மொழியிலுள்ள அத்தனை வார்த்தைகளும் தீர்ந்த பின்பு நமக்குள் நிலவும் அந்த மௌனப் பொழுதுகளின் போது தான் பேசுகின்ற மௌனத்தை நான் முழுதாய் உணர ஆரம்பித்தேன்.. இரவில் பல மணி நேரம் கதைத்தப் பின்னும் அலைபேசியை வைக்க மனமில்லாது, "அப்புறம்" என்று நீ கேட்க, அடுத்தென்ன பேசலாமென்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அலைபேசி வழியே கசியும் உன் மூச்சுக் காற்றின் மெல்லிய சப்தம் என் சிந்தையை ஆழ்நிலை போதையொன்றில் ஆழ்த்துகின்றது..
நாமிருவரும் பேசிக் கொண்ட தருணங்களை விட நம்மிருவருக்குமிடையில் நிலவுமந்த மௌனமான பொழுதுகளும், செவி தட்டும் இதழுதிர்க்காத வார்த்தைகளும் , நாசியின் இயக்கம் நிமித்தம் வெளிவரும் சுவாசத்தின் சன்னமான சப்தங்களும், நெஞ்சுக்குள் படருமந்த அருகாமையின் உணர்வுகளும் தான் நம்முறவிற்கு உயிரூட்டுவதான எண்ணம் எப்போதும் தோன்றுவதுண்டு..
பொழுது புலரப் போவதற்கான அறிகுறிகள் தட்ட, 'அலைபேசியை நீ வை..' என்று நான் சொல்ல, 'மாட்டேன், நீ வை..' என்று நீ சொல்ல, 'நான் வைக்க மாட்டேனெ'ன்று இருவரும் மாறி மாறி அடம் பிடிக்க நீளும் அப்பொழுதுகளில் சொட்டும் நம் காதலின் துளிகளில் வழியும் போதை.. பருக பருக இன்பம்..
இருவரும் ஒன்றாக வைக்கலாமென்று எண்களை எண்ணி முடித்தப் பின்பும் கூட நீ வைப்பாயென்று நானும் நான் வைப்பேனென்று நீயும் மூச்சை இழுத்துப் பிடித்தபடி காத்திருக்க, மீண்டும் பொழுதுகளை ஆட்கொள்கின்றது பேசுகின்ற அதே மௌனம்.. அதை தொடர்ந்த, "எனக்கு தெரியும்டா நீ வைக்க மாட்டனு" என்பதான உன் சிரிப்பொலிகள்.. எப்படியோ அலைபேசியை வைத்தப் பின்னும் கூட இன்னும் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன உன்னிதழ்கள் உதிர்த்த வார்த்தைகளும் நீ பேசிய மௌனங்களும்..
மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!
Wednesday, October 27, 2010
Monday, October 25, 2010
சக மனித உயிர்க்கு குரல் கொடுப்போம்..
"நமக்கு எதுக்கு வம்பு..?" என்று போகும் குணம் நம்மில் பலருக்கு உண்டு.. நாம் பயணிக்கும் பாதைகளிலும், பொது இடங்களிலும், அக்கம் பக்கமென்று நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளில் மற்றவருக்கு நிகழும் அநீதிகளையும் கொடுமைகளையும் கண்டும் காணாமலும் போக தான் பெரும்பாலும் நாம் முயல்கிறோம்.
அதே கொடுமைகளும் அநீதிகளும் நமக்கு இழைக்கப்படும் போது நமக்கு துணையாக தோள் கொடுத்து அவற்றை எதிர்த்து போராட யாரும் முன்வருகிறார்களா என்று சுற்றிலும் தேடும் நம் விழிகள் அவை மற்றவர்களுக்கு இழைக்கப்படும் போது வேறுதிசை பார்ப்பதாக பாவனை செய்து அவ்விடம் விட்டு நகரவே முயல்கின்றன..
உடலளவிலும் மனதளவிலும் பலவீனமானவர்களுக்கு கொடுமைகள் நடக்கும் போதும், அவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படும் போதும் நாமாகவே முன்வந்து அவர்களுக்கு ஆதரவு தருவதும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும் நமது கடமை என்பதை நாம் உணர வேண்டும். அதை உதவியாக மட்டுமே நினைத்து, "உதவி செய்ய எனக்கு இப்ப மூடு இல்லை" என்பதை போன்று அங்கிருந்து நகர்வது சரியான செயலன்று. காரணம் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அதே சூழ்நிலையில் இருப்பார்களேயானால் நாம் அவர்களுக்காக குரல் கொடுக்காமல் அங்கிருந்து நகர்வோமா..?
"அவர்கள் என்ன எனக்கு நெருக்கமானவர்களா..?" என்று கேள்வி எழுப்புவீர்களேயானால் உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒருநாள் நீங்கள் இல்லாத வேளையில் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இதே கொடுமைகள் நிகழும் போது அங்கு சுற்றியிருக்கும் மனிதர்களும் அதே போன்று நினைத்து அவர்களுக்கு கை கொடுக்க முன்வராமல் போகலாம்..
பிறருக்கு நடக்கும் அநீதிகளையும் கொடுமைகளையும் கண்டும் காணாமலும் போகாமல் எதற்காக நாம் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதை விளக்க கூடிய சிறுகதையொன்றை சில நாட்களுக்கு முன்பு படித்தேன்.. ஆழமான கருத்து பொதிந்த அக்கதை இதோ..
தனது நாற்பதுகளில் இருக்கும் ஒருவன் இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறான். மங்கிய வெளிச்சத்துடன் வெறிச்சோடிய சாலையொன்றை அவன் கடக்கும் வேளையில் சாலையை ஒட்டிய மரங்கள் அடர்ந்த பகுதியிலிருந்து ஒரு பெண் அலறும் சப்தம் மெலிதாக கேட்கிறது..
சில வினாடிகள் யோசனைக்கு பின், வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு அலறல் வரும் திசை நோக்கி செல்கிறான்.. அங்கே ஒரு பெரிய மரத்திற்கு பின்புறம் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுக் கொண்டிருக்கிறான். அப்பெண்ணை காப்பாற்ற முயலும் வேளையில் அவன் கையில் ஆயுதம் ஏதாவது இருந்து தன்னை தாக்கிவிட்டால் என்ன செய்வதென்று சில வினாடிகள் அவன் யோசிக்கிறான். தன்னை பலாத்காரம் செய்பவனது பிடியிலிருந்து வெளிவர முடியாமல் திமிறிக் கொண்டிருக்கும் அப்பெண்ணின் கை கால்கள் மரத்தை தாண்டி வெளியில் தெரிய, என்ன ஆனாலும் பரவாயில்லையென்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "ஹே.. அவள விடுறியா இல்லையா..?", என்று சப்தமெழுப்பியவாறே கீழே கட்டை எதுவும் கிடக்கிறாதாவென்று பார்த்துக் கொண்டே தட்டுப்படும் சில கற்களை பொறுக்கிக் கொண்டு வேகமாக அம்மரத்தை நோக்கி போகிறான்.
அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுக் கொண்டிருப்பவன் சப்தமிட்டபடியே தன்னை நோக்கி வரும் இவனைப் பார்த்ததும் அவளை விட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக ஓடி விடுகிறான். மரத்தை நெருங்கும் அவன், "பயப்படாதம்மா.. அவன் போய்ட்டான்.. நீ தைரியமா வெளிய வா.." என்று சொல்ல, "அப்பா நீங்களாப்பா.." என்றபடியே மரத்திற்கு பின்புறமிருந்து வெளிப்படுகிறாள் அப்பெண். அப்போது தான் அவனுக்கு தெரிகிறது அது அவன் மகளென்று.. அழுதபடியே வேகமாக ஓடிவந்து தன் தந்தையை கட்டிப் பிடிக்கிறாள் அப்பெண்..
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. எனக்கென்னவென்று அப்பெண்ணை காப்பாற்ற முயலாமல் அவன் அங்கிருந்து போய் இருந்தால் என்னவாகியிருக்கும் என்று.. கொடுமைக்கும் அநீதிக்கும் உள்ளாகியிருப்பவர் யாரோ என்பதான அலட்சியப்போக்கு கொள்வதை இனியாவது தவிர்ப்போமே.. உடலளவிலும் மனதளவிலும் பலவீனமான சக மனித உயிர்க்கு இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து அவர்களை மீட்பதும் அவர்களுக்கு துணையாக குரல் கொடுப்பதும் மனிதனாக பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் கொள்வோம்..
அதே கொடுமைகளும் அநீதிகளும் நமக்கு இழைக்கப்படும் போது நமக்கு துணையாக தோள் கொடுத்து அவற்றை எதிர்த்து போராட யாரும் முன்வருகிறார்களா என்று சுற்றிலும் தேடும் நம் விழிகள் அவை மற்றவர்களுக்கு இழைக்கப்படும் போது வேறுதிசை பார்ப்பதாக பாவனை செய்து அவ்விடம் விட்டு நகரவே முயல்கின்றன..
உடலளவிலும் மனதளவிலும் பலவீனமானவர்களுக்கு கொடுமைகள் நடக்கும் போதும், அவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படும் போதும் நாமாகவே முன்வந்து அவர்களுக்கு ஆதரவு தருவதும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும் நமது கடமை என்பதை நாம் உணர வேண்டும். அதை உதவியாக மட்டுமே நினைத்து, "உதவி செய்ய எனக்கு இப்ப மூடு இல்லை" என்பதை போன்று அங்கிருந்து நகர்வது சரியான செயலன்று. காரணம் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அதே சூழ்நிலையில் இருப்பார்களேயானால் நாம் அவர்களுக்காக குரல் கொடுக்காமல் அங்கிருந்து நகர்வோமா..?
"அவர்கள் என்ன எனக்கு நெருக்கமானவர்களா..?" என்று கேள்வி எழுப்புவீர்களேயானால் உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒருநாள் நீங்கள் இல்லாத வேளையில் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இதே கொடுமைகள் நிகழும் போது அங்கு சுற்றியிருக்கும் மனிதர்களும் அதே போன்று நினைத்து அவர்களுக்கு கை கொடுக்க முன்வராமல் போகலாம்..
பிறருக்கு நடக்கும் அநீதிகளையும் கொடுமைகளையும் கண்டும் காணாமலும் போகாமல் எதற்காக நாம் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதை விளக்க கூடிய சிறுகதையொன்றை சில நாட்களுக்கு முன்பு படித்தேன்.. ஆழமான கருத்து பொதிந்த அக்கதை இதோ..
தனது நாற்பதுகளில் இருக்கும் ஒருவன் இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறான். மங்கிய வெளிச்சத்துடன் வெறிச்சோடிய சாலையொன்றை அவன் கடக்கும் வேளையில் சாலையை ஒட்டிய மரங்கள் அடர்ந்த பகுதியிலிருந்து ஒரு பெண் அலறும் சப்தம் மெலிதாக கேட்கிறது..
சில வினாடிகள் யோசனைக்கு பின், வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு அலறல் வரும் திசை நோக்கி செல்கிறான்.. அங்கே ஒரு பெரிய மரத்திற்கு பின்புறம் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுக் கொண்டிருக்கிறான். அப்பெண்ணை காப்பாற்ற முயலும் வேளையில் அவன் கையில் ஆயுதம் ஏதாவது இருந்து தன்னை தாக்கிவிட்டால் என்ன செய்வதென்று சில வினாடிகள் அவன் யோசிக்கிறான். தன்னை பலாத்காரம் செய்பவனது பிடியிலிருந்து வெளிவர முடியாமல் திமிறிக் கொண்டிருக்கும் அப்பெண்ணின் கை கால்கள் மரத்தை தாண்டி வெளியில் தெரிய, என்ன ஆனாலும் பரவாயில்லையென்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "ஹே.. அவள விடுறியா இல்லையா..?", என்று சப்தமெழுப்பியவாறே கீழே கட்டை எதுவும் கிடக்கிறாதாவென்று பார்த்துக் கொண்டே தட்டுப்படும் சில கற்களை பொறுக்கிக் கொண்டு வேகமாக அம்மரத்தை நோக்கி போகிறான்.
அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுக் கொண்டிருப்பவன் சப்தமிட்டபடியே தன்னை நோக்கி வரும் இவனைப் பார்த்ததும் அவளை விட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக ஓடி விடுகிறான். மரத்தை நெருங்கும் அவன், "பயப்படாதம்மா.. அவன் போய்ட்டான்.. நீ தைரியமா வெளிய வா.." என்று சொல்ல, "அப்பா நீங்களாப்பா.." என்றபடியே மரத்திற்கு பின்புறமிருந்து வெளிப்படுகிறாள் அப்பெண். அப்போது தான் அவனுக்கு தெரிகிறது அது அவன் மகளென்று.. அழுதபடியே வேகமாக ஓடிவந்து தன் தந்தையை கட்டிப் பிடிக்கிறாள் அப்பெண்..
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. எனக்கென்னவென்று அப்பெண்ணை காப்பாற்ற முயலாமல் அவன் அங்கிருந்து போய் இருந்தால் என்னவாகியிருக்கும் என்று.. கொடுமைக்கும் அநீதிக்கும் உள்ளாகியிருப்பவர் யாரோ என்பதான அலட்சியப்போக்கு கொள்வதை இனியாவது தவிர்ப்போமே.. உடலளவிலும் மனதளவிலும் பலவீனமான சக மனித உயிர்க்கு இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து அவர்களை மீட்பதும் அவர்களுக்கு துணையாக குரல் கொடுப்பதும் மனிதனாக பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் கொள்வோம்..
Wednesday, October 20, 2010
சூன்யம் அப்பிய இரவொன்றில்..
பசியின் காரணமாக வான் கடித்துண்ட மிச்சம் கொண்டு இருள் துளைக்க முயன்று தோற்றுப் போய் துவண்ட முகத்துடன் ஒடுங்கிய இலையாய் மேகங்களுக்குள் மறைந்தவாறே மெலிதாய் வெளிச்சம் கசிகிறாள் வானத்து நிலா.. நீர்த்துகள்களை தாங்கிய குளிர்ந்த காற்று தேகத்தில் மோதினாலும் கூட உள்ளுக்குள் இன்னும் வெக்கையின் தாக்கம்..
