பின்னிக் கொள்ளும் விரலிடுக்குகளில் காற்றுக் கூட நுழைந்திடாதவாறு பிடித்திருக்கும் இறுக்கம் அழுத்தமாய் உணர்த்துகிறது நீ என் மேல் வைத்திருக்கும் பிரியங்களின் அளவை.. அன்பும் காதலும் இரண்டற கலந்து பிணைந்திருக்கும் அத்தருணங்களில் உள்ளங்கைகளுக்குள் மெலிதாய் படரும் வியர்வையின் சில துளிகள் இயல்பே என்றாலும் கூட, பிணைப்பின் இறுக்கம் குறைவதை போன்றதொரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாலோ என்னவோ அதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை..
நீ என்னுடன் கைக் கோர்த்தபடியே பூமிக்கு காயமேற்படாதவாறு அடிமேல் அடி வைத்து பூனைநடை நடக்கும் போதெல்லாம், உலகின் விலையுயர்ந்த பொக்கிஷத்தை சொந்தமாக்கிக் கொண்டதொரு பெருமிதம் என் நடையில் லேசாக கலந்திருப்பதை நீ கவனித்தாயோ என்னவோ.. எல்லோரும் நம் திசை கவனிப்பதை போன்றதொரு உணர்வு உள்ளுக்குள் மேலெழ பெருமிதத்தின் அளவு கூடுகின்றது..
கடற்கரை மணலில் தோள் சாய்ந்து நாம் அமர்ந்திருக்கும் கணங்களில், உனக்கும் எனக்கும் மட்டுமே கேட்குமானதொரு மெல்லிய குரலில் உன்னை நான் சீண்ட, நீயோ பொய்க் கோபம் கொண்டு மெல்லமாய் என் மேனியை அடிப்பதாக பாவனை செய்கிறாய்.. தென்றல் தீண்டுவதை விட மேலானதொரு சுகத்தை அப்போது உணர்ந்தாலும், உள்ளுக்குள்ளிருக்கும் ஏதோவொரு உணர்வின் தூண்டலில் வலிப்பதாய் நடித்து உடலை பின்னுக்கிழுக்கிறேன்.. நீயோ காற்றினது திசையில் தலை சாய்க்கும் நாணலைப் போல் என் இழுப்பிற்கு ஈடு கொடுத்து, உடல் வளைத்து தோளில் சாய்கிறாய்.. உலகத்தின் இன்பங்களெல்லாம் ஒட்டுமொத்தமாய் என் திசை ஓடிவந்து தேகம் நனைத்ததொரு உணர்வு உள்ளுக்குள் பரவுகிறது..
உன் உதடுகளில் மோதும் காற்றானது ஓசையுடன் திரும்பி வந்து என் செவிகளில் தொடர்ந்து விழுந்த வண்ணமிருந்தாலும், அருந்திடாத மதுவின் போதையொத்த மயக்கத்திலேயே மனமானது மயங்கி கிடக்கின்றது.. நீ கதைக்கும் வார்த்தைகள் காதுகளுக்குள் நுழைந்து அவற்றின் அர்த்தம் உணர்வதற்குள் உன்னை பற்றிய ஏதோ ஒன்று மனதின் கவனத்தை ஈர்த்து விடுகின்றது.. மீண்டும் அகம் தழுவுகின்றது அந்த மது மயக்கம்.. சொல்வதை கவனிக்கவில்லையென்று மீண்டும் நீ பொய் கோபம் போர்த்திக் கொள்ள, 'உன் உதடுகளிலிருந்து பிரிந்து வந்து விடுவதால் தான் அவ்வார்த்தைகளை என்னுள்ளம் கவனிக்க தவறிவிடுகின்றது' என்பதை எப்படி சொல்லி உனக்கு புரியவைப்பேன்.. மீண்டும் பொய்யாய் அடிக்கிறாய்.. நான் விலகிக் கொள்ள, சிரித்தபடி தோள் சாய்ந்து அணைக்கிறாய்.. மீள முடியாத இன்பத்தில் புதையுண்டதொரு உணர்வு உள்ளுக்குள் படர்கிறது..
மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!
Thursday, April 29, 2010
Friday, April 23, 2010
இன்னும் சில சிந்தனைகள்.. (9)
"கவலைகள் உனக்குள் வாழட்டும்.. நீ கவலைகளுக்குள் வாழாதே..!!" என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம்.. படித்தது பிடித்து விட்டதால், பசையில்லாமலேயே பட்டென்று ஒட்டிக் கொண்டு விட்டது மனதில். தெரிந்தோ தெரியாமலோ, பிடித்தோ பிடிக்காமலோ பலர் வாழ்ந்துக் கொண்டிருப்பது கவலைகளுக்குள் தான். ஏதோ ஒன்றை பற்றியதொரு கவலையும் அதை சார்ந்த சங்கடங்களையும் மனதிற்குள் அசை போட்டுக் கொண்டு, அறையினொரு மூலையில் தலையணையை அணைத்தபடியே சாய்ந்துக் கொண்டு தம்மை வருத்திக் கொள்வது பலருக்கு வாடிக்கையாகி விட்டது.
"துன்பமென்னும் பறவை உன் தலை மேல் பறந்து செல்ல அனுமதி.. ஆனால் அது உன் தலையில் கூடு கட்ட அனுமதிக்காதே" என்று சொல்லுவார்கள்.. இங்கே பலர் கூடு கட்ட அனுமதிப்பது மட்டுமல்லாமல், அது குஞ்சு பொறித்து குடும்பம் நடத்தும் அளவிற்கும் கூட விட்டு விடுகிறார்கள். ஒருவிதத்தில் நடந்தவை பற்றியும் அவை சார்ந்த கவலைகள் பற்றியும் மட்டுமே யோசிக்கும் போது, கண்முன் தெரியும் வாய்ப்புகளையும் மகிழ்வதற்காக நமக்கிருக்கும் காரணங்களையும் கண்டு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
உண்மையை சொல்லப்போனால், கவலைகளும் பதற்றமும் கடந்த காலத்தின் சுவடுகளை பாதிக்கின்றனவோ இல்லையோ, நிச்சயமாக அவை நிகழ்காலத்தின் இருப்புகளையும் எதிர்காலத்தின் நிகழ்வுகளையும் பாதிக்கும் சக்தி படைத்தவை. தவறிழைத்தவன் கவலையிழாந்து பதறும் போது தொடர்ந்து எடுத்து வைக்கும் அடிகளும் தவற ஆரம்பித்து விடலாம். கீழே விழாமல் தொடர்ந்து முன்னேறுவதற்கு எடுத்து வைத்த அடியை பற்றியோ, அப்போது பாதங்களை பதம் பார்த்த முட்கள் பற்றியோ எண்ணுவது உதவவே உதவாது. எடுத்து வைக்க இருக்கும் அடிகள் பற்றியும், அங்கே பாதங்களை கீறும்படியாக ஏதேனும் உள்ளனவா என்று கடந்தகால படிப்பினைகளின் உதவியுடன் ஆராயும் மனப்பான்மையும் தான் கீழே விழாமல் தொடர்ந்து முன்னேறுவதற்கு உதவியாக இருக்கும்.
