Friday, April 18, 2014

[ அறிவிப்பு ] நி.கு.க. பற்றி..

நி.கு.க. என்னும் தலைப்பில் இனி அவ்வப்போது எழுதலாம் என்று இருக்கிறேன். 'அதென்ன நி.கு.க..?' என்கிறீர்களா? "நிகழ்வுகளின் குறுங்தைகள்". நடந்த, நடந்துக் கொண்டிருக்கின்ற, நடக்க போகின்ற நிகழ்வுகளில் நிறைய நிஜத்தையும் கொஞ்சம் கற்பனையையும் கலந்து எழுத இருப்பதால் அவை அப்பெயர் பெறுகின்றன.

முதலில் அவ்வாறு கதைகள் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதாக உத்தேசம். கைவசம் ஓரிரண்டு எழுதியும், மற்ற சில எழுத தயாராக எண்ணங்களிலும் இருக்கின்றன. எனது Blog-யிலேயே இக்கதைகளை எழுத முடிவெடுத்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று எழுத்துலகில் என் கொடி இன்னும்கட்டபடாததால் [ அரசியல் அசிங்கங்கள் காரணமாகமி குதியாகிவிட்டப் போராட்டம், பின்னடைவின் சோர்வு  மற்றும் இன்ன பிறவற்றை தவிர்க்க விரும்பிதன் காரணமாக பெரும் முயற்சி எதுவும் எடுக்கவில்லை -- தற்போதைக்கு ]. இரண்டாவது நான் எழுதுவனவற்றை இலவசமாக பகிர விரும்பியதால்.

பிராத்தனை 
சாப்பிட்டு நாளாச்சு 
மச்சினிச்சி கையால் ஒரு காபி 
வாழை இலை 

என்னும் தலைப்புகளில் எழுத ஆரம்பித்து விட்டேன். பகிர்கிறேன் நேரம் சரியாக வரும் போது.

பால் ஆரோக்கியம்.
18-ஏப்ரல்-2014.

No comments:

Post a Comment