அமைதி ஆட்கொண்டுவிட்ட நடுநிசியில் எங்கோவொரு மூலையில் நிசப்தத்தை கொலை செய்தபடியே ஊளையிடும் நாய்க் கூட்டம் உள்ளுக்குள் இருக்கும் உயிரை நடுங்க செய்யாமலில்லை.. ஆனாலும் ஏதோவொரு தைரியத்தில் மொட்டை மாடியின் திறந்தவெளியில் தன்னந்தனியாய் நின்றபடியே ஆளரவமற்ற வீதியை வெறிக்கிறேன்..
சருகுகள் எங்கோ படபடக்கும் ஓசையும் சுவர்க்கோழிகளின் சன்னமான இரைச்சலும் இருளின் அமைதியை கிழித்துக் கொண்டிருக்க சூன்யம் அப்பிய அவ்விரவின் கருமை அடிமனதினது ஆழத்தில் ஒருவித பயத்தை மெலிதாக உண்டாக்குகிறது..
உள்ளுக்குள் சென்றுவிடலாமென்று திரும்ப எத்தனிக்கும் வேளையில் அறையினுள் அவள் விட்டுச் சென்ற சுவடுகள் யாவும் அவளில்லையென்பதை உமிழ்ந்தபடியே அடிமனதின் ஆழங்களை காயப்படுத்தும் அந்த ஞாபகங்கள் மீண்டும் கண்முன் அகோர தாண்டவமாடுகின்றன.. துளியும் தாங்க முடியா வலி தரும் அவ்வுணர்வுகள் எதிர்த்து தாக்க, அறைக்கு திரும்ப பயந்து இருளை மீண்டும் வெறிக்கிறேன்.. அதே சருகுகள் படபடக்கும் ஓசை.. சுவர்க்கோழிகளின் இரைச்சல்.. சூன்யத்தின் சுவடுகள்.. ஆனாலும் அவை சில கணங்களுக்கு முன்பு நெஞ்சுக்குள் ஏற்படுத்திய பயம் இப்போது சற்று குறைந்திருப்பதாக தோன்றுகிறது..
அறையின் சுவடுகள் கண்முன் நிறுத்தும் கடந்தகால நினைவுகளும் இரவை கவ்விக் கொண்டிருக்கும் சூன்யம் ஏற்படுத்தும் பீதியும் மாறிமாறி உள்ளத்தை நடுநடுங்க செய்ய, கிழக்கு வெறிக்கிறேன்.. வானமோ விடிந்தபாடில்லை..!!
அமைதி ஆட்கொண்டுவிட்ட நடுநிசியில் எங்கோவொரு மூலையில் நிசப்தத்தை கொலை செய்தபடியே ஊளையிடும் நாய்க் கூட்டம் உள்ளுக்குள் இருக்கும் உயிரை நடுங்க செய்யாமலில்லை.. ஆனாலும் ஏதோவொரு தைரியத்தில் மொட்டை மாடியின் திறந்தவெளியில் தன்னந்தனியாய் நின்றபடியே ஆளரவமற்ற வீதியை வெறிக்கிறேன்..
சருகுகள் எங்கோ படபடக்கும் ஓசையும் சுவர்க்கோழிகளின் சன்னமான இரைச்சலும் இருளின் அமைதியை கிழித்துக் கொண்டிருக்க சூன்யம் அப்பிய அவ்விரவின் கருமை அடிமனதினது ஆழத்தில் ஒருவித பயத்தை மெலிதாக உண்டாக்குகிறது..
உள்ளுக்குள் சென்றுவிடலாமென்று திரும்ப எத்தனிக்கும் வேளையில் அறையினுள் அவள் விட்டுச் சென்ற சுவடுகள் யாவும் அவளில்லையென்பதை உமிழ்ந்தபடியே அடிமனதின் ஆழங்களை காயப்படுத்தும் அந்த ஞாபகங்கள் மீண்டும் கண்முன் அகோர தாண்டவமாடுகின்றன.. துளியும் தாங்க முடியா வலி தரும் அவ்வுணர்வுகள் எதிர்த்து தாக்க, அறைக்கு திரும்ப பயந்து இருளை மீண்டும் வெறிக்கிறேன்.. அதே சருகுகள் படபடக்கும் ஓசை.. சுவர்க்கோழிகளின் இரைச்சல்.. சூன்யத்தின் சுவடுகள்.. ஆனாலும் அவை சில கணங்களுக்கு முன்பு நெஞ்சுக்குள் ஏற்படுத்திய பயம் இப்போது சற்று குறைந்திருப்பதாக தோன்றுகிறது..
அறையின் சுவடுகள் கண்முன் நிறுத்தும் கடந்தகால நினைவுகளும் இரவை கவ்விக் கொண்டிருக்கும் சூன்யம் ஏற்படுத்தும் பீதியும் மாறிமாறி உள்ளத்தை நடுநடுங்க செய்ய, கிழக்கு வெறிக்கிறேன்.. வானமோ விடிந்தபாடில்லை..!!
Tuesday, October 19, 2010
மௌனமே கவியாக..!!
ஒவ்வொரு இரவின் மடியிலும் இமை மூடிய பொழுதுகளில் விரிந்திடும் கனவில் நாழிகை பிசகாது வலம் வருபவளே.. விடியலின் விளிம்பில் விழித்திடும் என் சிந்தையின் முதல் தேடலே.. என் நாசியின் தடத்தினில் தங்கிவிட்ட வாசமே.. வெறும் கூட்டிற்குள் செயற்கையாய் துடித்திருந்த இதயத்திற்குள் உயிரென்னும் காற்றை ஊதி சுவாசமாய் நிறைந்திட்டவளே.. என்னுயிரே..! எனதன்பே..!!
நுனிவிரல் சருமம் முதல் அடியணு ஆழம் வரை கரைந்திருக்கும் ஜீவனே.. உயிரற்ற சிந்தனைகள் கூட உயிர்பெற்றெழுவது உன்னை பற்றிய நினைவுகளின் போது மட்டுமே.. நீயில்லாத பொழுதுகளில் மனதிலிருக்கும் உன் பிம்பங்கள் உயிர் கொள்வதால் தனித்திருக்கும் வேளைகளில் கூட தனிமையொன்றும் தாக்குவதில்லை இப்போதெல்லாம்..
கணம் விடாது இன்பம் சேர்க்கும் என் வசந்தமே.. என் நினைவுகளின் பிம்பமாகவும் நிகழ்வுகளின் அங்கமாகவும் ஆனவளே.. இதழ் உதிர்க்கும் வார்த்தைகளில் உணர்ச்சிகள் ஒட்டிக் கொள்ளும் உயிர் சொல்லே.. என் அணுவின் நடுநிலையானவளே..! எனதான்மாவின் உயிர்நிலையே..!!
உடலின் பாதியாகி என்னுயிரின் மீதியாக எனக்கே எனக்காய் பிறந்த எனதுயிரே.. கருவறை தொட்டிலின் கதவு திறக்க அந்நியம் அப்பிய காற்று நுகர்ந்து, சன்னமாய் சற்றே அழுது, நிலம்தனில் நீ பாதம் பதித்த தருணங்களின் இப்பிம்பங்களை உன்னுடன் பகிர நான் பெற்ற வரம் எண்ணி உள்ளம் கொள்ளும் உவகையின் உணர்வுகளை வெளிப்படுத்த சரியான வார்த்தைகளை நான் தேடாமலில்லை.. மொழியின் ஆழத்தில் புதைந்திருக்கும் வார்த்தைகள் கூட என் அகத்தின் உணர்வுகளை துளிக் கூட வெளிப்படுத்தாத உணர்வே தோன்றுவதால், குறைபட்ட வார்த்தைகளை கையிலெடுக்க சித்தமின்றி மௌனத்தின் மொழி பேசி இதழ் விரித்து இன்பம் கசிகிறேன்..
