Wednesday, November 20, 2013

Random thoughts

Irrespective of how much ever we like or love some one, they just can't / won't stay in our life because of what we call fate or destiny or God or the choice of nature or whatsoever. We just gotta learn to move on. I know it's difficult. I know it's hard like hell, but you gotta learn the art of moving forward irrespective of who or who wouldn't accompany you. You got no choice my dear. And mind you, ending is not the choice either.

This is not any advise. Some random thoughts that I would like to put it inside your head dear. It will pop up sometime when you are in need :-)

-- Paul Arockiam

Saturday, November 16, 2013

பிந்தைய சிந்தனைகள்: சொன்னா புரியாது (2013, தமிழ் திரைப்படம்)

"சொன்னா புரியாது", 2013 ஜூலையில் வெளிவந்த தமிழ் திரைப்படம். சமீபத்தில் தற்செயலாக காண நேர்ந்தது. காமெடி திரைப்படம். படத்தை ஆரம்பத்தில் இருந்து பார்க்கவில்லை. இடையில் சில காட்சிகளைப் பார்த்ததிலேயே ஏனோ அதன் நகைச்சுவை என் கவனத்தை தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து படம் முழுவதுமே பார்த்து முடித்து விட்டேன்.

படத்தை எடுத்தது இளம் (புதிய - என்னும் அர்த்தத்தில் படிக்கவும்) டைரக்டர் கிருஷ்ணா ஜெயராஜ். படத்தைப் பார்த்துக் கொண்டே வரும் போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எவ்வளவு அழகாக நகைசுவையை கையாண்டிருகிறார்கள் இந்த படத்தில் என்று. கிட்டத்தட்ட இருண்ட நகைசுவை (Black  Comedy)யும் கலந்து நன்றாகவே படத்தின் கதையும் திரைக்கதையும் எழுதபட்டிருப்பதாக தோன்றியது.

இடைவேளைக்கு பின்னால் வந்த ஒரு காட்சி தான் படத்தின் மேலிருந்த மதிப்பை சட்டென்று கீழே போட்டு உடைத்து விட்டது. அது பிம்போ (ஒரு கேரக்டர்) ஸ்வேதாவை லவ் பண்ணாமல் ரிஜெக்ட் பண்ணி விட்டதாக கூறி வரும் ப்ளாஷ்பேக் காட்சிகள். பாரில் (bar) அவனது பிளேட்டில் இருந்து சிக்கன் துண்டை அவள் எடுத்து சாப்பிட்டு விடுகிறாள். அதற்காக அவன் அவளை காதலிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு சோகமாகி விடுகிறான். "உன் பிளேட்டிலேயே கை வச்சுட்டாளா..?", என்று அவன் நண்பர்கள் அவனுக்கு பரிதாபப்படுகின்றனர். பிம்போ உணவை பகிர்ந்து கொள்பவன் அல்ல என்பதான அர்த்தத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த நகைசுவை அப்படியே "ப்ரெண்ட்ஸ்" (F-R-I-E-N-D-S) என்னும் ஹாலிவுட் டெலிவிஷன் சீரிஸில் இருந்து உருவப்பட்டு இருக்கிறது. சீசன் 10, எபிசோட் 9 என்று நினைக்கிறேன். அதில் "Joe doesn't share food" என்று வரும் நகைசுவை மிகவும் பிரபலம். (Reference : http://www.friends-tv.org/zz1009.html , http://www.youtube.com/watch?v=iCCzzZVVpIA ). நீங்களே கூட "Joe doesn't share food" என்று கூகிளில் தேடித் பாருங்கள். ப்ரெண்ட்ஸில் அந்த ஒரிஜினல் காட்சியை மிகவும் அழகாக எடுத்திருப்பார்கள். பார்க்கும் போது அவ்வளவு சிரிப்பு வரும்.

ஒரிஜினாலிட்டி இல்லாமல் ஹாலிவுட் டெலிவிஷன் சீரிஸில் இருந்து உருவி எழுதி இருந்தாலும், அதே மாதிரியான காட்சியை இந்த படத்தில் பார்த்த போது சிரிக்கவே செய்தேன். அது ஒரிஜினல் ப்ரெண்ட்ஸ் காட்சியை நினைவூட்டியதால்.

சொல்ல வருவது என்னவென்றால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இந்த உண்மையை என்னால் கிரகிக்க முடிந்ததால் படத்தின் மேலிருந்த மதிப்பு போய் விட்டது. இன்னும் என்னென்ன நகைசுவை எங்கெங்கிருந்து உருவப்பட்டு இப்படத்தில் சொருகப்பட்டதோ, யாருக்கு தெரியும் ? வருத்தமான விஷயம் என்னவென்றால் ஏன் நம் டைரக்டர்களிடம் ஒரிஜினல் ஐடியாவே இல்லையா ? - என்னும் மிக பெரிய கேள்வியை இத்தகைய நிகழ்வுகள் நமக்குள் ஏற்படுத்துவது தான்.

இது தமிழ் சினிமாவின் அவலம் என்று சொல்லாம். இந்த அவலத்தை மனதிலிருந்து தள்ளி வைத்து விட்டுப் பார்த்தால், "சொன்னா புரியாது" ஒரு நல்ல காமெடி திரைப்படம் தான். என்ன, படத்தின் நகைசுவைகள் எல்லாம் கொஞ்சம் ஒரிஜினலாக இருந்திருக்கலாம்.

-- பால் ஆரோக்கியம் 

Wednesday, October 30, 2013

மனுஷ்ய புத்திரனுக்கு எழுதிய மடல்

அன்புள்ள மனுஷ்ய புத்திரன்,

உங்களது "இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்" கவிதைத் தொகுப்பிலுள்ள 'புரிந்துக் கொள்பவராக இருப்பது தொடர்பாக' கவிதையைப் படித்த சில நாட்களிலிருந்தே இந்த கடிதத்தை உங்களுக்கு எழுத வேண்டும் என்று எனக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது. அந்த கவிதையைப் படித்து எப்படியும் நான்கு மாதங்களாவது ஆகிவிட்ட நிலையில் அன்றிருந்த அதே பரபரப்பும் அக்கவிதை பற்றிய சிந்தனைகளும் பசுமையாகவே என்னுள் இருப்பது எனக்கு ஆச்சர்யமாகவே இல்லை. காரணம், இது நான் எதிர்பார்த்தது தான். அந்த கவிதையை படித்த கணமே எனக்கு தெரிந்தது நான் படித்ததிலேயே என்னை மிகவும் பாதித்த, என் மனநிலைகளை துல்லியமாக பதிவிட்ட, என் உள்ளுணர்வுகளுடன் 'நானும் உன் இனம்' என்று சிநேகித்த கவிதைகளில் இதுவும் ஒன்று என்பது.