துன்பம் வந்து விட்டால் அறை கதவை தாழிட்டு கண்ணீருடன் படுக்கையில் புரள்வது தான் ஒரே தீர்வென்றால், வீதிகளெல்லாம் எப்போதோ வெறிச்சோடிப் போயிருக்கும்.. வாழ்க்கை கடினமான கரம் கொண்டு உங்களை நோக்கி போர்த் தொடுக்கும் போது, 'ஐயகோ.. நான் என் செய்வேன்..' என்று அதனிடம் கண்ணீருடன் அழுது புலம்பினால், "நிராயுதபானியே நீ போ.." என்று பரிதாபப்பட்டு உங்களை விட்டுவிடுவதற்கு வாழ்க்கையொன்றும் உயர்ந்த கொள்கை மிக்க போர் வீரனல்ல.. நாம் போராட முயலவில்லையென்றால் எதிர்த்து நிற்கும் சோதனைகள் எளிதாக நம்மை வீழ்த்தி விடும்.
எனவே கவலை சார்ந்தவைகளை எண்ணி கண்கலங்கிக் கொண்டிராமல், முன்னோக்கிய பார்வையுடன் எதிர்த்துப் போராடும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் நல்ல ஆலோசனைகளை வழங்குவதற்கு உங்கள் போர்ப்படையில் மந்திரிகளாகவும் அமைச்சர்களாகவும் நல்ல நண்பர்களை வைத்துக் கொள்ளுங்கள். தனியாயிருக்கும் போது உள்ளுக்குள் பரவும் நடுக்கமும் கலக்கமும், ஆதரவாக சிலர் இருக்கும் போது இருக்குமிடம் தெரியாமல் காணாமல் போய்விடும். எப்படியிருந்தாலும் வாளெடுத்துக் கொண்டு முன் செல்ல வேண்டியது நீங்கள் தான் என்பதை மறவாதீர்கள்..
"துன்பமென்னும் பறவை உன் தலை மேல் பறந்து செல்ல அனுமதி.. ஆனால் அது உன் தலையில் கூடு கட்ட அனுமதிக்காதே" என்று சொல்லுவார்கள்.. இங்கே பலர் கூடு கட்ட அனுமதிப்பது மட்டுமல்லாமல், அது குஞ்சு பொறித்து குடும்பம் நடத்தும் அளவிற்கும் கூட விட்டு விடுகிறார்கள். ஒருவிதத்தில் நடந்தவை பற்றியும் அவை சார்ந்த கவலைகள் பற்றியும் மட்டுமே யோசிக்கும் போது, கண்முன் தெரியும் வாய்ப்புகளையும் மகிழ்வதற்காக நமக்கிருக்கும் காரணங்களையும் கண்டு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
உண்மையை சொல்லப்போனால், கவலைகளும் பதற்றமும் கடந்த காலத்தின் சுவடுகளை பாதிக்கின்றனவோ இல்லையோ, நிச்சயமாக அவை நிகழ்காலத்தின் இருப்புகளையும் எதிர்காலத்தின் நிகழ்வுகளையும் பாதிக்கும் சக்தி படைத்தவை. தவறிழைத்தவன் கவலையிழாந்து பதறும் போது தொடர்ந்து எடுத்து வைக்கும் அடிகளும் தவற ஆரம்பித்து விடலாம். கீழே விழாமல் தொடர்ந்து முன்னேறுவதற்கு எடுத்து வைத்த அடியை பற்றியோ, அப்போது பாதங்களை பதம் பார்த்த முட்கள் பற்றியோ எண்ணுவது உதவவே உதவாது. எடுத்து வைக்க இருக்கும் அடிகள் பற்றியும், அங்கே பாதங்களை கீறும்படியாக ஏதேனும் உள்ளனவா என்று கடந்தகால படிப்பினைகளின் உதவியுடன் ஆராயும் மனப்பான்மையும் தான் கீழே விழாமல் தொடர்ந்து முன்னேறுவதற்கு உதவியாக இருக்கும்.
துன்பம் வந்து விட்டால் அறை கதவை தாழிட்டு கண்ணீருடன் படுக்கையில் புரள்வது தான் ஒரே தீர்வென்றால், வீதிகளெல்லாம் எப்போதோ வெறிச்சோடிப் போயிருக்கும்.. வாழ்க்கை கடினமான கரம் கொண்டு உங்களை நோக்கி போர்த் தொடுக்கும் போது, 'ஐயகோ.. நான் என் செய்வேன்..' என்று அதனிடம் கண்ணீருடன் அழுது புலம்பினால், "நிராயுதபானியே நீ போ.." என்று பரிதாபப்பட்டு உங்களை விட்டுவிடுவதற்கு வாழ்க்கையொன்றும் உயர்ந்த கொள்கை மிக்க போர் வீரனல்ல.. நாம் போராட முயலவில்லையென்றால் எதிர்த்து நிற்கும் சோதனைகள் எளிதாக நம்மை வீழ்த்தி விடும்.
