நம் மேல் உண்மையான பாசத்துடன் இல்லையென்று தெரிந்தும் நாம் ஏன் இன்னும் அவர்களிடம் அன்பு செலுத்துகிறோம்..? நம்மிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்று தெரிந்தும் நாம் ஏன் இன்னும் அவர்களிடம் மென்மையாக இருக்கிறோம்..? தெரிந்தே நம்மை வெறுப்பேத்தி கோபப்படுத்துபவர்களிடம் நாம் ஏன் இன்னும் பொறுமையாக இருக்கிறோம்..? நமது இளகிய மனதை ஆதாயமாக பயன்படுத்துபவர்களிடம் நாம் ஏன் இன்னும் கனிவுடன் இருக்கிறோம்..? நமது பலவீனம் எதிரிகளின் பலமாக இருக்கின்றது என்பதை தெரிந்தும் அப்பலவீனத்தை களைய நாம் ஏன் முயற்சி எடுப்பதில்லை..?
நாம் எளிதாக மன்னித்து விடுவோம் என்பதற்காக தெரிந்தே தவறு செய்ய துணிபவர்களை இன்னும் எதற்காக மன்னித்து கொண்டிருக்கிறோம்..? நமது இதயங்களை சுக்குநூறாக்க துணிபவர்களிடம் நாம் ஏன் இன்னும் பாசம் செலுத்துகிறோம்..? நமது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் தமது சுயநலம் பற்றியே யோசிக்கும் மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவமளித்து நமது மனதை நாமே ஏன் வேதனைப்படுத்திக் கொள்கிறோம்..?
ஏன் நாம் உணர்வளவில் இவ்வளவு பலவீனமாக இருக்கிறோம்? நமது நல்லுணர்வின் தன்மையை ஆதாயமாக பயன்படுத்தி நம்மை பலர் தொடர்ந்து வேதனைப்படுத்தினாலும் நாம் ஏன் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை..? எல்லோரும் மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படாமல் கண்ணும் கருத்துமாக அவரவர் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, நாம் மட்டும் ஏன் மற்றவர்களின் மேல் கருணை கொண்டு நம்முடையவற்றை தியாகம் செய்து நமது வாழ்க்கையை கேள்விக்குரியதாக்கி கொள்கிறோம்..?
நமது வாழ்க்கைக்கு, நம்முடைய உணர்வுகளுக்கு நாம் எப்போது முன்னுரிமை அளிக்க போகிறோம்..? நமக்கென்று நாம் எப்போது வாழப் போகிறோம்..?
ethina kalviya ora timula katta, naan yenna badhil solluradhu.
ReplyDeleteகண்ணா, அடக்கியே வச்சிருந்ததால ஒரு கேள்வி வெளிய வந்ததும் 'இது தான் சமயம்'னு எல்லா கேள்விகளும் ஒரே நேரத்திலே வந்திடுச்சுன்னு நினைக்குறேன் :-)
ReplyDelete