எந்த அளவிற்கு ஒருவனின் மனித நேயப் பண்புகள் மற்றவர்களால் அவர்களது சுயநலத் தேவைகளுக்காக மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு, பிறகு கரும்பின் சக்கையைப் போல ஒரு மூலையில் அவன் துப்பி எறியப்பட்டிருந்தால் இப்படியொரு கவிதையை அவன் எழுதுவான் என்று நிறைய நாட்கள் யோசித்திருக்கிறேன்.

"I hope you understand.." என்று முடியும் மின்னஞ்சல்களையோ, 'pls understand' என்று திரையில் ஒளிரும் எஸ்.எம் எஸ். செய்திகளையோ படிக்கும் போதும், 'உன் அளவிற்கு என்னைப் புரிஞ்சுகிட்டவங்க யாருமே இல்ல', என்று செவிகளில் நாதமீட்டும் (?) குரல்களைக் கேட்கும் போதும், இப்போதெல்லாம் எனக்கு இந்த கவிதை தான் ஞாபகம் வருகிறது.

எப்பொழுதும் எல்லாவற்றையுமே புரிந்துக் கொள்ளும் ஒருவனது மனதின் ஆழத்தினுள்ளே அரும்பிக் கொண்டிருக்கும் உணர்வுகளை எவ்வளவு நேர்த்தியாக சொல்லியிருக்கிறீர்கள் இந்த கவிதையில்.

பொதுவாகவே ஒன்றை ஒருவர் எழுதி அதை மற்றொருவர் படிக்கும் போது மூன்று விதமான விளைவுகள் ஏற்படலாம் என்பது என் கருத்து. எழுதியவரே எதிர்பார்த்திராத யோசிக்க முடியாத ஆழமான பாதிப்பை வாசிப்பவர் உணர்வது, ஆழமான பாதிப்பில் விளைந்த வரிகள் பத்தோடு பதினொன்றாக வாசிக்கப்படுவது, எந்த பாதிப்பின் உச்சத்தில் ஒரு வரி எழுதப்பட்டதோ அதே உணர்வை மனநிலையை வாசிப்பவனும் உணர்வது. இந்த கவிதையைப் படிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்னது மூன்றாவதை. எழுதுபவனும் வாசிப்பவனும் அவர்களது வாழ்வின் ஏதோவொரு கணத்தில் அந்த உணர்வுகளையோ அல்லது மனநிலையையோ கடந்து சென்றதன் விளைவாக ஏற்படுவது அது.

இதுவரையில் நான் ஒரு கவிதையைப் படித்து விட்டு இவ்வளவு யோசித்தது இந்த கவிதையைப் பற்றி தான் இருக்கும். எப்பொழுதும் புரிந்துக் கொள்ளும் மனதின் ஆழத்தில் மற்றவர் ஏற்படுத்தும் ரணங்களையும் அக்கவிதையின் கடைசி வரிகளில் வெளிப்படும் புன்னகையின் ஓரங்களில் வழியும் ஆற்றாமையும் ஆதங்கமும் கலந்த வலிகளையும் என்னால் அப்படியே உணர முடிகிறது. என் வலிகளையும் ஆதங்கங்களையும் பிரதிபலிக்கும் வரிகள் அவை.

அக்கவிதையைப் படித்த பின்பு எழுந்த சிந்தனைகளில் எனக்கு வேறொன்றும் தோன்றியது. ஒருவன் இப்படியொரு கவிதையை எழுதி விட்டு அல்லது அதைப் படித்து அதன் பாதிப்பை அனுபவித்து விட்டு மீண்டும் தொடர்ந்து அவ்வாறே புரிந்துக் கொள்பவனாக இருக்க முடியுமா..? நிறைய நாட்கள் என் எண்ணங்கள் இதை சுற்றியே வட்டமிட்டு இருந்திருக்கின்றன. இக்கவிதையை எழுதுவதற்கான அல்லது அதன் பாதிப்பை ஏற்பதற்கான மனநிலைக்கு ஒருவன் வந்த பிறகும் அவனால் தொடர்ந்து புரிந்துக் கொள்பவனாக இருக்க முடியுமா..? அதே அளவில்...??

அது மிகக் கடினம். கடினம் என்பதை விட முடியாது என்றே சொல்லலாம். அப்படித் தான் எனக்கு தோன்றுகிறது. இக்கவிதைக்கான மனநிலை எப்போதுமே புரிந்துக் கொள்பவன் அவனது எல்லைகளைத் தொடும் போது ஏற்படுவது. It is a wake up call. ஒரு விழிப்பு. அடக்கி வைத்திருந்த ஆதங்கங்கள் பீறிட்டு வெடிக்கும் நிலை. எப்போதும் புரிந்துக் கொள்பவன் அதுவரையில் தான் உணராத அல்லது உணர விரும்பாத 'அந்த ஒன்றை' உணரும் கணம் அது. அதன் பிறகு அவன் எப்பொழுதும் எல்லாரிடமும் எல்லாவற்றையும் புரிந்துக் கொள்பவனாக இருக்கவே முடியாது. அல்லது அது அவனது இயல்பு என்பதிலிருந்து விலகி அவனது தேர்வுகளில் ஒன்றாக வந்து நின்று விடும். இனி அவன் மிகுந்த விழிப்பு நிலையில் தான் இருப்பான்.அவனது புரிந்துக் கொள்ளும் இயல்பிலிருந்து அவனால் முழுவதுமாக வெளிவர முடியாவிட்டாலும் கூட அதன் பின்பு அவன் மிகுந்த சுதாரிப்பு உள்ளவனாகி விடுவான் என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஒரு விதத்தில் அது ஒரு சுமையும் கூட. கூடுதல் வலிகள். புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதான அவனது இயல்பான மனிதநேய பண்புகளுக்கும் தன் சுயத்தைக் காயங்களிலிருந்து காப்பதற்காக அவன் எடுக்க வேண்டிய தேர்வுகளுக்கும் இடையில் மனதளவிலான போராட்டத்திற்கு அவன் உள்ளாகிறான். இந்த தெளிவு, இந்த விழிப்பு அவனுக்கு மேலும் ஒருவித மன அழுத்தத்தை தான் கொடுத்து விடுகிறது. வேறென்ன சொல்வது.