எனவே கவலை சார்ந்தவைகளை எண்ணி கண்கலங்கிக் கொண்டிராமல், முன்னோக்கிய பார்வையுடன் எதிர்த்துப் போராடும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் நல்ல ஆலோசனைகளை வழங்குவதற்கு உங்கள் போர்ப்படையில் மந்திரிகளாகவும் அமைச்சர்களாகவும் நல்ல நண்பர்களை வைத்துக் கொள்ளுங்கள். தனியாயிருக்கும் போது உள்ளுக்குள் பரவும் நடுக்கமும் கலக்கமும், ஆதரவாக சிலர் இருக்கும் போது இருக்குமிடம் தெரியாமல் காணாமல் போய்விடும். எப்படியிருந்தாலும் வாளெடுத்துக் கொண்டு முன் செல்ல வேண்டியது நீங்கள் தான் என்பதை மறவாதீர்கள்..
Wednesday, April 21, 2010
வாங்க.. காற்று வாங்கலாம்!! (1)
சில நேரங்களில் பாராட்டப்படும் போது என் செவிகளில் விழும் வார்த்தைகள், "உண்மையிலேயே நல்லாயிருக்கு (really good or really nice)", என்பது..
உடனே அப்படி பாராட்டுபவர்களிடம், "அதென்ன உண்மையிலேயே நல்லாயிருக்கு? அப்போ இவ்வளவு நாள் வெறுமனே 'நல்லாயிருக்கு'ன்னு மட்டும் நீங்க சொன்னதெல்லாம் உண்மையான பாராட்டில்லையா..?", என்று கேட்க வேண்டும் போலிருக்கும் எனக்கு.
ஆனால் இதுவரை யாரிடமும் அதை கேட்டதில்லை. ஒருவேளை 'ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்றதுக்கு பதிலா தான் உண்மையிலேயே நல்லாயிருக்குன்னு சொல்றாங்களோ..', என்று மனதை தேற்றிக் கொள்ள முயல்வதுண்டு. ஆனால் அந்த சிந்தனை தட்டிய சில வினாடிகளிலேயே மறுபடியும் அவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், "உண்மையிலேயே ரொம்ப நல்லாயிருக்கு". "மறுபடியும் 'உண்மையிலேயே'வா..? அப்போ இவ்வளவு நாள் சும்மா தான் நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு இருந்தீங்களா..?", என்று கேட்க எத்தனிக்கும் நாவை மிகவும் கடினப்பட்டு அடக்க வேண்டியதாகிவிடும்.
எதற்காக 'உண்மையிலேயே' என்று பல இடங்களில் தேவையில்லாமல் சேர்த்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை. 'உண்மையிலேயே டேஸ்ட்டா இருக்கு (really tasty)'.. 'உண்மையிலேயே உனக்காக நா சந்தோஷப்படுறேன் (really i'm happy for you)'.. 'இன்னிக்கு உங்க டிரஸ் உண்மையிலேயே நல்லாயிருக்கு (your dress is really looking good today)'.. இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். "எப்பவும் உண்மையே பேசுங்க.. அப்ப தேவையில்லாம 'உண்மையிலேயே'ன்னு ஒரு வார்த்தைய சேத்துக்கனும்னு தோணாது", என்று அவர்களுக்கு பொதுவானதொரு அறிவுரையை கூற வேண்டுமென்று தோன்றுவதுண்டு.
'எல்லா நேரத்திலயும் நல்லாயில்லன்னு உண்மைய சொல்ல முடியாதில்லையா.. அவங்க மனசு கஷ்டப்படாதா?', என்று கேட்பீர்களேயானால், அப்படி அவர்கள் மனம் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக பொய் சொல்லி இருந்தால், அது பொய்யென்று அவர்களுக்கு தெரியாமலேயே இருக்கட்டும். அப்போது தான் நீங்கள் பொய் சொன்னதற்கு கொஞ்சமாவது அர்த்தமுண்டு.. எனவே இனி 'உண்மையிலேயே' என்பதை கொஞ்சம் பார்த்து உபயோகியுங்கள். 'உண்மையிலேயே' என்று சொல்லப் போய், நீங்கள் இதுவரை சொன்னது உண்மையில்லையென்று ஆகிவிடக் கூடாது..
'டேய்.. இது ஒரு சாதாரண விஷயம்.. இதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்கிற..' என்று சொல்கிறீர்களா..? என்ன செய்வது.. இப்போதெல்லாம் வார்த்தைகளை மிகவும் கவனத்துடன் அசை போடுகின்றது மனம். வார்த்தைகளை ஆராயாமல் வாக்கியங்கள் தரும் இதமான சூட்டில் குளிர் காய நான் முயலாமலில்லை. சில நேரங்களில் என்னால் அது முடிவதில்லை..
உடனே அப்படி பாராட்டுபவர்களிடம், "அதென்ன உண்மையிலேயே நல்லாயிருக்கு? அப்போ இவ்வளவு நாள் வெறுமனே 'நல்லாயிருக்கு'ன்னு மட்டும் நீங்க சொன்னதெல்லாம் உண்மையான பாராட்டில்லையா..?", என்று கேட்க வேண்டும் போலிருக்கும் எனக்கு.
ஆனால் இதுவரை யாரிடமும் அதை கேட்டதில்லை. ஒருவேளை 'ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்றதுக்கு பதிலா தான் உண்மையிலேயே நல்லாயிருக்குன்னு சொல்றாங்களோ..', என்று மனதை தேற்றிக் கொள்ள முயல்வதுண்டு. ஆனால் அந்த சிந்தனை தட்டிய சில வினாடிகளிலேயே மறுபடியும் அவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், "உண்மையிலேயே ரொம்ப நல்லாயிருக்கு". "மறுபடியும் 'உண்மையிலேயே'வா..? அப்போ இவ்வளவு நாள் சும்மா தான் நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு இருந்தீங்களா..?", என்று கேட்க எத்தனிக்கும் நாவை மிகவும் கடினப்பட்டு அடக்க வேண்டியதாகிவிடும்.
எதற்காக 'உண்மையிலேயே' என்று பல இடங்களில் தேவையில்லாமல் சேர்த்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை. 'உண்மையிலேயே டேஸ்ட்டா இருக்கு (really tasty)'.. 'உண்மையிலேயே உனக்காக நா சந்தோஷப்படுறேன் (really i'm happy for you)'.. 'இன்னிக்கு உங்க டிரஸ் உண்மையிலேயே நல்லாயிருக்கு (your dress is really looking good today)'.. இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். "எப்பவும் உண்மையே பேசுங்க.. அப்ப தேவையில்லாம 'உண்மையிலேயே'ன்னு ஒரு வார்த்தைய சேத்துக்கனும்னு தோணாது", என்று அவர்களுக்கு பொதுவானதொரு அறிவுரையை கூற வேண்டுமென்று தோன்றுவதுண்டு.
