிமேல் இப்படி கவன குறைவாக இருக்காதே..", என்று சொல்லிவிட்டு வந்திருக்கலாமென்று வீட்டிற்கு வந்தவுடன் தான் தோன்றியது.
என்னமோங்க.. அந்த பத்து ரூபாய வைச்சிக்க எனக்கு மனசு வரல.. அதனால என்னோட நேர்மைக்காக, நா அந்த பத்து ரூபாய என்னோட நன்கொடை நிதியிலே (charity fund) போட்டுறேன்.. கண்டிப்பா கஷ்டப்படுற யாருக்காவது உதவறப்போ அந்த பத்து ரூபாயையும் சேத்து கொடுத்திடுறேன். ஓகே வா.. என்னை நம்புங்க..
Subscribe to:
Comments (Atom)