ஏதேதோ சொல்ல முயன்று இதழ் துடித்து தோற்றுப் போகிறேன் உள்ளுக்குள்.. உன் விழி பேசும் மௌனத்தின் முன்பு வார்த்தைகளை உதிர்க்க நினைக்கும் என்னிதழ்கள் எப்போதுமே வலிமையிழந்து விடுகின்றன..
என் அமைதியின் சுவடுகளையும் அவை பேசும் மொழிகளையும் நீயறிவாய். அதனால் தான் உனக்கும் எனக்கும் மட்டுமே புரிவதான மௌனத்தின் மொழி பேசி மகிழ்ச்சி ததும்ப புன்னகையுடன் உன்னருகில் நெருங்கி அழகு கசியும் உன் பஞ்சு முகத்தை கையிலேந்தியபடியே மூச்சுக் காற்றின் வெப்பம் கலக்க இதழ்களோடு அன்பு பரிமாறி உன் கருவிழி நோக்குகிறேன்..
"பிறந்தநாள் வாழ்த்துக்கள்"..!!
நுனிவிரல் சருமம் முதல் அடியணு ஆழம் வரை கரைந்திருக்கும் ஜீவனே.. உயிரற்ற சிந்தனைகள் கூட உயிர்பெற்றெழுவது உன்னை பற்றிய நினைவுகளின் போது மட்டுமே.. நீயில்லாத பொழுதுகளில் மனதிலிருக்கும் உன் பிம்பங்கள் உயிர் கொள்வதால் தனித்திருக்கும் வேளைகளில் கூட தனிமையொன்றும் தாக்குவதில்லை இப்போதெல்லாம்..
கணம் விடாது இன்பம் சேர்க்கும் என் வசந்தமே.. என் நினைவுகளின் பிம்பமாகவும் நிகழ்வுகளின் அங்கமாகவும் ஆனவளே.. இதழ் உதிர்க்கும் வார்த்தைகளில் உணர்ச்சிகள் ஒட்டிக் கொள்ளும் உயிர் சொல்லே.. என் அணுவின் நடுநிலையானவளே..! எனதான்மாவின் உயிர்நிலையே..!!
உடலின் பாதியாகி என்னுயிரின் மீதியாக எனக்கே எனக்காய் பிறந்த எனதுயிரே.. கருவறை தொட்டிலின் கதவு திறக்க அந்நியம் அப்பிய காற்று நுகர்ந்து, சன்னமாய் சற்றே அழுது, நிலம்தனில் நீ பாதம் பதித்த தருணங்களின் இப்பிம்பங்களை உன்னுடன் பகிர நான் பெற்ற வரம் எண்ணி உள்ளம் கொள்ளும் உவகையின் உணர்வுகளை வெளிப்படுத்த சரியான வார்த்தைகளை நான் தேடாமலில்லை.. மொழியின் ஆழத்தில் புதைந்திருக்கும் வார்த்தைகள் கூட என் அகத்தின் உணர்வுகளை துளிக் கூட வெளிப்படுத்தாத உணர்வே தோன்றுவதால், குறைபட்ட வார்த்தைகளை கையிலெடுக்க சித்தமின்றி மௌனத்தின் மொழி பேசி இதழ் விரித்து இன்பம் கசிகிறேன்..
ஏதேதோ சொல்ல முயன்று இதழ் துடித்து தோற்றுப் போகிறேன் உள்ளுக்குள்.. உன் விழி பேசும் மௌனத்தின் முன்பு வார்த்தைகளை உதிர்க்க நினைக்கும் என்னிதழ்கள் எப்போதுமே வலிமையிழந்து விடுகின்றன..
என் அமைதியின் சுவடுகளையும் அவை பேசும் மொழிகளையும் நீயறிவாய். அதனால் தான் உனக்கும் எனக்கும் மட்டுமே புரிவதான மௌனத்தின் மொழி பேசி மகிழ்ச்சி ததும்ப புன்னகையுடன் உன்னருகில் நெருங்கி அழகு கசியும் உன் பஞ்சு முகத்தை கையிலேந்தியபடியே மூச்சுக் காற்றின் வெப்பம் கலக்க இதழ்களோடு அன்பு பரிமாறி உன் கருவிழி நோக்குகிறேன்..
"பிறந்தநாள் வாழ்த்துக்கள்"..!!
Sunday, October 17, 2010
கடற்கரைப் பொழுதுகள்..
எவ்வளவு ஓடியாடினாலும் கூட அசந்திடாத தன்மை கண்டு கொஞ்சம் பொறாமை பற்றிக் கொள்கிறது அலைகளைப் பார்க்கும் போது.. நீரில் நனைந்தவாறு இரண்டு அடிகள் எடுத்து வைத்த பின்பு முற்கால நிகழ்வுகள் சில கண்முன் வந்து செல்ல, தேகம் தாண்டி உட்புற செல்களையும் உறைய வைக்கும் கடல் நீரின் குளுமை பிடித்திருந்தாலும் கூட ஏனோ தொடர்ந்து அலைகளுடன் சல்லாபிக்க தோன்றவில்லை.. அலையை ஒட்டியவாறே மணற்பரப்பில் கால்கள் பரப்பி கையூன்றி சாய்ந்தமர்ந்து உப்பு கலந்த காற்றை எதிர்கொண்டு கடல் வெறிக்கிறேன்..
மேடும் பள்ளமுமான பட்டு போன்ற கடலினது மேனியை ரசித்தாலும் கூட விழிகளினது ஓரம் கண்டுக் கொள்ள தவறவில்லை அயர்ச்சிக் கொள்ளாது கரையுடன் காதல் கொள்ளும் அலையினது நுனிகளை விரட்டியபடி குதித்தாடிக் கொண்டிருக்கும் குட்டிச் சிறார்களை.. 'கடந்திட்டதே குழந்தை பருவம்' என்பதான அங்கலாய்ப்பு உள்ளுக்குள் படர்கிறது..
விழிகளை திசை திருப்புகிறேன்.. சற்று தள்ளி விற்றவாறே கடந்து செல்லும் காத்தாடியை கைகாட்டி வேண்டுமென்பதாக சிறுவனொருவன் அடம் பிடித்துக் கொண்டிருக்க, வாங்கி தர மறுக்கும் பெற்றோரோ அவனது கவனத்தை திசை திருப்ப முயன்றுக் கொண்டிருக்கின்றனர்.. காண்பனவற்றை வேண்டுமென்று கைநீட்டி ஏக்கங்களை வெளிப்படுத்திய பிஞ்சு பருவம் சில நொடிகள் கண்முன் விரிகின்றன..