'எல்லா நேரத்திலயும் நல்லாயில்லன்னு உண்மைய சொல்ல முடியாதில்லையா.. அவங்க மனசு கஷ்டப்படாதா?', என்று கேட்பீர்களேயானால், அப்படி அவர்கள் மனம் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக பொய் சொல்லி இருந்தால், அது பொய்யென்று அவர்களுக்கு தெரியாமலேயே இருக்கட்டும். அப்போது தான் நீங்கள் பொய் சொன்னதற்கு கொஞ்சமாவது அர்த்தமுண்டு.. எனவே இனி 'உண்மையிலேயே' என்பதை கொஞ்சம் பார்த்து உபயோகியுங்கள். 'உண்மையிலேயே' என்று சொல்லப் போய், நீங்கள் இதுவரை சொன்னது உண்மையில்லையென்று ஆகிவிடக் கூடாது..
'டேய்.. இது ஒரு சாதாரண விஷயம்.. இதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்கிற..' என்று சொல்கிறீர்களா..? என்ன செய்வது.. இப்போதெல்லாம் வார்த்தைகளை மிகவும் கவனத்துடன் அசை போடுகின்றது மனம். வார்த்தைகளை ஆராயாமல் வாக்கியங்கள் தரும் இதமான சூட்டில் குளிர் காய நான் முயலாமலில்லை. சில நேரங்களில் என்னால் அது முடிவதில்லை..
Saturday, April 17, 2010
பிழைப்பேற்படுத்தும் சோம்பேறித்தனம்..
முற்றிலும் சீவப்படாத தலை.. அழகுபடுத்தப்படாத முகம்.. கழுத்தில் மெலிதாக தெரியும் மஞ்சள் கயிறு.. சற்றே சுருங்கிய உடையென்று எதிர் வீட்டு வாசல் தொட்டு உள் நுழைந்த அந்த பெண்ணிற்கு இருபத்தைந்து வயதிருக்கும். முகத்தில் கொஞ்சி அழுது வடிந்தது சோகத்தின் சாயல். அது சோகமா அல்லது சோர்வா..? சொல்லத் தெரியவில்லை எனக்கு. வெளிக் கதவை திறக்கையிலேயே பழகிவிட்ட நாயின் முகம் பார்த்து லேசாய் புன்னகைத்தாள். நாய் முகத்தில் எட்டிப் பார்த்தது சின்னதாய் ஒரு சிநேகிதம்.. வளைந்து நெளிந்து ஒரு குட்டியாட்டம் போட்ட அதன் வாலிலிருந்து அதை அறிய முடிந்தது. சில வினாடிகளில் புன்னகை வடிந்து, மீண்டும் அவள் முகம் போர்த்திக் கொண்டது அந்த சோர்வின் (சோர்வா அல்லது சோகமா) சாயம்..
அந்த பெண்ணை பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது அவள் அவ்வீட்டு வேலைகளை செய்ய வந்திருக்கிறாள் என்பது. திறக்கப்பட்ட கதவின் வழி உள்ளே அனுமதிக்கப்பட்டவளின் காதுகளை சட்டென்று மொய்க்க ஆரம்பித்தன வீட்டு எஜமானியின் அடுக்கடுக்கான ஆணைகள்.. செய்ய வேண்டிய வேலைகள் பற்றி.. வீட்டு எஜமானி அவளிடம் பேசிய தோரணைகளும், அவள் நடத்தப்பட்ட விதமும் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லையென்றாலும், அவளென்னவோ அதை பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஒருவேளை அவள் மனம் அதற்கு பழக்கப்பட்டு இருக்கலாம் அல்லது அவள் தன்னை அதற்கு பழக்கப்படுத்தி இருக்கலாம்.
அழுக்கு துணிகளை துவைக்க, சமைக்க, பாத்திரம் கழுவ, வீடு பெருக்க, கழிவறை சுத்தம் செய்ய என்று வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்வோரை சந்திக்க நேரும் போதெல்லாம் எனக்கு தோன்றுவது, 'ஏன் அவரவர் வேலையை அவரவரால் பார்த்துக் கொள்ள முடியாது..?' என்பதே. 'உண்பதையும் உறங்குவதையும் மட்டுமே என்னால் செய்ய முடியும்.. மற்ற எல்லாவற்றிற்கும் எனக்கு ஆட்கள் வேண்டுமெ'ன்னும் மனப்பாங்கு கொண்டவர்கள் இப்போது அதிகரிக்க ஆரம்பித்து விட்டனர். தான் உண்ணும் தட்டை கழுவக் கூடவா இன்னொருவர் வேண்டுமென்று எனக்கு தோன்றுவதுண்டு.
அத்தகைய வேலைகளை செய்ய தனக்கு நேரமில்லையென்று சிலர் காரணம் கூறினாலும், பலரது காரணங்களோ சலிப்பு, சோம்பேறித்தனம் மற்றும் அருவெறுப்பு என்பதாகவே இருக்கின்றன.. ஆழ்ந்து நோக்கும் போது, ஒரு விதத்தில் அவர்கள் சொல்லும் அத்தகைய காரணங்கள் நல்லதென்றும் தோன்றுவதுண்டு.. சிலரது சோம்பேறித்தனமும் அருவெருப்பும் தானே பலரது வீடுகளிலின்று உலை கொதிக்க காரணமாக உள்ளன. பிரியமில்லையென்றாலும் பிழைப்பிற்காகவாவது வேறு வழியில்லாமல் அத்தகைய வேலைகளை செய்ய வேண்டிய சூழ்நிலையில் தானே இருக்கிறார்கள் பலர்.. ஆனால் அதற்காக அவர்கள் எந்த விதத்தில் குறைந்து விடுகிறார்கள்.. அவர்களும் நல்ல விதமாக நடத்தப்படலாமே..!