இந்த கவிதையை நான் இவ்வளவு சிலாகிக்க காரணம் என்னவாக இருக்கும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அக்கவிதையைப் படித்ததில் இருந்து உங்களை எனக்கு கொஞ்சம் அதிகமாகவே பிடிக்க ஆரம்பித்து விட்டது. தன் மனநிலைகளைப் பகிரும் ஒரு உயிரைக் காணும் போது பிரியங்கள் மிகுதியாவதும், நட்புணர்வில் அன்பு கொஞ்சம் கூடுவதும் இயற்கை தானே.

இது வரையில் நான் யாருக்கும் அவர்களது படைப்பு பற்றி அஞ்சல் எதுவும் அனுப்பியதில்லை. அனுப்ப வேண்டுமென்று நான் நினைத்துக் கொண்டிருந்த ஒரே எழுத்தாளர் சுஜாதா. ஆனால் அனுப்பியதில்லை. அதைப் பற்றிய வருத்தம் இன்னமும் எனக்குண்டு. மனதின் உணர்வுகளை சிறிதும் பிசகாமல் எழுத்துக்களில் பதிவிடும் ஒரு கலைஞனுக்கு பாதிப்பையோ பரவசத்தையோ ஏற்படுத்தும் அவனது படைப்பைப் பற்றி தெரியப்படுத்துவது மிகவும் முக்கியம் என்பதையும் தாண்டி வாசகனின் கடமை என்றே நினைக்கிறேன். அந்த ஒரு மனநிறைவைக் கூட வாசகன் அக்கலைஞனுக்கு தராவிட்டால் அது அநியாயம்.

-- பால் ஆரோக்கியம் 

Thursday, October 17, 2013

random, again!

they don't understand. they never will. you know what, stop expecting them to understand. they don't deserve your expectation or may be you don't deserve their understanding. whatever the **** it is, just move on.. stop annoying yourself!!! 

-- Paul Arockiam

random

when you are crazy, you do all stupid things. when you are stupid, you do all crazy things. when you are normal, you do nothing. cold you, please, help me understand what's the fun in being normal? 

come on, you have only one life.. don't be stupid but go crazy ;-)

-- Paul Arockiam

Tuesday, October 15, 2013

பிந்தைய சிந்தனைகள்: "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்"

முயற்சி: பாராட்டப்பட வேண்டியது, கொஞ்சம் முயன்றிருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.

தேர்ச்சி: பார்க்கலாம் ஒருமுறை.

இந்த படத்தைப் பார்த்த போது ஒரு கவிதையை வாசிக்கும் அனுபவம் ஏற்பட்டது. அனுபவத்தின் முடிவில் இன்னும் மிக சிறப்பாக செய்திருக்கலாமே அல்லது சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது.

படம் ஏதோவொரு புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறது. பிறகு அங்கிருந்து பயணிக்கிறது அவ்வபோது ஏதோவொரு பிளாஸ்பேக் இருப்பதற்கான சிந்தனையூக்கிகளை இட்டுக் கொண்டே. படத்தின் ஆரம்பத்திலேயே சமூகத்தின் ஆரோக்கியமற்ற மனநிலையை மிகவும் நுணுக்கமாக எள்ளி நகைப்பது, சற்றே மிகைப்படுத்தப்பட்டு இருந்தாலும், ரசனைக்குரியது.

துரத்தல், ரத்தம், துப்பாக்கி, வன்மம் மற்றும் இன்னபிற மனதிற்கு ஆரோக்கியமற்ற சமாச்சாரங்களுடன் வேகமாக முன்னேற முயல்கிறது படம். "முயல்கிறது" என்கிற வார்த்தையை உபயோகிக்கும் போது கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. பலருக்கு நிஜமாகவே இந்த படம் மிகவும் வேகமான திரைக்கதை கொண்ட படமாக தெரியலாம். Bourne சீரீஸ் போன்ற உலக படங்கள் பார்த்தவர்களுக்கு இதில் இந்த துரத்தல்களில் ஆங்காங்கே சில தொய்வுகள் தென்படவே செய்யும். ஆனால் படத்திற்கு அது ஒரு பெரிய மைனஸ் அல்ல. வேறு ஒரு கோணத்தில் இதை சொல்ல வேண்டுமென்றால், 100 மீட்டர் ஓட்டத்தை நாம் சீட்டின் நுனியில் உட்கார்ந்து ரசிக்கலாம், 200 மீட்டர் ஓட்டத்தை நுனியில் உட்காராவிட்டாலும் அதே சுவாரசியத்துடன் ரசிக்க முடியும், 400 மீட்டர் என்னும் போது கொஞ்சம் சுவாரசிய தளர்வு ஏற்படும். 800, 1600 என்று போகும் போது அதே சுவாரசியத்தை கொண்டு வர நிறைய செய்ய வேண்டும். அவற்றில் சில இந்த படத்தில் மிஸ்ஸிங் என்று தோன்றியது.

முக்கியமான பிளாஸ்பேக் இருக்கிறதென்று நிறைய நம்மை யோசிக்க வைத்து கதை நகருகிறது. இடைவேளை முடிந்து படம் முக்கால்வாசி முடிந்த பிறகும் வராத பிளாஸ்பேக் பற்றி யோசிக்கும் போது அதை ஒரு மிகவும் சாதுர்யமாக கவித்துவத்துடன் சொல்லி இருப்பதில் டைரக்டரின் திறமை பளிச்சிடுகிறது (எங்கிருந்தும் இது சுடபட்டதல்ல என்றே நினைக்கிறேன்). 

கதையில், அதன் வேகத்திற்கான வினயூக்கிகளில் நிறைய பொத்தல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, திருந்திய ஒருவனை சுட்டாவது கொல்ல வேண்டுமென்று எதற்காக CBI துரத்த வேண்டும்? தன்னை காப்பாற்றியதற்காக போலீஸ் வசம் மாட்டி இருக்கும் ஒருவனை எதற்காக போலீசிடம் இருந்து கொண்டு செல்ல வேண்டும் ? எதற்காக அது ? விட்னசை வைத்து குற்றவாளியை கொள்ள முயலும் சிபிஐ-யின் செயல் போன்ற சில விஷயங்கள் நெருடுகின்றன. நிறைய கேள்விகள்.. பதில்கள் இல்லாமல்.