இன்று பை நிறைய காசிருந்தும் கூட சிறுவயதில் ஆசைக் கொண்டு விழிநீர்க் கோர்த்தவைகளை வாங்கி அனுபவிக்க வேண்டுமென்பதான எண்ணமோ அப்போதிருந்த உற்சாகமோ பெரிதாய் எழவில்லை.. ஆசைபடும் வேளைகளில் அவை கைகெட்டா தொலைவில் இருப்பதும், இயலும் வேளைகளில் அவ்வாசைகளின் மீதான உற்சாகம் கரைந்து போவதும் வாழ்வின் இயல்பாகிவிடுகிறது..
இழந்திட்ட குழந்தை பருவம் குறித்த வருத்தம் நெஞ்சுக்குள் எழுந்தாலும் கூட கையிலிருக்கும் இளைமைப் பருவத்தை கவலைகளுக்குள் துளைக்க விருப்பமில்லை.. கடந்திட்டவை குறித்து கவலைக் கொண்டு கையிலிருக்கும் தருணங்களை வீணடித்து என்ன பயன் என்றொரு எண்ணமும் தோன்றுகிறது.. ஒவ்வொரு பருவமும் அதற்கே உண்டான சிறப்பம்சங்களையும் அழகையும் கையிலேந்தியே நிற்கின்றன.. கையிலிருப்பவற்றின் அழகை ரசிப்பதா அல்லது தவறவிட்டவை பற்றிய அங்கலாய்ப்பில் வாழ்வதா என்பதான முடிவு நம் கையிலேயே இருக்கிறது என்றும் தோன்றுகிறது..
விழிகள் மீண்டும் கடலை நோக்குகின்றன.. தூரத்தில் வெளிச்சப்பொட்டுகளாய் அணிவகுத்து நிற்கின்றன மீனவப் படகுகள்.. மணற்துகள்கள் தட்டி எழுந்து அலை நுனியில் நடக்க ஆரம்பிக்கிறேன்.. பாதம் தட்டும் குளுமை உள்ளுக்குள்ளும் மெலிதாக படர்கிறது..
மேடும் பள்ளமுமான பட்டு போன்ற கடலினது மேனியை ரசித்தாலும் கூட விழிகளினது ஓரம் கண்டுக் கொள்ள தவறவில்லை அயர்ச்சிக் கொள்ளாது கரையுடன் காதல் கொள்ளும் அலையினது நுனிகளை விரட்டியபடி குதித்தாடிக் கொண்டிருக்கும் குட்டிச் சிறார்களை.. 'கடந்திட்டதே குழந்தை பருவம்' என்பதான அங்கலாய்ப்பு உள்ளுக்குள் படர்கிறது..
விழிகளை திசை திருப்புகிறேன்.. சற்று தள்ளி விற்றவாறே கடந்து செல்லும் காத்தாடியை கைகாட்டி வேண்டுமென்பதாக சிறுவனொருவன் அடம் பிடித்துக் கொண்டிருக்க, வாங்கி தர மறுக்கும் பெற்றோரோ அவனது கவனத்தை திசை திருப்ப முயன்றுக் கொண்டிருக்கின்றனர்.. காண்பனவற்றை வேண்டுமென்று கைநீட்டி ஏக்கங்களை வெளிப்படுத்திய பிஞ்சு பருவம் சில நொடிகள் கண்முன் விரிகின்றன..
இன்று பை நிறைய காசிருந்தும் கூட சிறுவயதில் ஆசைக் கொண்டு விழிநீர்க் கோர்த்தவைகளை வாங்கி அனுபவிக்க வேண்டுமென்பதான எண்ணமோ அப்போதிருந்த உற்சாகமோ பெரிதாய் எழவில்லை.. ஆசைபடும் வேளைகளில் அவை கைகெட்டா தொலைவில் இருப்பதும், இயலும் வேளைகளில் அவ்வாசைகளின் மீதான உற்சாகம் கரைந்து போவதும் வாழ்வின் இயல்பாகிவிடுகிறது..
இழந்திட்ட குழந்தை பருவம் குறித்த வருத்தம் நெஞ்சுக்குள் எழுந்தாலும் கூட கையிலிருக்கும் இளைமைப் பருவத்தை கவலைகளுக்குள் துளைக்க விருப்பமில்லை.. கடந்திட்டவை குறித்து கவலைக் கொண்டு கையிலிருக்கும் தருணங்களை வீணடித்து என்ன பயன் என்றொரு எண்ணமும் தோன்றுகிறது.. ஒவ்வொரு பருவமும் அதற்கே உண்டான சிறப்பம்சங்களையும் அழகையும் கையிலேந்தியே நிற்கின்றன.. கையிலிருப்பவற்றின் அழகை ரசிப்பதா அல்லது தவறவிட்டவை பற்றிய அங்கலாய்ப்பில் வாழ்வதா என்பதான முடிவு நம் கையிலேயே இருக்கிறது என்றும் தோன்றுகிறது..
விழிகள் மீண்டும் கடலை நோக்குகின்றன.. தூரத்தில் வெளிச்சப்பொட்டுகளாய் அணிவகுத்து நிற்கின்றன மீனவப் படகுகள்.. மணற்துகள்கள் தட்டி எழுந்து அலை நுனியில் நடக்க ஆரம்பிக்கிறேன்.. பாதம் தட்டும் குளுமை உள்ளுக்குள்ளும் மெலிதாக படர்கிறது..
Friday, October 15, 2010
சொல்வன திருந்தச் சொல்..
சொல்லப்படும் கருத்துக்களை விட அவை சொல்லப்படும் விதம் தான் பெரும்பாலும் சர்ச்சைக்கு உரியதாகவும் பிரச்சனையை உண்டு பண்ணுவதாகவும் அமைந்து விடுகிறது. இதை எளிதாக விளக்க ஒரு சின்ன நகைச்சுவையான உதாரணம் சொல்கிறேன் (உதாரணம் என்னுடையதல்ல):
ஒரு பொண்ணுகிட்ட "கொஞ்சம் வாயை மூடு.." என்று சொல்வதற்கு பதிலாக, "உன் வாய் திறந்திருக்குறத விட மூடியிருக்குறப்ப நீ ரொம்ப அழகா இருக்க.." என்று சொல்வானாம் புத்திசாலி..
அதிலிருக்கும் நகைச்சுவையை ஒதுக்கி வைத்துவிட்டு சற்று ஆழ்ந்து கவனித்தீர்களேயானால் தெளிவாக புரியும், எவ்வளவு உணர்வுப்பூர்வமான விஷயமாக (sensitive matter) இருந்தாலும் கூட அதை முடிந்தவரை மற்றவர் மனது கஷ்டப்படாதவாறு சொல்லிவிட முடியும் என்பது.
பொதுவாகவே நாம் சொல்ல வருகிற கருத்தினுடைய நல்லவிதமான அர்த்தத்தை முன் நிறுத்தி வார்த்தைகளை கோர்ப்பதன் மூலம் அதை கேட்பவரது முகசுளிப்பை முடிந்தவரை தவிர்த்திட முடியும். நடைமுறைப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லையென்றாலும் கூட முற்றிலுமாகவே முடியாத விஷயமல்ல இது.