அந்த பெண்ணை பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது அவள் அவ்வீட்டு வேலைகளை செய்ய வந்திருக்கிறாள் என்பது. திறக்கப்பட்ட கதவின் வழி உள்ளே அனுமதிக்கப்பட்டவளின் காதுகளை சட்டென்று மொய்க்க ஆரம்பித்தன வீட்டு எஜமானியின் அடுக்கடுக்கான ஆணைகள்.. செய்ய வேண்டிய வேலைகள் பற்றி.. வீட்டு எஜமானி அவளிடம் பேசிய தோரணைகளும், அவள் நடத்தப்பட்ட விதமும் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லையென்றாலும், அவளென்னவோ அதை பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஒருவேளை அவள் மனம் அதற்கு பழக்கப்பட்டு இருக்கலாம் அல்லது அவள் தன்னை அதற்கு பழக்கப்படுத்தி இருக்கலாம்.
அழுக்கு துணிகளை துவைக்க, சமைக்க, பாத்திரம் கழுவ, வீடு பெருக்க, கழிவறை சுத்தம் செய்ய என்று வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்வோரை சந்திக்க நேரும் போதெல்லாம் எனக்கு தோன்றுவது, 'ஏன் அவரவர் வேலையை அவரவரால் பார்த்துக் கொள்ள முடியாது..?' என்பதே. 'உண்பதையும் உறங்குவதையும் மட்டுமே என்னால் செய்ய முடியும்.. மற்ற எல்லாவற்றிற்கும் எனக்கு ஆட்கள் வேண்டுமெ'ன்னும் மனப்பாங்கு கொண்டவர்கள் இப்போது அதிகரிக்க ஆரம்பித்து விட்டனர். தான் உண்ணும் தட்டை கழுவக் கூடவா இன்னொருவர் வேண்டுமென்று எனக்கு தோன்றுவதுண்டு.
அத்தகைய வேலைகளை செய்ய தனக்கு நேரமில்லையென்று சிலர் காரணம் கூறினாலும், பலரது காரணங்களோ சலிப்பு, சோம்பேறித்தனம் மற்றும் அருவெறுப்பு என்பதாகவே இருக்கின்றன.. ஆழ்ந்து நோக்கும் போது, ஒரு விதத்தில் அவர்கள் சொல்லும் அத்தகைய காரணங்கள் நல்லதென்றும் தோன்றுவதுண்டு.. சிலரது சோம்பேறித்தனமும் அருவெருப்பும் தானே பலரது வீடுகளிலின்று உலை கொதிக்க காரணமாக உள்ளன. பிரியமில்லையென்றாலும் பிழைப்பிற்காகவாவது வேறு வழியில்லாமல் அத்தகைய வேலைகளை செய்ய வேண்டிய சூழ்நிலையில் தானே இருக்கிறார்கள் பலர்.. ஆனால் அதற்காக அவர்கள் எந்த விதத்தில் குறைந்து விடுகிறார்கள்.. அவர்களும் நல்ல விதமாக நடத்தப்படலாமே..!
Tuesday, April 13, 2010
உறை போர்த்திக் கொள்ளும் சில விசும்பல்கள்..
'ஏன் சோகமாக இருக்கிறாய்..?' என்பதான கேள்விகள் தான் என்னை சுற்றி உலா வருகின்றன இப்போதெல்லாம்.. நட்பும் பாசமும் உள்ளவர்கள் சட்டென்று கண்டு கொள்கின்றனர் சில விஷயங்களை சொல்லாமலேயே.. உதடுகளை மேல்நோக்கி விரிக்க நான் என்ன தான் முயன்றாலும் ஏதோ ஒன்றின் பாரம் தாங்காமல் அவைகளாக கீழ் நோக்கி சுழித்துக் கொள்கின்றன.. நான் என்ன செய்வது!!
என்னால் முடிந்தவரை சிரிக்கிறேன்.. ஆனாலும் சிரிப்பின் சப்தங்கள் காற்றில் கரையும் முன்பே கண்களில் எட்டிப்பார்த்து விடுகின்றன சின்னதாய் சில துளிகள். உதடுகள் நடிப்பது கண்களுக்கு உடனடியாக தெரிந்து விடுகின்றது.. அதுவே பல நேரங்களில் அழுகையின் வீரியம் இன்னும் அதிகமாக காரணமாகி விடுகின்றது.
"ஏன் சோகமாக இருக்கிறாய்..?", என்று கேட்பவர்களுக்கு பெரும்பாலும் நான் அளிக்கும் பதில், "சோகமாக ஒன்றும் இல்லை.. சற்று சோர்வாக இருக்கிறது..!!" என்பது தான். ஆனால் அடிவேர் அறுந்து விட்ட பிறகு மரத்தால் எவ்வளவு நாட்கள் தான் தாக்கு பிடித்து நிற்க முடியும். கூடிய சீக்கிரமே வறட்சி தொற்றி பட்டு போய் சாயம் வெளுத்து விடாதா என்ன.. அப்படி தான் ஆகிவிடுகிறது பல நேரங்களில் என் நிலையும்..
சமாளித்து பதிலளிக்கிறேன் என்பது எனக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் தெரியும். அதனால் தான் மறுமொழியாக, "நன்றாக ஓய்வெடு.." என்று மட்டும் சொல்லாமல் "பார்த்துக் கொள்.." என்று நாசுக்காக சொல்லி விட்டும் பலர் செல்வதுண்டு. ஒருவிதத்தில் அப்படி அவர்கள் எளிதாக கண்டுபிடிக்கும்படி பதிலளிப்பது கூட என் மனதை அவர்களுக்கு வெளிப்படுத்த நான் எடுக்கும் முயற்சி தான். மனதின் எல்லா நிலைகளையும் (state of mind) மற்றவர்களுக்கு வெளிப்படுத்த எல்லா நேரங்களிலும் அகப்படுவதில்லை வார்த்தைகள்..
ஆழமாக உள்ளுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் சில நிகழ்வுகள் நடந்து விட்டாலோ அல்லது அதற்கு நிகரான சில சொற்கள் செவி தொட்டாலோ, பட்டென்று உடைந்து சுக்கு நூறாகி போகின்றது இதயம். உள்ளுக்குள் ஏற்பட்டுவிடும் பாதிப்பை கடினப்பட்டு மறைக்க முயன்றாலும் கூட பல நேரங்களில் முடிவதே இல்லை.. எப்படியோ அதன் சாயல் வெளியிலும் தெரிய ஆரம்பித்து விடுகிறது. நாடி நரம்புகளில் கலக்கப்பட்டுவிடும் விஷத்தால் உடல் ஊதா நிறம் தட்டி விடுவதை போல.. இதயம் கீறும் நிகழ்வுகளோ அல்லது வார்த்தைகளோ விஷத்திற்கு எந்த விதத்தில் குறைந்தவை..