படத்தில் ஆங்காங்கே இழையோடி இருக்கும் நகைசுவை ரசிக்க வைக்கிறது. திரைக்கதையில் ஸ்டைல் இருக்கிறது.

நிச்சயமாக ஒருமுறை பார்க்கலாம். இயக்குனரின் முயற்சியைப் பாராட்டலாம். ஆனால் எனகென்னவோ படத்தை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது.

-- பால் ஆரோக்கியம் 

Monday, October 7, 2013

On Living..

Doctor says, 

"It is not that they don't value money. It's just that they prefer their peace of mind over it."

He also continued saying, "Limiting your terms on living is not a good deal when you can increase the ability to spend by earning more. Don't come back and tell me that you couldn't expand your earning capacity. Have you ever even tried ? I see most of the people succeed or at least keep themselves busy in doing that. Don't limit yourself. When you feel like limiting yourself on living, just look up and see the sky, it will tell you what you need to do."

I couldn't agree him more.

-- Paul Arockiam



Sunday, September 22, 2013

Living

Two days aren't good enough. "Will I wake up tomorrow with this same calm and casual mind set..?", when the thought passed through my mind, I was wondering, "how am I going to enjoy today".

The Doctor must have heard what I was thinking. He volunteered to answer, "Hey Paul, listen". I was listening.

"There is nothing called tomorrow. It is always about only today."

I couldn't agree Him more. "Indeed", I smiled.

"Don't let any moment of it slip away without you enjoying it", He insisted.

"Of course, I'm onto it." :-)

-- Paul Arockiam

Saturday, September 21, 2013

Living..

After a good breakfast and some listening time to up-beat songs, had a quick nap. Now took bath and refreshed. Heading out to shopping mall -- some tasty-n-crunchy late lunch, buying some books, sight seeing, may be buying some garments too (?) and then perhaps to Merina Beach to feel the grains of sand, salty breeze and the chillness of sea -- why not, I deserve some good time, after all it is weekend.. :-)

-- Paul Arockiam

Realization..

Based on an advise from doctor, a real doctor.

When you stop doing things for others
you save yourself a lot of trouble.

-- Paul Arockiam

Thursday, September 19, 2013

செம்புலப் பெயனீர்..

குறுந்தொகை பாடல் 40: குறிஞ்சி - தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

- செம்புலப் பெயனீரார்.

உன் தாயும் என் தாயும் யார் யாரோ ?
என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையில் உறவினர் ?
நானும் நீயும் எவ்வழியிலும் அறிந்திராவிடினும் 
செம்மண்ணில் பெய்த மழைநீர் போல 
அன்பு நெஞ்சங்கள் கலந்து விட்டனவே.

என்று காதலை எவ்வளவு அழகாக சங்க இலக்கியத்தில் பதித்திருக்கின்றனர். பள்ளியில் மனனம் மட்டுமே செய்த பாடல். அர்த்தத்தின் ஆழங்களை உணராத பருவம் அது. அல்லது உணர்த்தும் வகையில் கற்பிக்கப்படவில்லையோ என்னவோ. அடியில் சென்று முத்தெடுப்பதை விட மேலோட்டமாய் நீந்தி செல்லும் தூரங்களையும் எதிரலைகளையும் ரசித்து லயித்திருந்த பள்ளி பருவம் அது. இதை இப்போது படித்த போது எனக்கு மேலும் சில வரிகள் தோன்றின. செய்யுள் என்றாலே எனக்கு லேசாக பரதநாட்டியம் ஆடுமென்பதால் எளிய நடையில் எழுதுகிறேன்..

பிறகு 
நெடுங்கோடையொன்று வந்தது 
செம்மண்ணின்றும் மழைநீரைப் 
பெயர்த்தெடுத்துச் சென்றது 
நீரின் விட்டு சென்ற சுவடுகள் 
செம்மண்ணில் தங்கின நிரந்தரமாய் 

என்னவோ தெரியவில்லை. என் மனதில் தோன்றிய இவ்வரிகளை காகிதத்தில் துடைத்த போது தர்மபுரியின் "இளவரசன்-திவ்யா" மனதில் தோன்றி மறைந்தார்கள்.

-- பால் ஆரோக்கியம்

Realizations..

I was talking to Doctor today morning and I hear him saying,

"You will always be short of time until you make efforts to realize how short you're of tasks.."

I replied with a smile, "Indeed.."

-- Paul Arockiam

Monday, September 16, 2013

அன்பின் இறுதிக் காலங்கள்..

அன்பின் இறுதிக் காலங்களில் 
வறண்டு கிடக்கும் கிணறுகள் பற்றி
எவ்வித கவலைகளுமற்று இருக்கிறோம்..
தாள முடியா தாகம்
தொண்டை அரிக்கையிலும் கூட
மழை வேண்டி பிராத்திக்க
நமக்கு தோன்றுவதேயில்லை..

அன்பின் இறுதிக் காலங்களில்
அதுவரை செலவழித்த  
கணக்கற்ற அன்பின் மதிப்பை 
பிரதிபலிக்கும் எதுவுமே 
நம்மிடம் இல்லையென்னும் வெறுமை 
கரிய நிறத்துடன் நம்மை சூழ்ந்து கொள்கிறது..
அதன் அடர்ந்த கருமையில்
நமக்கு முன் விரிந்திருக்கும் வழிகள்
முற்றிலுமாய் புதைந்து போய் விடுகின்றன..

அன்பின் இறுதிக் காலங்களில்
அன்பை பற்றி யோசிக்க நமக்கு
மிகவும் கசக்கிறது
நிறைய எரிச்சல்படுகிறோம்
மிதமிஞ்சி வெறுப்படைகிறோம்..
அக்காலங்களில்
அன்பின்மையின் மேல்
தீர்க்கமாக நம்பிக்கை கொள்ளத் தொடங்குகிறோம்..

அன்பின் இறுதிக் காலங்களில்
இழப்புகளை பற்றி நாம்
பெரிதாய் கவலைப்படுவதில்லை..
இல்லாத ஒன்றை இழக்கும் வாய்ப்பில்லை என்று
நாம் மிகவும் திட மனதுடன் இருக்கிறோம்..