பல நேரங்களில் சொல்லப்படும் வார்த்தைகளும் கருத்துக்களும் மற்றவர் முகத்தில் சுளிப்பை ஏற்படுத்துவதற்கு காரணம் 'விளக்கமின்மை' தான். 'அதை செய்யாதே' என்று மட்டுமே சொல்ல முன்வரும் நாம், 'எதற்காக அதை செய்யக்கூடாது?' என்பதான விளக்கத்தை கொடுப்பதேயில்லை. சில வாக்கியங்களோ கருத்துக்களோ ஒருவரை பார்த்து சொல்லப்படும் போது, "எதற்காக இப்படி சொல்கிறீர்கள்..?" என்று திரும்ப கேட்பவர்கள் மிகவும் குறைவு.
அவர்கள் விளக்கம் கேட்கவில்லையென்றாலும் கூட (முடிந்தவரை அவர்கள் விளக்கம் கேட்பதற்கு முன்பாகவே) நமது கருத்துக்களை அதற்கான விளக்கங்களுடன் வெளிப்படுத்தும் போது அது ஆமோதிப்பை பெறுவற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாத மற்ற நேரங்களில் நல்லதொரு ஆரோக்கியமான கருத்துரையாடலை அது ஆரம்பித்து வைக்கலாம். சொல்ல போகும் கருத்தில் கவனமாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் அவற்றை வெளிப்படுத்தும் விதத்திலும் உபயோகிக்கும் வார்த்தைகளிலும் கூட கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினோமென்றால் ஆரோக்கியமான சூழ்நிலைகளை பெரும்பாலும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
ஒரு பொண்ணுகிட்ட "கொஞ்சம் வாயை மூடு.." என்று சொல்வதற்கு பதிலாக, "உன் வாய் திறந்திருக்குறத விட மூடியிருக்குறப்ப நீ ரொம்ப அழகா இருக்க.." என்று சொல்வானாம் புத்திசாலி..
அதிலிருக்கும் நகைச்சுவையை ஒதுக்கி வைத்துவிட்டு சற்று ஆழ்ந்து கவனித்தீர்களேயானால் தெளிவாக புரியும், எவ்வளவு உணர்வுப்பூர்வமான விஷயமாக (sensitive matter) இருந்தாலும் கூட அதை முடிந்தவரை மற்றவர் மனது கஷ்டப்படாதவாறு சொல்லிவிட முடியும் என்பது.
பொதுவாகவே நாம் சொல்ல வருகிற கருத்தினுடைய நல்லவிதமான அர்த்தத்தை முன் நிறுத்தி வார்த்தைகளை கோர்ப்பதன் மூலம் அதை கேட்பவரது முகசுளிப்பை முடிந்தவரை தவிர்த்திட முடியும். நடைமுறைப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லையென்றாலும் கூட முற்றிலுமாகவே முடியாத விஷயமல்ல இது.
பல நேரங்களில் சொல்லப்படும் வார்த்தைகளும் கருத்துக்களும் மற்றவர் முகத்தில் சுளிப்பை ஏற்படுத்துவதற்கு காரணம் 'விளக்கமின்மை' தான். 'அதை செய்யாதே' என்று மட்டுமே சொல்ல முன்வரும் நாம், 'எதற்காக அதை செய்யக்கூடாது?' என்பதான விளக்கத்தை கொடுப்பதேயில்லை. சில வாக்கியங்களோ கருத்துக்களோ ஒருவரை பார்த்து சொல்லப்படும் போது, "எதற்காக இப்படி சொல்கிறீர்கள்..?" என்று திரும்ப கேட்பவர்கள் மிகவும் குறைவு.
அவர்கள் விளக்கம் கேட்கவில்லையென்றாலும் கூட (முடிந்தவரை அவர்கள் விளக்கம் கேட்பதற்கு முன்பாகவே) நமது கருத்துக்களை அதற்கான விளக்கங்களுடன் வெளிப்படுத்தும் போது அது ஆமோதிப்பை பெறுவற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாத மற்ற நேரங்களில் நல்லதொரு ஆரோக்கியமான கருத்துரையாடலை அது ஆரம்பித்து வைக்கலாம். சொல்ல போகும் கருத்தில் கவனமாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் அவற்றை வெளிப்படுத்தும் விதத்திலும் உபயோகிக்கும் வார்த்தைகளிலும் கூட கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினோமென்றால் ஆரோக்கியமான சூழ்நிலைகளை பெரும்பாலும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
Monday, October 11, 2010
அரசு விரைவு பேருந்துடன் தவறாமல் வரும் இலவச இணைப்பு..
"மூட்டைப்பூச்சிய நசுக்குற மாதிரி நசுக்கிடுவேன்" என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையை சொல்கிறேன்.. மூட்டைப்பூச்சியை நசுக்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல.. அதுவும் சாரை சாரையாய் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளின் இருக்கைகளுக்குள் பதுங்கியிருந்து அமர்ந்தவுடன் பாய்ந்து தாக்கும் அவைகளிடம் இருந்து தப்பிப்பதென்பது கனவில் கூட நடக்காத காரியமே.. காரணம் தூங்கவே முடியாது.. அப்புறம் தானே கனவு காண்பதெல்லாம்!!
இருநூற்று ஐம்பது ரூபாய் மற்றும் அதற்கு மேல் கட்டணம் செலுத்தி வாங்கும் பயணச்சீட்டில் சின்னஞ்சிறு எழுத்துக்களில் கிறுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை எவ்வளவு பெரிய பூதக்கண்ணாடிக் கொண்டு பார்த்தாலும் கூட "மூட்டைப்பூச்சிகள் ஜாக்கிரதை" என்பது எழுதாமல் எழுதப்பட்டிருப்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. உங்களுக்கே தெரியாது பயணச்சீட்டோடு சேர்த்து ஒரு இருக்கை நிறைய மூட்டைப்பூச்சிகளை இலவசமாக தருகிறார்கள் என்பதை.. ஏறி அமர்ந்தவுடன் தான் நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்..
அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்யும் போது, சிவராத்திரிக்கு ஒத்திகை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் மூட்டைப்பூச்சி கடியால் தடித்துக் கொள்ளும் சருமத்துடன் இரவு முழுவதும் விடாமல் சொறிந்துக் கொண்டே இருக்க வேண்டிய அவஸ்தையையும் தவறாமல் அனுபவிப்பீர்கள். பயணக்கட்டணம் என்று இவ்வளவு காசை வாங்கிக் கொட்டிக் கொள்ளும் இந்த அரசு பேருந்தின் இருக்கைகளில் பூச்சி மருந்தடிக்க கொஞ்சம் காசை ஒதுக்கினால் என்ன..? 'மருந்தடிக்க இன்னும் கொஞ்சம் கூடுதல் கட்டணம் கொடுங்கள்' என்று சொன்னால் கூட கொடுப்பதற்கு மக்கள் தயாராகத் தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் கட்டணங்களை உயர்த்துவதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்களே தவிர, அதற்கு பெறுமானமுள்ள சேவைகளை வழங்க வேண்டுமென்பதான எண்ணம் ஏன் இவர்கள் மனதில் எழ மறுக்கிறது என்பது தெரியவில்லை..
பதவியிலிருக்கும் ஒரு அரசியல்வாதி எந்த ஊரிலாவது சாலையில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் நேரங்களில் அங்கிருக்கும் வேகத்தடைகளை அகற்றுவது மற்றும் சாலையின் குண்டுக் குழிகளை மூடுவது என்று எந்த குலுங்களும் இன்றி அவர்கள் வசதியாக பயணிக்க எல்லா கட்டளைகளையும் பிறப்பிக்கும் இவர்கள் பொதுமக்களுக்கு தேவையான சில தேவைகளைக் கூட ஏன் ஒழுங்காக வழங்க வேண்டும் என்று யோசிக்க மறுக்கின்றனர்...?