இன்னும் சில நேரங்களில், நிகழ்ந்துவிட்ட சம்பவங்களை விட அதை பற்றிய மற்றவர்களது 'ஏன்' என்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது தான் கையாள்வதற்கு கடினமான ஒன்று. எனவே தான், பலர் முகமூடிகளை அவ்வப்போது அணிந்து புன்னகைகளையும் சிரிப்புகளையும் முகத்தில் தவள விட்டுக் கொண்டு இருக்கின்றனர். இப்போதெல்லாம் சிரிப்பை பூசிக் கொண்டு புன்னகைக்கும் பல முகங்கள் உண்மையில் அவர்களது முகங்களே அல்ல. அவர்களது நிஜ முகத்தை பெரும்பாலும் அவர்களது அறையின் உட்சுவர்களும் நிலைக் கண்ணாடியுமே காண்பதுண்டு. உறைகளுக்கு பின்னால் தான் பல முகங்களால் விசும்ப முடிகிறது..
அவ்வப்போது நானும் அத்தகைய முகமூடிகளை அணியவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது.. காரணம், முகம் மலர்ச்சியாக புகைப்படங்களில் புன்னகையுடன் நான் தெரிய வேண்டும் என்பதற்காக அல்ல.. என் சோகம் கண்டு என்னை சார்ந்த சிலரது உள்ளம் சுருங்கி அவர்களது கண்கள் ஈரமாகி விடக்கூடாது என்பதற்காக..!!
என்னால் முடிந்தவரை சிரிக்கிறேன்.. ஆனாலும் சிரிப்பின் சப்தங்கள் காற்றில் கரையும் முன்பே கண்களில் எட்டிப்பார்த்து விடுகின்றன சின்னதாய் சில துளிகள். உதடுகள் நடிப்பது கண்களுக்கு உடனடியாக தெரிந்து விடுகின்றது.. அதுவே பல நேரங்களில் அழுகையின் வீரியம் இன்னும் அதிகமாக காரணமாகி விடுகின்றது.
"ஏன் சோகமாக இருக்கிறாய்..?", என்று கேட்பவர்களுக்கு பெரும்பாலும் நான் அளிக்கும் பதில், "சோகமாக ஒன்றும் இல்லை.. சற்று சோர்வாக இருக்கிறது..!!" என்பது தான். ஆனால் அடிவேர் அறுந்து விட்ட பிறகு மரத்தால் எவ்வளவு நாட்கள் தான் தாக்கு பிடித்து நிற்க முடியும். கூடிய சீக்கிரமே வறட்சி தொற்றி பட்டு போய் சாயம் வெளுத்து விடாதா என்ன.. அப்படி தான் ஆகிவிடுகிறது பல நேரங்களில் என் நிலையும்..
சமாளித்து பதிலளிக்கிறேன் என்பது எனக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் தெரியும். அதனால் தான் மறுமொழியாக, "நன்றாக ஓய்வெடு.." என்று மட்டும் சொல்லாமல் "பார்த்துக் கொள்.." என்று நாசுக்காக சொல்லி விட்டும் பலர் செல்வதுண்டு. ஒருவிதத்தில் அப்படி அவர்கள் எளிதாக கண்டுபிடிக்கும்படி பதிலளிப்பது கூட என் மனதை அவர்களுக்கு வெளிப்படுத்த நான் எடுக்கும் முயற்சி தான். மனதின் எல்லா நிலைகளையும் (state of mind) மற்றவர்களுக்கு வெளிப்படுத்த எல்லா நேரங்களிலும் அகப்படுவதில்லை வார்த்தைகள்..
ஆழமாக உள்ளுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் சில நிகழ்வுகள் நடந்து விட்டாலோ அல்லது அதற்கு நிகரான சில சொற்கள் செவி தொட்டாலோ, பட்டென்று உடைந்து சுக்கு நூறாகி போகின்றது இதயம். உள்ளுக்குள் ஏற்பட்டுவிடும் பாதிப்பை கடினப்பட்டு மறைக்க முயன்றாலும் கூட பல நேரங்களில் முடிவதே இல்லை.. எப்படியோ அதன் சாயல் வெளியிலும் தெரிய ஆரம்பித்து விடுகிறது. நாடி நரம்புகளில் கலக்கப்பட்டுவிடும் விஷத்தால் உடல் ஊதா நிறம் தட்டி விடுவதை போல.. இதயம் கீறும் நிகழ்வுகளோ அல்லது வார்த்தைகளோ விஷத்திற்கு எந்த விதத்தில் குறைந்தவை..
இன்னும் சில நேரங்களில், நிகழ்ந்துவிட்ட சம்பவங்களை விட அதை பற்றிய மற்றவர்களது 'ஏன்' என்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது தான் கையாள்வதற்கு கடினமான ஒன்று. எனவே தான், பலர் முகமூடிகளை அவ்வப்போது அணிந்து புன்னகைகளையும் சிரிப்புகளையும் முகத்தில் தவள விட்டுக் கொண்டு இருக்கின்றனர். இப்போதெல்லாம் சிரிப்பை பூசிக் கொண்டு புன்னகைக்கும் பல முகங்கள் உண்மையில் அவர்களது முகங்களே அல்ல. அவர்களது நிஜ முகத்தை பெரும்பாலும் அவர்களது அறையின் உட்சுவர்களும் நிலைக் கண்ணாடியுமே காண்பதுண்டு. உறைகளுக்கு பின்னால் தான் பல முகங்களால் விசும்ப முடிகிறது..
அவ்வப்போது நானும் அத்தகைய முகமூடிகளை அணியவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது.. காரணம், முகம் மலர்ச்சியாக புகைப்படங்களில் புன்னகையுடன் நான் தெரிய வேண்டும் என்பதற்காக அல்ல.. என் சோகம் கண்டு என்னை சார்ந்த சிலரது உள்ளம் சுருங்கி அவர்களது கண்கள் ஈரமாகி விடக்கூடாது என்பதற்காக..!!
