Tuesday, January 20, 2015

[ கவிதை ] மலர் அலங்காரம்

இவ்வளவு தூரம் 
வந்த பிறகு தான் 
தூரத்தை துரத்தவே 
மனம் வருகிறது 

எல்லையைக் கடந்த பிறகே 
கோட்டின் மறுபக்கம் மீது 
இனம் புரியா ஈர்ப்பு 

கதவுகள் அடைபட்டப் பின்பு 
இறக்கைகள் விரித்து 
காற்றில் மிதக்க ஆசை 

கடைசி சொட்டு 
தீர்ந்த பிறகு 
மெல்ல மேலெழும் தாகம் 

கிளறப்பட்ட மண் 
சமன்படுத்தப்பட்டப் பிறகு 
அங்கிருக்க நாம் தகுதியற்றவர்கள் 
மெழுகுவர்த்தி ஏற்றியபடியும் 
மலர்களால் அலங்கரித்தபடியும் 

--
பால் ஆரோக்கியம் 

[ Why don't you take a moment to leave your reaction..? ]

No comments:

Post a Comment