திருச்சியிலிருந்து பெங்களூருக்கு வரும் அனைத்து அரசு விரைவு பேருந்துகளிலும் பராமரிப்பு என்பதின் சுவடை காணவே முடியாது. இருக்கைகளின் மேல் மூடப்பட்டிருக்கும் துணி அழுக்கு கலந்து பழுப்பு நிறத்திலேயே தான் எப்போதும் இருக்கும். அதனுடைய உண்மையான நிறம் என்ன என்பதை உங்களால் கண்டறியவே முடியாது.. அவ்வளவு அழுக்கு அப்பி போய் இருக்கும். அதையும் பொறுத்துக் கொண்டு முகம் சுளித்தபடி அமர்ந்தால் இந்த மூட்டைச்பூச்சி தொல்லை அமர்ந்த ஐந்தாவது நிமிடத்திலேயே ஆரம்பித்து விடும். சொல்லப்படும் புகாரை நடத்துனர் கொஞ்சம் கூட கண்டு கொள்வதேயில்லை. "நான் என்ன சார் செய்யறது.." என்று எளிதாக கைவிரித்தபடி முன் சீட்டில் போய் உட்கார்ந்துக் கொள்கிறார். தமிழக அரசு பேருந்துகளில் இது என்னுடைய முதல் அனுபவமல்ல. இது தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது எப்போதும்.
அசுத்த குறைபாடோ மூட்டைப்பூச்சி தொல்லையோ இந்த அளவிற்கு பெங்களூரின் அரசு பேருந்துகளில் (கே.எஸ்.ஆர்.டீ.சி) பார்க்க முடியாது. அவர்களது பராமரிப்பு ஓரளவிற்கு நன்றாக இருக்கும். இது என்னுடைய அனுபவம். அங்கே சீட்டுகளில் பூச்சிகள் வாராதிருக்க மருந்தடித்திருப்பதை சில நேரங்களில் உங்களாலேயே வெளிப்படையாக உணர முடியும். கே.எஸ்.ஆர்.டீ.சி பேருந்துகளில் இந்த தொல்லைகள் இருப்பதேயில்லை. கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும் கூட அதற்கு பெறுமானமுள்ள சேவையை அவர்கள் வழங்க தவறுவதில்லை. அடுத்த மாநிலம் வழங்க தயாராக இருக்கும் சரியான சேவையை நம்மவர்களுக்கு வழங்க நம் அரசு துறைகள் ஏன் தாயாராகயில்லை என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே..!!
இருநூற்று ஐம்பது ரூபாய் மற்றும் அதற்கு மேல் கட்டணம் செலுத்தி வாங்கும் பயணச்சீட்டில் சின்னஞ்சிறு எழுத்துக்களில் கிறுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை எவ்வளவு பெரிய பூதக்கண்ணாடிக் கொண்டு பார்த்தாலும் கூட "மூட்டைப்பூச்சிகள் ஜாக்கிரதை" என்பது எழுதாமல் எழுதப்பட்டிருப்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. உங்களுக்கே தெரியாது பயணச்சீட்டோடு சேர்த்து ஒரு இருக்கை நிறைய மூட்டைப்பூச்சிகளை இலவசமாக தருகிறார்கள் என்பதை.. ஏறி அமர்ந்தவுடன் தான் நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்..
அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்யும் போது, சிவராத்திரிக்கு ஒத்திகை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் மூட்டைப்பூச்சி கடியால் தடித்துக் கொள்ளும் சருமத்துடன் இரவு முழுவதும் விடாமல் சொறிந்துக் கொண்டே இருக்க வேண்டிய அவஸ்தையையும் தவறாமல் அனுபவிப்பீர்கள். பயணக்கட்டணம் என்று இவ்வளவு காசை வாங்கிக் கொட்டிக் கொள்ளும் இந்த அரசு பேருந்தின் இருக்கைகளில் பூச்சி மருந்தடிக்க கொஞ்சம் காசை ஒதுக்கினால் என்ன..? 'மருந்தடிக்க இன்னும் கொஞ்சம் கூடுதல் கட்டணம் கொடுங்கள்' என்று சொன்னால் கூட கொடுப்பதற்கு மக்கள் தயாராகத் தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் கட்டணங்களை உயர்த்துவதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்களே தவிர, அதற்கு பெறுமானமுள்ள சேவைகளை வழங்க வேண்டுமென்பதான எண்ணம் ஏன் இவர்கள் மனதில் எழ மறுக்கிறது என்பது தெரியவில்லை..
பதவியிலிருக்கும் ஒரு அரசியல்வாதி எந்த ஊரிலாவது சாலையில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் நேரங்களில் அங்கிருக்கும் வேகத்தடைகளை அகற்றுவது மற்றும் சாலையின் குண்டுக் குழிகளை மூடுவது என்று எந்த குலுங்களும் இன்றி அவர்கள் வசதியாக பயணிக்க எல்லா கட்டளைகளையும் பிறப்பிக்கும் இவர்கள் பொதுமக்களுக்கு தேவையான சில தேவைகளைக் கூட ஏன் ஒழுங்காக வழங்க வேண்டும் என்று யோசிக்க மறுக்கின்றனர்...?
திருச்சியிலிருந்து பெங்களூருக்கு வரும் அனைத்து அரசு விரைவு பேருந்துகளிலும் பராமரிப்பு என்பதின் சுவடை காணவே முடியாது. இருக்கைகளின் மேல் மூடப்பட்டிருக்கும் துணி அழுக்கு கலந்து பழுப்பு நிறத்திலேயே தான் எப்போதும் இருக்கும். அதனுடைய உண்மையான நிறம் என்ன என்பதை உங்களால் கண்டறியவே முடியாது.. அவ்வளவு அழுக்கு அப்பி போய் இருக்கும். அதையும் பொறுத்துக் கொண்டு முகம் சுளித்தபடி அமர்ந்தால் இந்த மூட்டைச்பூச்சி தொல்லை அமர்ந்த ஐந்தாவது நிமிடத்திலேயே ஆரம்பித்து விடும். சொல்லப்படும் புகாரை நடத்துனர் கொஞ்சம் கூட கண்டு கொள்வதேயில்லை. "நான் என்ன சார் செய்யறது.." என்று எளிதாக கைவிரித்தபடி முன் சீட்டில் போய் உட்கார்ந்துக் கொள்கிறார். தமிழக அரசு பேருந்துகளில் இது என்னுடைய முதல் அனுபவமல்ல. இது தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது எப்போதும்.
