Monday, May 24, 2010

இரங்கல்

மங்களூர் விமான விபத்து பற்றிக் கேள்விப்பட்டவுடனேயே நெஞ்சை உலுக்கி விட்டது. விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் கதையை கேட்கும் போதும் நெஞ்சம் பதறுகிறது. துபாயிலிருந்து வந்த இந்த விமானத்தில் எத்தனை பேர் தம் குடும்பத்தை விட்டு சம்பாதிப்பதற்காக அரபு நாடுகளுக்கு சென்று பல வருடங்கள் அங்கேயே இருந்து விட்டு தம் குடும்பத்தினரை பார்க்க வந்தவர்களோ.. விமானத்தில் பயணம் செய்தவர்களை வரவேற்க வந்தவர்கள் விமான நிலையத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தரை இறங்கிவிட்டதென்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் போதே கட்டுப்பாடு இழந்து விமானம் தறிகெட்டு போக, தன் கண் முன்னாலேயே தனக்கு உயிருக்கு உயிரானவர்கள் இறந்ததை பார்த்தவர்களது இதயம் எப்படி துடித்திருக்கும்..? நினைக்கும் போதே கண்கள் ஈரமாகின்றது.

தம் உயிருக்கு உயிரானவர்களை இழந்தவர்களுக்கு அந்த இழப்பை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை அந்த இறைவன் தான் கொடுக்க வேண்டும். வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. :'-(

No comments:

Post a Comment