Sunday, April 11, 2010
இன்னும் சில சிந்தனைகள்.. (8)
பல வருடங்கள் பொறுமையுடன், பார்த்து பார்த்து கட்டியெழுப்பிய உறவுகளையும், அதனுள்ளான நெருக்கங்களையும் தகர்த்தெறிய சில நிமிடங்கள் போதும், ஆனால் அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதென்பது அவ்வளவு எளிதல்ல. அது பெரும்பாலும் முடியாத காரியம் தான். சிலர் அடங்கி போவதற்கும், எதிர்வாதம் பேசாது பணிந்து போவதற்கும் அது தான் காரணம். பணிந்து போகிறார்கள், எதிர்த்து கேள்வியேதும் கேட்பதில்லை என்பதற்காக அப்படிப்பட்டவர்களது பொறுமையின் எல்லையை சோதிக்காமல் இருப்பது நன்று.
மிக நீண்ட விவாதங்களோ, நாட்கணக்கில் தொடர்ந்திடும் சண்டைகளோ தேவையில்லை பிரிவை உண்டாக்குவதற்கு.. விஷம் தடவப்பட்ட சில வார்த்தைகள் போதும் ஒரு உறவு அறுவதற்கு. பிடி தளர்த்திய பின்பு மீண்டும் பற்றிக் கொள்ளுதலென்பது சற்று கடினமாகி விடலாம். பிடி தளர்த்தப்பட்ட விரல்கள் கூட்டத்தில் வேகமாக கரைந்து காணாமல் போய்விட வாய்ப்புகள் அதிகம்.
உறவுகளில் விழும் பிளவோ அல்லது நீண்டு விடும் பிரிவோ பெரும்பாலான நேரங்களில் அறுபடும் கயிறை போன்றது தான்.. அவ்வாறான பிளவையோ பிரிவையோ களைந்து மீண்டும் இணைந்தாலோ அல்லது இணைக்க முனைந்தாலோ அது ஒரு முடிச்சுடன் தான் முடியும். முன்பிருந்த சீரான பிணைப்பு காணாமல் போய்விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே தான் அத்தகைய அறுபடும் நிலைக்கு எடுத்து செல்லக்கூடிய பிரிவுகளோ அல்லது மனத்தாங்கல்களோ உறவுகளில் விழாதவாறு பார்த்துக் கொள்வது அவசியமாகின்றது.
என்ன தான் முயற்சிகள் எடுத்து நீண்டுவிட்ட இடைவெளிகளை ஈடுகட்ட நினைத்தாலும், அறுபட்ட கயிறை இணைத்த இடத்திலான முடிச்சி இறுதிவரை சற்று உறுத்தலாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதே சமயத்தில், இன்னொரு கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, அறுந்து கிடக்கும் கயிறை விட முடிச்சுடன் இருந்தாலும் இணைத்திருக்கும் கயிறு எவ்வளவோ பரவாயில்லையென்றும் தோன்றுகிறது. அதனால் தான் உடைந்து விட்டாலும் பல நேரங்களில் ஒட்டவைக்க முயற்சிகள் ஆங்காங்கே நிகழ்கின்றன. ஆனால் அறுபட்ட உறவுகள் மீண்டும் இறுக்கமாக இணைய இருவரும் 'இணைய வேண்டுமெ'ன்ற உந்துதலுடன் முயற்சிகள் எடுக்க வேண்டும். அப்போது தான் அங்கே மீண்டுமொரு பிணைப்பு ஏற்பட வாய்ப்புகளுண்டு.
காலடிகளை கவனமாக எடுத்து வைத்து கீழே விழாமல் பார்த்து நடக்கிறோம், கை கால்களை முறித்துக் கொள்ளக் கூடாது என்று. ஆனால் தவறுதலாக இடறி விழுந்து கையையோ காலையோ உடைத்து கொண்டுவிட்டால், உடைந்தது அப்படியே இருக்கட்டுமென்று விட்டுவிடவா முடியும்..? கட்டுகள் போட்டு சரி செய்ய முயற்சிகள் எடுப்பதில்லையா! அதை போன்றது தான் வாழ்க்கையும்.
மிக நீண்ட விவாதங்களோ, நாட்கணக்கில் தொடர்ந்திடும் சண்டைகளோ தேவையில்லை பிரிவை உண்டாக்குவதற்கு.. விஷம் தடவப்பட்ட சில வார்த்தைகள் போதும் ஒரு உறவு அறுவதற்கு. பிடி தளர்த்திய பின்பு மீண்டும் பற்றிக் கொள்ளுதலென்பது சற்று கடினமாகி விடலாம். பிடி தளர்த்தப்பட்ட விரல்கள் கூட்டத்தில் வேகமாக கரைந்து காணாமல் போய்விட வாய்ப்புகள் அதிகம்.
உறவுகளில் விழும் பிளவோ அல்லது நீண்டு விடும் பிரிவோ பெரும்பாலான நேரங்களில் அறுபடும் கயிறை போன்றது தான்.. அவ்வாறான பிளவையோ பிரிவையோ களைந்து மீண்டும் இணைந்தாலோ அல்லது இணைக்க முனைந்தாலோ அது ஒரு முடிச்சுடன் தான் முடியும். முன்பிருந்த சீரான பிணைப்பு காணாமல் போய்விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே தான் அத்தகைய அறுபடும் நிலைக்கு எடுத்து செல்லக்கூடிய பிரிவுகளோ அல்லது மனத்தாங்கல்களோ உறவுகளில் விழாதவாறு பார்த்துக் கொள்வது அவசியமாகின்றது.
என்ன தான் முயற்சிகள் எடுத்து நீண்டுவிட்ட இடைவெளிகளை ஈடுகட்ட நினைத்தாலும், அறுபட்ட கயிறை இணைத்த இடத்திலான முடிச்சி இறுதிவரை சற்று உறுத்தலாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதே சமயத்தில், இன்னொரு கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, அறுந்து கிடக்கும் கயிறை விட முடிச்சுடன் இருந்தாலும் இணைத்திருக்கும் கயிறு எவ்வளவோ பரவாயில்லையென்றும் தோன்றுகிறது. அதனால் தான் உடைந்து விட்டாலும் பல நேரங்களில் ஒட்டவைக்க முயற்சிகள் ஆங்காங்கே நிகழ்கின்றன. ஆனால் அறுபட்ட உறவுகள் மீண்டும் இறுக்கமாக இணைய இருவரும் 'இணைய வேண்டுமெ'ன்ற உந்துதலுடன் முயற்சிகள் எடுக்க வேண்டும். அப்போது தான் அங்கே மீண்டுமொரு பிணைப்பு ஏற்பட வாய்ப்புகளுண்டு.