அசுத்த குறைபாடோ மூட்டைப்பூச்சி தொல்லையோ இந்த அளவிற்கு பெங்களூரின் அரசு பேருந்துகளில் (கே.எஸ்.ஆர்.டீ.சி) பார்க்க முடியாது. அவர்களது பராமரிப்பு ஓரளவிற்கு நன்றாக இருக்கும். இது என்னுடைய அனுபவம். அங்கே சீட்டுகளில் பூச்சிகள் வாராதிருக்க மருந்தடித்திருப்பதை சில நேரங்களில் உங்களாலேயே வெளிப்படையாக உணர முடியும். கே.எஸ்.ஆர்.டீ.சி பேருந்துகளில் இந்த தொல்லைகள் இருப்பதேயில்லை. கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும் கூட அதற்கு பெறுமானமுள்ள சேவையை அவர்கள் வழங்க தவறுவதில்லை. அடுத்த மாநிலம் வழங்க தயாராக இருக்கும் சரியான சேவையை நம்மவர்களுக்கு வழங்க நம் அரசு துறைகள் ஏன் தாயாராகயில்லை என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே..!!
Friday, October 8, 2010
இன்னும் சில சிந்தனைகள்.. (12)
தாம் விரும்பியவாறு எதுவும் நடப்பதில்லையென்றும், வாழ்க்கை எப்போதுமே ஒரு போர்க்களமாகவே இருப்பதாகவும் பலர் குறைபட்டு கொள்கின்றனர். தாம் அதிர்ஷ்டசாலியில்லை என்றும் வாழ்க்கையில் தமக்கான (போர்க்)களங்கள் அவைகளாக விதிப்படி அமைகின்றன என்பதுமான குற்றச்சாட்டை முன் வைக்கும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை, பல நேரங்களில் அக்களங்கள் நாமாக விரும்பி ஏற்றுக் கொண்டவை தான் என்பது.
நாம் மேற்கொண்ட முற்கால வினைகளின் ('வினை' அப்படினா 'செயல்'ன்னு அர்த்தங்க) மீது இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருந்திருந்தோமேயானால் இக்கால நிகழ்வுகளின் போக்குகள் நாம் விரும்பும்படியாக அமைந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பல நேரங்களில் இன்று நடக்கும் பல நிகழ்வுகள் கடந்த காலத்தில் நாம் செய்த செயல்களின் விளைவே..
இன்னும் சொல்லப் போனால், நிகழ்காலத்தில் நாம் எடுக்கும் சில முடிவுகள் எதிர்காலத்தில் எத்தகைய மாற்றத்தை (அல்லது) விளைவை கொண்டுவரும் என்பது தெரிந்தும் கூட பல நேரங்களில் நாம் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. 'அப்படியெதுவும் நடக்காது' என்று நமக்கு நாமே பொய் சமாதானம் சொல்லிக் கொண்டோ அல்லது 'அத அப்ப பாத்துக்கலாம்' என்று விளைவை பற்றிய எண்ணங்களை புறக்கணித்தோ நாம் என்ன நினைக்கிறோமோ அதை செய்கிறோம். விளைவையும் கணக்கில் எடுத்துக் கொண்டு நாம் செய்ய இருக்கும் செயலை இன்னும் கொஞ்சம் திருத்தி செய்வதற்கோ அல்லது நம்மை நாமே அப்போதே திருத்திக் கொள்வதற்கோ நமக்கு பொறுமை இருப்பதில்லை.
"இவ்வழி கடினமாக இருக்கும்" என்று தெரியும் கணத்திலேயே பயணிக்கும் பாதையை மாற்றிக் கொள்ளும் முயற்சியையோ அல்லது அதே வழியில் வரவிருக்கும் கஷ்டங்களை கையாள்வதற்கான ஆயத்தங்களையோ செய்யாமல் அலட்சியத்தோடு ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் பயணத்தை தொடர்வதும் பின்பு கஷ்டம் வரும் போது சூழ்நிலையின் மீதும் வாழ்க்கையின் மீதும் குறைபட்டுக் கொள்வதும் அறிவின்மை என்பதை நாம் பெரும்பாலும் அறிவதேயில்லை..
அதற்காக விதி செய்யும் சதியின் வேலைகளை நான் முழுவதுமாக புறக்கணிக்கவில்லை. விதியின் காரணமாக நிகழ இருக்கும் சில நிகழ்வுகளை (எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் கூட) நாம் விரும்பிய பக்கம் திசை திருப்பிவிட்டிருக்க முடியும் சரியான நேரத்தில் சரியான அளவிலான மதியை நாம் வினைகளின் மீது காட்டியிருந்தால்..
பல நேரங்களில் விளைவுகளின் மீது மட்டுமே கோபம் கொள்கிறோம் நாம் வினையின் மேல் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமே என்பதை அறியாமல் :-)
நாம் மேற்கொண்ட முற்கால வினைகளின் ('வினை' அப்படினா 'செயல்'ன்னு அர்த்தங்க) மீது இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருந்திருந்தோமேயானால் இக்கால நிகழ்வுகளின் போக்குகள் நாம் விரும்பும்படியாக அமைந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பல நேரங்களில் இன்று நடக்கும் பல நிகழ்வுகள் கடந்த காலத்தில் நாம் செய்த செயல்களின் விளைவே..
இன்னும் சொல்லப் போனால், நிகழ்காலத்தில் நாம் எடுக்கும் சில முடிவுகள் எதிர்காலத்தில் எத்தகைய மாற்றத்தை (அல்லது) விளைவை கொண்டுவரும் என்பது தெரிந்தும் கூட பல நேரங்களில் நாம் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. 'அப்படியெதுவும் நடக்காது' என்று நமக்கு நாமே பொய் சமாதானம் சொல்லிக் கொண்டோ அல்லது 'அத அப்ப பாத்துக்கலாம்' என்று விளைவை பற்றிய எண்ணங்களை புறக்கணித்தோ நாம் என்ன நினைக்கிறோமோ அதை செய்கிறோம். விளைவையும் கணக்கில் எடுத்துக் கொண்டு நாம் செய்ய இருக்கும் செயலை இன்னும் கொஞ்சம் திருத்தி செய்வதற்கோ அல்லது நம்மை நாமே அப்போதே திருத்திக் கொள்வதற்கோ நமக்கு பொறுமை இருப்பதில்லை.
"இவ்வழி கடினமாக இருக்கும்" என்று தெரியும் கணத்திலேயே பயணிக்கும் பாதையை மாற்றிக் கொள்ளும் முயற்சியையோ அல்லது அதே வழியில் வரவிருக்கும் கஷ்டங்களை கையாள்வதற்கான ஆயத்தங்களையோ செய்யாமல் அலட்சியத்தோடு ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் பயணத்தை தொடர்வதும் பின்பு கஷ்டம் வரும் போது சூழ்நிலையின் மீதும் வாழ்க்கையின் மீதும் குறைபட்டுக் கொள்வதும் அறிவின்மை என்பதை நாம் பெரும்பாலும் அறிவதேயில்லை..
அதற்காக விதி செய்யும் சதியின் வேலைகளை நான் முழுவதுமாக புறக்கணிக்கவில்லை. விதியின் காரணமாக நிகழ இருக்கும் சில நிகழ்வுகளை (எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் கூட) நாம் விரும்பிய பக்கம் திசை திருப்பிவிட்டிருக்க முடியும் சரியான நேரத்தில் சரியான அளவிலான மதியை நாம் வினைகளின் மீது காட்டியிருந்தால்..
பல நேரங்களில் விளைவுகளின் மீது மட்டுமே கோபம் கொள்கிறோம் நாம் வினையின் மேல் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமே என்பதை அறியாமல் :-)
Subscribe to:
Comments (Atom)