அன்பின் இறுதிக் காலங்களில்
அதுவரையிலான பயணத்தின் குதூகலமோ
பகிர்ந்திருந்ததின் நிறைவோ
உரையாடல்களின் இனிமையோ
அருகாமையின் கதகதப்போ
ஏற்படுத்தாத தாக்கம் குறித்து
நிறைய ஆதங்கம் கொள்கிறோம்..
விடை கொடுத்தலை விட
அதன் பின்னும் தொடரவிருக்கும்
நமது பயணத்தை பற்றியே
அதிகம் சிந்திப்பவர்களாக இருக்கிறோம்..

அன்பின் இறுதிக் காலங்களில்
ஒன்றாய் அமர்ந்து உண்பதிலிருந்தும்
கதை பேசி சிரித்திருப்பதிலிருந்தும்
புகைப்படத்தில் இணைந்து புன்னகைப்பதிலிருந்தும்
படுக்கையை பகிர்ந்துக் கொள்வதிலிருந்தும்
நாம் விலகியே இருக்கிறோம்..

ஆனாலும் அக்காலங்களில்
பரிசளிக்கும் வாய்ப்புகளை மட்டும்
நாம் தவற விடுவதேயில்லை..
அளிக்கும் பரிசுகளின் கனம்
நம் குற்ற உணர்வுகளை விட
கொஞ்சமேனும் அதிகமாயிருக்கும்படி
எப்போதுமே பார்த்துக் கொள்கிறோம்..

-- பால் ஆரோக்கியம்

Sunday, September 15, 2013

After Thoughts: Albert Camus' The Outsider..

It has constantly been itching me to write something about Albert Camus' "The outsider" ever since I have read the book. It has been several weeks since then. But the thoughts about the book are still in my mind afresh as though I read it just few minutes back. It is one of the best books I have read so far. I have heard of existentialism before but never thought that I would know about it by walking through the mind of an existentialist, who obviously stands outside of our territory in which we don't dare to allow someone of his sort.

This is not a review. But the thoughts about the book goes in more detail because it is one of the best written books of 20th Century. Let me start with an incident that had happened after reading the book, which perhaps may better help me to explain why I think the book is one of the best.

Shortly after I have finished reading the book and was impressed by the way it has been written, I happen to mention the same to one of my friends. She was interested in good reads, so I gave her the book. She read the first few lines of the book in front of me,

"Mother died today. Or may be yesterday, I don't know. I had a telegram from the home: 'Mother passed away. Funeral tomorrow. Yours sincerely.' That doesn't mean anything. It may have been yesterday."

Immediately after reading the lines, she looked at me and uttered the words, "heartless person". I smiled. After a few minutes of silence I said, "read it, it is such a great book, written so very well."

She said, "lets see.."

After a week or two, I forgot that I gave her the book. She called me one day and asked, "can we meet today? I want to return that book."

"Yes, of course... when?"

"Evening.. say 8?"

"Sure..", and I hung up the phone.

In fact, I was little surprised that she did not comment anything on the book. I was at least expecting a one liner about how the book was for I felt it is one of the best I have read so far. After a short while, I called her back, "do you want any other book?"

"Yes, any fiction would help."

"You didn't like that book, did you?", I asked.

"Yes, I didn't like it.", she said without giving any clue on what she thinks inside.

"Why you didn't like it ?", I was very curious.

"Why means..? I just didn't like it.", and she has full stopped the talk.

"oki..", and I hung up.

To be honest, I was very surprised, she didn't like it. Well, it is not that everyone has to have the similar taste. But then later some day when I happen to talk about this book to someone else, I kind of got an insight of why she might possibly not have liked the book.

The primary character of the book is a very cold, heartless, emotionless person. When I could sense why she might not have liked the book, I couldn't control laughing. People expect the protagonist to be a nice, charming, good-hearted human being. But in this book, the primary character comes across as a person who doesn't even mourn for his mother's death, supports a friend who tries to abuse his girl friend, kills a man who is not at all related to him. Very cold in nature. Well, at least that is how we call them or would like to perceive them (people like him). As a matter of fact, such perception hardly affects them which is a different story altogether.

I didn't like the primary character of the book either. He is not the kind of person I'm or the kind of person I would like to be or the kind of person I would appreciate. But I couldn't resist myself from appreciating his non-pretending nature. However it is not the point. A book is not always about the personality of the primary character. The beauty of the book lies somewhere else. The way in which the book is written. The style. The language. The characterization. How the characters have been rendered. How the story is told. How the mind of a person is presented for you to walk through. There is a lot more to be looked for in a book than the nature of the primary character. The only stories where I could imagine a perfectly genuine and absolutely good-hearted human being to be a protagonist are fairy tales.

In fact if you dislike the primary character by seeing him as someone who does not fit in your world, an outsider, the novel has achieved its purpose. Hence the title. This book's mind voice and it's language are stunning. The way it is written is absolutely brilliant. Even the thickness of the book tells the kind of character we are talking about. There couldn't have been more to write because of the kind of character we are dealing with. Epic writing.

I'm not an existentialist. Nor I appreciate existentialism very much. That doesn't stop me from appreciating this so very well written book of 20th century.

PS 1: If you are planning to read the book, read the one translated by Joseph Laredie. The other translations seems to be pathetic.

PS 2: The original book is written in french, hence PS 1.

-- Paul Arockiam

Wednesday, September 11, 2013

அன்பை உதறிச் செல்வதற்கு..

அன்பை உதறிச் செல்வதற்கு
பெரிதாய் காரணங்களெதுவும்
தேவைபடுவதேயில்லை எனக்கு​.............

ஒரு
சிறிய விருப்பமின்மை
சிறிய தடுமாற்றம்
சிறிய சலசலப்பு
சிறிய குறுக்கீடு
சிறிய முகச்சுழிப்பு
சிறிய கோபம்
சிறிய உதறல்
சிறிய புறகணிப்பு
சிறிய சகிப்பின்மை
சிறிய அருவருப்பு
சிறிய துரத்தல்
சிறிய தூற்றல்
சிறிய வெறுப்பு
சிறிய நட்பின்மை
சிறிய வாக்குவாதம்
சிறிய வேதனை
சிறிய வலி ​

ஏதோவொன்று
மிக சிறியதாக
கிடைத்தாலே போதும்

இன்னும் சொல்லப் போனால்
அன்பை உதறி செல்வதற்கு
எனக்கு
இன்னொரு
சிறிய அன்பு போதும்

​-- பால் ஆரோக்கியம்

Tuesday, September 10, 2013

Random..

