எல்லையற்ற தேடல்களில்
தன்னைத் தொலைத்திருந்த அவன்
எல்லையில் கால் பதித்த போது
கையில் அகப்பட்ட உருவம்
தனது என்பதை
அறியும் நிலைக் கடந்திருந்தான்
யாரென்று அவனிடம்
உரக்க சொல்லியபடி சூழ்ந்திருந்தவர்களை
சிறுக்குழந்தையின் மிரட்சியுடன்
திருதிருவென்று பார்த்தபடி இருந்தான்
பின்பு அவர்கள்
அவனுக்கு
ஒரு பொருள் தந்தனர்
அது
தேடலில் குதிக்க
முயல்பவர்களின் விழிகளில்
கூச்சத்தை ஏற்படுத்தியது
--
பால் ஆரோக்கியம்
No comments:
Post a Comment