வேண்டுவன
கிடைத்தபடியே இருக்கின்றன
மற்றவர்களுக்கு..
கிடைப்பவை யாவும்
வேண்டப்படாமலேயே நமக்கு
அருளப்பட்டவாறு இருக்கின்றன..
வேண்டுவனவற்றையும்
கிடைப்பனவற்றையும்
ஒரே புள்ளியில் நாம்
பார்க்க முடிவதேயில்லை
படைத்தவனை விடவும் நாம்
புரிதல் அதிகமுள்ளவர்களாய் இருப்பதனால்..!
--
பால் ஆரோக்கியம்.
No comments:
Post a Comment