Who said knowledge is powerful. Not always. Especially the ones that you are forced to learn. It could be very disturbing. As a matter of fact, most of the times it makes you powerless :-)

Once you are disturbed, you can never be the same again !!

-- Paul Arockiam

Thoughts after reading book I of Fifty Shades Trilogy

[ This is not a review ]

Just some thoughts after I finished the book I of the Fifty Shades Trilogy, the Fifty Shades of Grey.

The novel is intense. very intense. The sex in the novel is really too much, which I didn't enjoy that much. Too much of sex scenes and too much of their details made me to say aloud, "oh come on.. please get on with it real soon and tell me something else.." But emotional aspects came out well. real well. Characters stay in mind. There were few unnecessary cinematic scenes but they didn't bother me much.

The dialogues are stylish which is something i personally look for in any novel. The email exchanges and the dialogues are interesting and amusing. Except at one place, I think the novel has got real good pace and is a good page turner. As I told I didn't enjoy the 'too much of sex' content and especially in such great detail, because they kind of started boring me a little. I was more interested in the emotional and psychological aspects of the characters.

The changes in the climate is so rapid in the second half of the novel that it was really difficult to keep up (in the sense, you will be racing inside), especially towards the end. The characters' mood swing takes you along with it. When you finish the novel it leaves you with so much of intense feeling. You definitely feel for the characters.. Anastasia Steele and Christian Grey stays in your mind and will stay for some really long time. That's a success for the novel but I was not feeling like picking up the second book right away. May be I will read it some other time.

The Fifty Shades of Grey is definitely just more than good reads.

-- Paul Arockiam

Puzzling..

It puzzles me to see people who understand and people who are understood having same feelings and thinking.. I feel like left in the center of the maze blind folded.

and then I smile as though I understood the puzzle and come out of it :-)

-- Paul Arockiam

Monday, September 9, 2013

எனக்களிக்கப்பட்ட இத்தேநீர் 
உன்னினைவுகளால் சில்லிட்டிருக்கிறது 

தயக்கம் ஏதுமின்றி 
நான் 
அதை அருந்துகிறேன்

உள்ளுக்குள் சென்று 
அது 
குளிரை விரட்டுகிறது !!

-- பால் ஆரோக்கியம் 

Sunday, September 8, 2013

401 காதல் கவிதைகளின் அறிமுகத்தில்..

401 காதல் கவிதைகள் என்னும் குறுந்தொகை பற்றிய தனது எளிய அறிமுகத்தில் சுஜாதாவின் முன்னுரை நம் இலக்கியங்களைப் பற்றிய பல பரிமாணங்களைத் தாங்கியதாக உள்ளது. பள்ளிக் காலங்களில் மனனம் (மட்டுமே) செய்த 'எட்டுத்தொகை பத்துப்பாட்டுடன் பதினெண்கீழ்க்கணக்கு'கள் சிந்தையில் வந்து போகின்றன. ஏன் பள்ளிகளில் தமிழை ஆர்வமிக்கதாய் போதிக்கும் ஆசிரியர்கள் வாய்க்கப் பெறவில்லை என்னும் குறை மீண்டும் நிழலாடுகிறது.

புத்தகங்களை மதிப்பெண்கள் அடிப்படையில் அணுக வைக்கும், அல்லது போதிக்கும், ஆசிரியர்களுக்கு மத்தியில் அறிவிற்கான அடிப்படையாக போதித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பம். என் அனுபவ கணக்கு அது.

ஒருவேளை இப்போது பள்ளிப் பாட புத்தங்கங்களை எடுத்து வைத்து மீண்டும் முதல் கட்டத்திலிருந்து ஆரம்பித்தலும் கூட சரியான படியாக தான் இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

சாதாரண வாசகர்களை இலக்கியத்தின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த முக்கியமான வெகு கவர்ச்சியான ஊடகம் சுஜாதாவின் பல படைப்புகள். அதில் சிலதுகள் மிகவும் முக்கியமானவை, 401 காதல் கவிதைகள் போல. தமிழைப் பொறுத்தவரை சுஜாதாவின் சாதனைகளில் மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுவது இதை தான்.

-- பால் ஆரோக்கியம் 

Saturday, September 7, 2013

ஒரு புதிர் பற்றி..

ஒரு கவிதை எழுதினேன். புரிந்து கொள்பவர்களுக்கும் புரிந்து கொள்ளப்படுகிறவர்களுக்கும் நடுவில் வலை போட்டு பின்னிக் கொள்ளும் ஒரு புதிர் பற்றி. பிறகு என் தோழியிடம் அக்கவிதையை காண்பித்தேன். அவள் அதை நீண்ட நேரம் படித்தாள். திரும்ப திரும்ப படித்தாள். பிறகு புருவங்களை உயர்த்தினாள்.

"மிகவும் புதிராக இருக்கிறது", என்று திருப்பிக் கொடுத்தாள்.

-- பால் ஆரோக்கியம் 

Saturday, August 17, 2013

தலைப்பிடாதவை - 3

எல்லாவற்றையும் 
யோசித்த பிறகு 
நாம்
எல்லாவற்றையும் 
மறக்க விரும்புகிறோம் 

-- பால் ஆரோக்கியம் 

துணுக்குகள்: கவிதை

எல்லா கவிதைகளும்
எனக்கு
புரிவதில்லை

எனக்கு புரிந்தவை
எல்லாமே
கவிதைகள் தான்..

-- பால் ஆரோக்கியம் 

Friday, August 16, 2013

Does it ?

Does succeeding make a person good ?

Of course, but may not necessarily be in the context that we would  like to talk about :-)

-- Paul Arockiam

தலைப்பிடாதவை - 2

எல்லா மனிதர்களிடமும் 
ஏதேனுமொரு காரணம் 
இருக்கவே செய்கிறது 

தனிமையிலிருக்கும் போது 
​தனக்கு தானே 
புன்னகைத்து கொள்வதற்கும்
கண்ணீர் சிந்தி 
கொஞ்சம் அழுவதற்கும்
-- பால் ஆரோக்கியம்

துணுக்குகள்: கவனம் தேவை


துண்டிப்பதற்கு 
வேறு எதுவும் இல்லாத போது 
உயிர் வேரும் கூட 
அறுக்கப்ப​டக் கூடும்

எதற்கும்
கொஞ்சம் கவனமாக இருங்கள்..!!

