Monday, January 5, 2015

வேண்டல்

வேண்டுவன 
கிடைத்தபடியே இருக்கின்றன 
மற்றவர்களுக்கு..

கிடைப்பவை யாவும்
வேண்டப்படாமலேயே நமக்கு 
அருளப்பட்டவாறு இருக்கின்றன..

வேண்டுவனவற்றையும் 
கிடைப்பனவற்றையும் 
ஒரே புள்ளியில் நாம் 
பார்க்க முடிவதேயில்லை 
படைத்தவனை விடவும் நாம் 
புரிதல் அதிகமுள்ளவர்களாய் இருப்பதனால்..!

--
பால் ஆரோக்கியம்.

No comments:

Post a Comment