காலடிகளை கவனமாக எடுத்து வைத்து கீழே விழாமல் பார்த்து நடக்கிறோம், கை கால்களை முறித்துக் கொள்ளக் கூடாது என்று. ஆனால் தவறுதலாக இடறி விழுந்து கையையோ காலையோ உடைத்து கொண்டுவிட்டால், உடைந்தது அப்படியே இருக்கட்டுமென்று விட்டுவிடவா முடியும்..? கட்டுகள் போட்டு சரி செய்ய முயற்சிகள் எடுப்பதில்லையா! அதை போன்றது தான் வாழ்க்கையும்.
Thursday, April 8, 2010
எழுத்துக்களை தாண்டியோடும் எண்ணங்கள்..
நினைவுகள் சார்ந்த சிந்தனைகளின் வேகத்திற்கு பேனா முனையோ அல்லது அதை வழி நடத்தும் விரல் நுனியோ எப்போதும் ஈடு கொடுக்க முடிவதே இல்லை. அதனால் தான் பல நேரங்களில் மனதின் ஈரமான பக்கங்களில் வேகமாக ஓடிச் செல்லும் சிந்தனைகளை ஏட்டில் வடிக்க முடிவதில்லை.. ஒருவேளை மனதின் எண்ண ஓட்டங்கள் உடலின் அசைவுகளை சிறை பிடித்து விடுவதனாலேயோ என்னவோ, கண்கள் மேற்கூரையை மேய உடலும் உணர்வுகளும் சட்டென்று ஸ்தம்பித்து விடுகின்றன. எப்படியோ முயன்று சிந்தனைகளை ஏட்டில் வடித்து விடலாமென்றால், வார்த்தைகள் கனக்கின்றன என்று ஏட்டில் முன்னோக்கி நகர மறுக்கின்றது எழுதுகோல்.
கண்களுக்கு விடை கொடுத்த நிகழ்வுகளோ அல்லது கைகளுக்கு விடை கொடுத்த மனிதர்களோ விடை கொடுப்பதில்லை மனதிற்கு. நிஜம் சார்ந்த நினைவுகள் இனிப்பதை விட கசப்பது தான் அதிகம். சிந்தை அளவில் அவை நிலைத்து நிற்பது மட்டுமல்லாது, பல நேரங்களில் நிலைகொள்ள முடியா நிலையையும் ஏற்படுத்தி விடுகின்றன. அது ஏனோ தெரியவில்லை.. விடைபெறுதல்கள் எப்போதும் உடலளவில் மட்டுமே நிகழ்கின்றன!!
எழுத்துக்களில் வடிப்பதன் மூலமோ அல்லது வாய் திறந்து கதறுவதன் மூலமோ அவற்றிடமிருந்து விடை பெறலாமென்றால், அதற்கும் வழியில்லை. வார்த்தைகள் தடுமாறும் கணங்களில் உள்ளுக்குள்ளேயே சிக்கி உறைந்து கொள்கின்றன அவை. பின்பு வேறொரு உருவம் கொண்டு மீண்டும் அரிக்க ஆரம்பித்து விடுகின்றன மனதை..
ஞாபக செல்களில் வாடகைக்கு குடியேறி, பின்பு நிரந்தரமாக தங்கிக்கொள்ளும் சிந்தனைகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. மனதின் செல்களை ஆக்கிரமித்துக் கொள்ளும் எண்ணங்களை வேண்டாமென்னும் போது அழிக்கும் சக்தி தன்னிடம் இல்லையேவென்று ஏங்கும் மனிதர்கள் இன்னமும் ஆங்காங்கே உலவிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வாறான மனிதர்களின் முகத்திரையை விலக்கிப் பார்க்கும் போது அவ்வப்போது தட்டுப்படுவது என் முகமும் கூடத் தான்.
கண்களுக்கு விடை கொடுத்த நிகழ்வுகளோ அல்லது கைகளுக்கு விடை கொடுத்த மனிதர்களோ விடை கொடுப்பதில்லை மனதிற்கு. நிஜம் சார்ந்த நினைவுகள் இனிப்பதை விட கசப்பது தான் அதிகம். சிந்தை அளவில் அவை நிலைத்து நிற்பது மட்டுமல்லாது, பல நேரங்களில் நிலைகொள்ள முடியா நிலையையும் ஏற்படுத்தி விடுகின்றன. அது ஏனோ தெரியவில்லை.. விடைபெறுதல்கள் எப்போதும் உடலளவில் மட்டுமே நிகழ்கின்றன!!
எழுத்துக்களில் வடிப்பதன் மூலமோ அல்லது வாய் திறந்து கதறுவதன் மூலமோ அவற்றிடமிருந்து விடை பெறலாமென்றால், அதற்கும் வழியில்லை. வார்த்தைகள் தடுமாறும் கணங்களில் உள்ளுக்குள்ளேயே சிக்கி உறைந்து கொள்கின்றன அவை. பின்பு வேறொரு உருவம் கொண்டு மீண்டும் அரிக்க ஆரம்பித்து விடுகின்றன மனதை..
ஞாபக செல்களில் வாடகைக்கு குடியேறி, பின்பு நிரந்தரமாக தங்கிக்கொள்ளும் சிந்தனைகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. மனதின் செல்களை ஆக்கிரமித்துக் கொள்ளும் எண்ணங்களை வேண்டாமென்னும் போது அழிக்கும் சக்தி தன்னிடம் இல்லையேவென்று ஏங்கும் மனிதர்கள் இன்னமும் ஆங்காங்கே உலவிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வாறான மனிதர்களின் முகத்திரையை விலக்கிப் பார்க்கும் போது அவ்வப்போது தட்டுப்படுவது என் முகமும் கூடத் தான்.
Subscribe to:
Comments (Atom)