-- பால் ஆரோக்கியம் 

நஷ்ட ஈடு

வாலிபம் பேசும் 
வணிக மொழிகளில் 
விழிப் பிதுங்கும் 
முதலீடுகள் 
இலவசங்களிலும் 
கருணை இல்லங்களிலும் 
தன் நஷ்டத்திற்கு
ஈடு கேட்டு நிற்கின்றன 

-- பால் ஆரோக்கியம் 

முரண்

முரண்பாடுகள் 
என்னை 
நிறைய வசீகரிக்கின்றன

என் 
கவிதைகள் பெரும்பாலும்
அங்கிருந்தே
பிறக்கின்றன 

-- பால் ஆரோக்கியம்

Thursday, August 15, 2013

துணுக்குகள்: பலவீனம்

உன் 
பலவீனமே 
நீ 
வெளி உலகிற்கு வர 
பயப்படுகிறாய் என்பது தான் !!

-- பால் ஆரோக்கியம் 

67வது சுதந்திர தினம்

அம்பதாவது சுதந்திர தினத்தை கொண்டாடிய ஞாபகம் அப்படியே மனதில் இருக்கிறது. ஏதோ நேற்று தான் அது நடந்தது போல இருக்கிறது. அதற்குள் 17 வருடங்கள் அவ்வளவு விரைவாக ஓடி விட்டிருக்கிறது.

வேகமாக கீழே நழுவியோடும் இந்த காலத்தை எதிர்த்து எவ்வளவு அடம் பிடித்து குதித்துக் கொண்டிருந்தால் இன்னும் இந்த இடத்திலேயே நாம் இருந்துக் கொண்டிருப்போம். மாற்றங்களை நாம் விரும்புவதேயில்லை. நகர்ந்துக் கொண்டே இருக்கும் கடிகாரத்தின் முட்கள் மாற்றத்திற்கான தேவைகளை நமக்கு நொடிக்கொரு முறை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நாம் அதை காணாததைப் போல நடித்துக் கொண்டே இருக்கிறோம்.

இந்த உலகம் அதன் அழகை இழந்துக் கொண்டிருப்பதை பற்றி நமக்கு எந்த கவலைகளும் இன்னும் ஏற்படவேயில்லை. மாசுகளை துடைப்பதற்கு மனமில்லாதது மட்டுமல்ல, நாம்மேலும் பல குப்பைகளை கொட்டிக் கொண்டிருக்க தயங்குவதேயில்லை.

பூமியின் இந்த வேகமான சுழற்சியில் நம்மை சுற்றியிருந்த எவ்வளவோ கரைந்து, சிதறுண்டு, ஆவியாகி காணாமல் போய் விட்டன.. காணாமல் போய் கொண்டிருக்கின்றன. அது இயல்பான ஒன்றே என்று ஒவ்வொரு இரவிலும் நாம் நமக்கு சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். மாற்றங்களைக் கொண்டு வரவோ, அழகை புதுபிக்கவோ, இருக்கும் அழகை அதன் உன்னதத்தை பாதுகாக்கவோ நாம் முயல்வதேயில்லை. அது நாளைய விடியலில் நடக்கும் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். அந்த நாளைய விடியலுக்காக நாம் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். நேற்றோ, அதன் முந்தைய தினங்களிலோ, ஏன் இன்றும் கூட அது கடந்து கொண்டே இருக்கிறது என்பதை உணர மறுத்து நாம் இன்னமும் காத்திருக்கிறோம். காத்திருப்போம். அவ்வளவு பொறுமை நிரம்பியவர்கள் நாம்.

இன்னும் 8 ஆண்டுகளில் நாம் 75-யை கொண்டாடுவோம்.. இன்னும் 33 ஆண்டுகளில் நூறை எட்டுவோம். அப்போதும் நாமோ அல்லது நமக்கு பிந்தைய சந்ததிகளோ இதே போன்றதொரு பதிவை எழுதிக் கொண்டிருப்பார்கள், ஒருவேளை வேறு மொழிகளில் அல்லது வேறு ஊடங்கங்களில்.

சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்கு நாம் தகுதியானவர்கள் தானா..?

-- பால் ஆரோக்கியம் 

Wednesday, August 14, 2013

தலைப்பிடாதவை - 1

"... அதனால்",
என்று தொடர்ந்தாள்

அதற்குள் 
அவன் 
திரும்பி வர முடியாத 
தொலைவு போயிருந்தான்

-- பால் ஆரோக்கியம் 

Tuesday, August 13, 2013

தலைப்பிடத் தோன்றாதவை

சோர்ந்து போகிறேன் 
காரணங்கள் இல்லாமலேயே 
பிறகு 
காரணங்களைத் 
தேடிச் செல்கிறேன்
மீண்டெழுவதற்காக

இப்போது 
இந்த நிமிடம் 
நான்
காரணங்கள் ஏதுமற்று இருக்கிறேன் !!

-- பால் ஆரோக்கியம் 

Friday, August 9, 2013

சுவடு

எல்லாவற்றையும் 
கவனமாக 
துடைத்து விட்டான்

பின்பு
வந்தார்கள் 
சென்றார்கள் 
எந்த சந்தேகமும் 
வரவேயில்லை அவர்களுக்கு

புன்சிரித்த அவன் 
மீண்டும் தயாரானான் 

-- பால் ஆரோக்கியம் 

Thursday, August 8, 2013

சமரசம்

இயல்பை தாண்டிய நீட்சியுடன் 
என்னனென்னவோ 
பேசினோம்
பேச வந்ததை 
பேசாமல் தவிர்க்க

பின்பு 
பிரிந்து சென்றோம் 
நேரம் இன்னும் வரவில்லையென்று
ரகசிய குரலில்
நமக்குள் சொல்லிக் கொண்டே !!

-- பால் ஆரோக்கியம்

Wednesday, August 7, 2013

தேர்வு

எல்லோரும் 
குடையை கையில் பிடித்தபடி 
நடந்து செல்கின்றனர்..
நான் 
மேகங்களை..!!

-- பால் ஆரோக்கியம்

Tuesday, August 6, 2013

எழுப்புதல்

உன்னை எழுப்பி ஆச்சர்யப்படுத்த
சூடாய் கொஞ்சம் தேநீர் தயாரித்து
கவனமாய் அதில் சர்க்கரை சேர்த்து 
பூனை நடையில் கட்டிலடைந்து
துயில் மீளா உன் முகத்தின் 
மூடிய இமைகளைப் ...

எழுப்பினாய் 
நீ 
என்னை..
தேநீர் 
ஆறிப் போயிருந்தது..!!

-- பால் ஆரோக்கியம் 

Monday, August 5, 2013

கசிந்து வழியும் கேள்விகள்..!

ஏன் இவ்வளவு குழப்பங்கள் ?
இத்தனை மிதமிஞ்சிய பயங்கள் ??
எதற்காக இவையெல்லாம் ???

ஒன்றுமே புரியவில்லை. அப்படி எதை இழந்து விட போகிறோம் வாழ்க்கையில்
?
 பகவத்கீதையில் சொல்வதை போல நாம் எதை கொண்டு வந்தோம் அதை இழப்பதற்கு? ஆனாலும்
​,​
 விடைபெற மறுத்து விட்டகலா நிழலைப் போல இரவு பகலென்று ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த பயத்தையும் குழப்பத்தையும் என்ன செய்ய..?

எவ்வளவு சமாதானம் செய்ய முயன்றாலும் கூட, படிய மறுத்து விரிந்து படரும் இந்த மாய வலையின் பின்னல்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு விழிப்பதிலேயே வாழ்வு முடிந்து விடும் போல இருக்கிறது. 

இல்லை என்றிருந்தவைகளுக்கு எதற்காக உத்திரவாதங்களும் நம்பிக்கைகளும் அளிக்கப்பட வேண்டும்..? எதற்காக பறத்தலின் இன்பநிலை உணர்த்தப்பட வேண்டும்..? புதிய வாசல்களும் புதிய வெளிச்சங்களும் எதற்காக இருப்பதாய் காட்டப்பட்டு
​,​
 பின்னர் இழுத்து மூடி
​ உடைத்து எறிய ​
முடியா சங்கிலிகளின் உதவியுடன் பூட்டப்பட வேண்டும்..? எதற்காக இந்த விளையாட்டுகள்..? எப்படி மனம் வருகிறது..? என்ன தான் நடக்கிறது இங்கே..? 

​'​
விளையாட்டுப் பொருளாகிறோம்
​​'
 என்று தெரிந்தாலும் கூட எதற்காக நம்முடைய தற்காப்பு உணர்வுகள் மழுங்கி கிடக்கின்றன? விடைகள் எதுவும் இல்லையென்று தெரிந்தும் கூட வெற்று வெளியில் யாரிடம் நாம் உரத்த குரல்களில் கேள்விகளை கேட்டுக் கொண்டு நம்முடைய சக்திகளை விரையமாக்கிக் கொண்டிருக்கிறோம்..?

அன்பின் இறுதி ஊர்வலங்களில், நம்பிக்கையின் காயம்பட்ட முதுகுகளில், பாசத்தின் அறுபட்ட குரல்வளைகளில், காதலின் வெட்டுபட்ட சிறகுகளில் மிதமிஞ்சிய கேள்விகளே நிரம்பி வழிகின்றன. 

கேள்விகள்.. 
கேள்விகள்.. 
கேள்விகள்.. 
எங்கும் கேள்விகள்.. 

ஆதங்கத்தின் வெகுண்ட சீற்றங்களும், அழுகையின் நிலைகொள்ள முடியா தடுமாற்றங்களும், கோபத்தின் தீராத தாகங்களும், விரக்தியின் வெளுத்த நிறங்களும், உடைபட்ட இதயத்தின் ரத்த சிதறல்களுமான கேள்விகள்.. விடைகள் இல்லையென்று தெரிந்தும் கூட புதைய மறுத்து மேலெழுந்து வெடிக்கும் கேள்விகள்.

ஏன் ? 
எதற்காக நான் ?
​?

விடைகளை செவி கொடுத்து கேட்க கூட இயலாத தவிப்புகளினூடே கசிந்து வழிந்த வண்ணமே இருக்கின்றன இந்த கேள்விகள்.

-- பால் ஆரோக்கியம்

Sunday, August 4, 2013

Happy Friendship Day !!

நான் 
இருக்கிறேன் இன்னமும்..
நீங்களும்
இருக்கிறீர்கள் இன்னமும்..

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!

-- பால் ஆரோக்கியம் 

Sunday, January 13, 2013

Those who _always_ say, "sorry, I don't have balance, so I gave miss call" !!

I don't understand why people give miss call on purpose and expect a call back even though they can very well afford to call people and talk.

Its not that they are poorly placed or have very low income or searching for job (with financial constrains) or starving for food. Even though they are well placed and earn lot more than what is required for their survival,  they still give miss call and expect others to call them so that they can save money. I understand those who might have financial constraints and encourage them to give me miss call until perhaps they get well placed. But I couldn't tolerate those who earn well and still give miss call..

Most of the time, the kind of excuse they try to give is, "sorry, I don't have balance, thats why".. When they say that, I tend to ask, "oh yeah.. there is something called 'bank balance' and you are supposed to transfer some from there to your phone".

Ladies and gentlemen (?), if you can buy pizza, can travel in auto-rickshaw or cab, can book bus or train before your journey, can eat in restaurants now and then, spend thousands in buying dresses, have sufficient bank balance at the end of the month, etc etc, you can very well buy talk time also instead of giving miss call and planning to buy a pizza in the money you save by making others spend for you.. After all the other person is also starving and could have a pizza 'at least' on his own money..

And by the way, I have seen few people who always make phone call by spending their money irrespective of me asking them to give miss call because their financial position is very poor.. May be they could be your inspiration !!

-- Paul Arockiam

Friday, January 11, 2013

Still remaining close..!!

It has been more than a year since I talked to someone who had been one of my close friends.

Thinking about it now, I tend to feel that if we will talk again now, we would still talk till the sun rises, laugh till our stomach hurts, walk till our legs faint, drink till the last drop in the cups (of tea).. The frequency of talks or the gap that gets in-between because of the 'limitations' (let me call all the 'ego', 'fights', 'quarrels', 'misunderstandings' etc, as limitations) of practical life doesn't really affect how you feel about someone..!!

We always know what I say is true in love (do we??), but it is true in friendships too :)

Cheers !! (for the ones who still remain close, irrespective of how far they might have gone!!) :)

-- Paul Arockiam